ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 4



பாகம் : 7
ஜெருசலத்தின் ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் எகிப்தி லும், ஹரம் மற்றும் பானியஸை வெல்வதில் தீவிரம் காட்டிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நூருத்தீன் ஏறக்குறைய எகிப்தை வென்றார். இதன் விளைவாக அல் மாரிக்குக்கு அச்சம் ஏற்பட்டு தளபதி ஷிர்குஹுடன் போர் ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரு படைகளும் எகிப்திலிருந்து விலக வேண்டும் என்று முடிவாகியது. இதனால் நூருத்தீனுக்கும் சிலுவைப் போராளிகளுக்குமான முதல் கட்ட போர் (ஃப்ராங்க்ஸ்) எகிப்தில் தவிர்க்கப்பட்டது. ஃப்ராங்க்சின் சிலுவைப் போராளிகளுக்கும், சிரியாவை ஆண்ட நூருத்தீனுக்கும் நிலையில்லாமல் ஷியா பிரிவினர் ஆண்டு வரும் எகிப்தைப் பிடிப்பதில் ஆர்வமாகியது.
இந்த ஆர்வம் ஷிர்குஹுக்கு எகிப்தில் நுழைவதற்கு வாய்ப்பாகவும், சிலுவைப் போராளிகளை எதிர்க்க எகிப்து சிறந்த இடம் என்றும் துல்லியமாக அறிந்து கொண்டார். இதை நூருத்தீனிடம் எளிமையாக்கி விளக்கி எகிப்தை கைப்பற்ற அவரின் அனுமதி வேண்டினார். ஷிர்குஹின் வேண்டுதலை ஏற்று நூருத்தீன் இரண்டாம் முறையாக 562 A.H. ல் ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் மீண்டும் எகிப்துக்கு அனுப்பினார்.
சிரியப் படைகள் எகிப்தை முன்னோக்குவதை அறிந்த மந்திரி ஷவீர் சிலுவைப் போராளியின் உதவியை நாட அவர்கள் சேர்ந்து போரிட ஒப்புக்கொண்டார்கள். இரு இராணுவமும் மேற்புர எகிப்தில் ‘முனியா’ என்ற இடத்தில் சந்தித்தன. இதில் ஷிர்குஹ், ஸலாவுத்தீன் தலைமையில் சிரியா இராணுவம் வெற்றி பெற்றது. இப்போரில் ஸலாவு தீனின் தன்னிகரற்ற வலிமையும், வீரமும் வெளிப்பட்டது. உடன் சிரிய இராணுவம் தடையின்றி வடக்கையும், துறை முக நகரமான அலக்ஸாண்டிரியாவையும் வென்றது. ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவின் ஆட்சியாளராக ஸலாவுத்தீனை நியமித்தார். இதுவே ஸலாவுத்தீன் முதன்முறையாக பொறுப்பான ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றார். விதி அவருக்கு  வீரத்தையும், திறமையையும், புத்திக்கூர்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. ஷிர்குஹ் அல் ஃபுஸ்தத் மற்றும் கெய்ரோவில் கவனத்தை திசை திருப்பிய போது, சிலுவைப் போராளிகள் பைசாந் திய இராணுவ உதவியுடன் அலெக்ஸாண்டிரியாவை கடல் மற்றும் நில வழியாக முற்றுகையிட்டனர்.
பாகம் : 8
அலெக்ஸாண்டிரியாவின் மக்கள் எதிரிகளின் சண்டையி லிருந்து ஏறக்குறைய தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைய தயாராயிருந்தனர். ஆனால் ஸலாவுத்தீன் ஷிர்குஹ் கெய்ரோவிலிருந்து வந்து தன்னுடன் இணையும் வரை தாக்குப்பிடித்து போரை நீட்டித்தார். விளைவு இரு படைகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு எகிப்தை விட்டு விலகுவதாக முடிவாகியது.
ஆனால் ஜெருசலத்தின் ஆட்சியாளர் அல் மாரிக் ஒப்பந்தத்தை முறித்து குறிப்பிட்ட எண்ணிக்கையினாலான படையை வாபஸ் வாங்காமல் சிரியப் படைகள் வெளியேறியவுடன் எகிப்தை ஆக்கிரமிக்க உத்தேசித்தார். அதுபோலவே சிரிய படைகள் வெளியேறியவுடன் விரைந்து தயாராகி பெரும்பான்மையான மக்களைக் கொன்று புல்பைஸ் என்னும் நகரை கைப்பற்றினார். பின் அல் ஃபுஸ்தத் நகரை ஆக்கிரமிக்க முன்னோக்கினார். இது கூட்டாளி ஷவீருக்கு தெரிய வந்ததால் அவர் அல் ஃபுஸ்தத்தை நாற்பத்தி நான்கு நாட்கள் தீ மூட்டி எறியச் செய்தார். இதனால் சிலுவைப் போராளிகள் மாற்றாக கெய்ரோவை முற்றுகையிட்டனர். ஷவீர் மீண்டும் நூருத்தீனின் உதவியை நாட சிரிய இராணுவம் தன்னுடன் இணையும் வரை ஷவீர் சிலுவைப் போராளிகளுடன் பேச்சுவார்த்தையை நீட்டித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நூருத்தீன் மீண்டும் மூன்றாம் முறையாக ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் அனுப்பி எகிப்தை கைப்பற்றினார். அவர்கள் எகிப்து சென்று ஷவிர் இராணுவத்துடன் இணைந்தனர். இதனால் சிலுவைப் போராளிகள் சண்டையின்றி வெளியேறினர். சித்தப்பா ஷிர்குஹ் கெய்ரோவில் நுழைந்தவுடன் மக்கள் அதை நல்ல சகுணமாக நினைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஃபாத்திமிட் கலிஃபா அல் அதித் தாராள மனதுடன்  ஷிர்குஹை வரவேற்றுக் கொண்டார். 564 A.H. ல் ஷவீர் அஸ் ஸாதி சதி செய்து கொலை செய்யப்பட்டார். அல் அதித் சித்தப்பா ஷிர்குஹை ஃபாத்திமிட் கலீஃபாவாக பதவியில் அமர்த்தினார். ஆனால், இரண்டு மாதத்திலேயே அவர் மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக