ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 6



பாகம் : 11
வெளிப்புற சூழ்ச்சிகளை முறியடித்தல்
ஸலாவுத்தீன் எகிப்தின் ஆட்சியை ஏற்ற பிறகு, ஃப்ராங்க்ஸ் இவரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. மக்கள் ஸலாவுத்தீன் மீது வைத்திருக்கும் அன்பும், தங்கள் நாட்டின் மீது வைத்துள்ள பாசமும் ஃபராங்க்ஸுக்கு எப்படியாவதாவது ஸலாவுத்தீனை வெற்றி கொண்டு விரட்ட தயாராகி காத்திருந்தது.
ஃப்ராங்க்ஸ் முதல் காரியமாக, நமது ஜெருசலம் கை நழுவி போய் விடுமுன் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஸ்பெயினுக்கும், சிஸிலிக்கும் செய்தி அனுப்பியது. அவர்கள்  பாதிரியார்களையும், மதபோதகர் களையும் ஆள்பலம், ஆயுதங்கள் மற்றும் பெரும் பணத் துடன் ஒரு படையை அனுப்பினர். அந்த படை 564 A.H. ல் டமெய்ட்டாவை முற்றுகையிட்டனர். ஸலாவுத்தீன் வெடி மருந்துகள், ஆயுதங்கள் அடங்கிய படையொன்றை நைல் நதி வழியாக டமெய்ட்டாவுக்கு அனுப்பினார். மேலும் ஃப்ராங்க்ஸை விரட்ட நூருத்தீனிடம் உதவி கோரினார்.
நூருத்தீன் இசைந்து பெரும் படைப் பிரிவை எகிப்துக்கு அனுப்பி, தானும் சொந்த படையுடன் லீவண்ட் மற்றும் பாலஸ்தீனின் சிலுவைப் போராளிகளின் முக்கிய தளங்களை நோக்கி படை எடுத்தார். நூருத்தீனின் படை எகிப்து வருவதை அறிந்த ஃப்ராங்க்ஸ் ஏமாற்றத்துடன் தன் படைகளை பின் வாங்கி ஐம்பது நாட்களாக டமெய்ட்டா வில் தங்கியது. பின் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 569 A.H. ல் சிஸிலியிலிருந்து வந்த சிலுவைப் படைகளுடன் ஃப்ராங்க்ஸ் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியாவை தாக்கியது. அவர்களின் கடற்படை 15 ஆயிரம் குதிரைகள், 30 ஆயிரம் போர் வீரர்கள், எண்ணற்ற குதிரை மற்றும் காலாட்படை வீரர்கள், சக்தி வாய்ந்த ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், படகுகள், சிதைக்கும் இயந்திரங்கள் என்று வந்திரங்கியது. அவர்கள் கரை அடைந்தவுடன் 7 முஸ்லீம் வீரர்களைக் கொன்று, சில படகுகளை மூழ்கடித்து 300 கூடாரங்களைத் தீயிட்டு அலெக் ஸாண்டிரியாவில் கால் பதித்தனர்.
அப்போது ஸலாவுத்தீன் ஃபாகுஸ் என்னும் நகரத்தில் இருந்தார். அலெக்ஸாண்டிரியாவை எதிரிகள் சூழ்ந்துள்ள னர் என்பது மூன்று நாட்கள் கழிந்த பின்பு தான் அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் நிறைந்த மாபெரும் படையொன்றை அனுப்பி ஏராளமான எதிரிகளைக் கொன்றும், அவர்களின் படகுகளை மூழ்கடித்தும், அவர்களின் ஆயுதங்கள், பொருட்களைக் கைப்பற்றி வெற்றி கொண்டார். தப்பிய சிலுவை வீரர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் நாடு திரும்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் சிலுவைப் போராளிகளிடமிருந்து இரண்டு முறை அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து எகிப்தை காப்பாற்றினார். இது சிலுவைப் போராளிகளுக்கு அவமானத்தையும், என்றிருந்தாலும்  சிலுவைப் போராளி களின் கழுத்துக்கு இவர் தான் கத்தி என்பதையும் தெளிவாக உணர்த்தியது. மேலும், இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களை எதிர்ப்பவர்களை சிங்கம் போல் சீறிட்டு தடுப்பவராகவும் உலகுக்கு காட்டியது.
பாகம் : 12
அப்பாஸிட் கலீஃபாவின் பேரில் மதபோதனை
உள் நாட்டு, வெளி நாட்டு சதி திட்டங்களை முறியடித்து நிலையான ஆட்சியை அமைத்த பின் அவர் அடுத்த நடவடிக்கையாக சுதந்திரத்திற்கான வழியை நாடினார். மிகைப் படுத்தி கூற வேண்டுமென்றால் எகிப்தியர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடும்பத்தினரின் ஷியா வழி முறையை கடை பிடித்து வந்தனர். ஸலாவுத்தீன் அவர்களை உலகில் பெரும் பான்மையோரின் வழிமுறையான சுன்னி பிரிவு வழிமுறையில் அழைத்தார். மக்கள் நேர் வழியின் பால் வருவதற்காக அவர் புகழ் பெற்ற நஸரியா, கமிலியா என்று இரு மத கல்விக் கூடங்களை அமைத்தார். நூருத்தீன் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளை ஃபாத்திமிட் கலீஃபாவின் பெயரை விடுத்து அப்பாசிட் கலீஃபாவின் பெயரில் நடத்த ஆலோசனை கூறினார். இதை நூருத்தீன் மட்டுமின்றி ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகமும் வரவேற்றது. ஆனால் ஸலாவுத்தீன் மேலும் சில காலங்கள் அம் மக்களுக்கு சுன்னி வழிமுறையை நன்றாக தெரியப் படுத்திய பிறகு போதனை முறையை மாற்றலாம் என்று நினைத்தார்.
கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதித் உடல் நலம் குன்றிய போது, நூருத்தீனின் வற்புறுத்தலின் பேரில் ஸலாவுத்தீன் தனது ஆலோசகர்களை கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார். ஆலோசகர்களில் அரபியரல்லாத மத போதகரான அல் அமீர் அல் ஆலிம் என்பவரிடம் பொறுப்பு விடப்பட்டது. முதல் முறையாக அவர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு பதிலாக அப்பாசிட் கலீஃபாவின் பேரில் போதனை நிகழ்த்தினார். ஸலாவுத்தீன் தனது ஆதரவாளர்களிடம் இதை நோய்வாய்ப் பட்டுள்ள ஃபாத்திமிட் கலீஃபாவுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும், ஃபாத்திமிட் கலீஃபா உடல் நலம் தேறினால் அவர் தானாகவே புரிந்து கொள்ளட்டும் ஒரு வேளை இறந்து போனால் அது அவருக்கு தெரியாமலே போகட்டும்” என்று கூறினார். ஆம் இது ஸலாவுத்தீனின் நல்ல உள்ளம், நன்றாக வாழ்ந்த ஒரு மன்னன் தன் பெயர் போதனையில் நீக்கப்பட்டு விட்டது என்று மேலும் வேதனை அடைய வேண்டாம் என்ற அவரின் கருணை. அப்பாசிட் கலீஃபாவின் பேரில் துவங்கிய வெள்ளிக்கிழமை போதனை உரையை மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். கடைசி ஃபாத்திமிட் கலீஃபா அல் அதீதி 567 A.H. (1171 C.E.) ல் காலமாக அத்துடன் ஃபாத்திமிட்களின் ஆட்சி முடிவுற்றது.
அல் அதீதின் இறப்பிற்கு பின்பு ஸலாவுத்தீன் எகிப்தின் சிறந்த தலைவரானார். மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்தார். அல் அதீதின் குடும்பத்தினரை நன்கு அக்கறையுடனும், கருணையுடனும் கவனித்துக் கொண்டார்.
நூருத்தீனுடனான செயல்பாடு
ஸலாவுத்தீன் நூருத்தீனுடனான உறவை மிகவும் விரும்பத்தக்க அளவில் வைத்துக் கொண்டார். ஏனென்றால் நூருத்தீனின் தந்தை இமாதத்தீன் சங்கி தான் ஸலாவுத்தீன் தந்தைக்கும், சித்தப்பா ஷிர்குஹுக்கும் புதிய வாழ்க்கையை தந்தவர். தன் மீதும், தனது தந்தையின் சகோதரர் ஷிர்குஹ் மீதும் சிறு வயதிலிருந்து  நூருத் தீன் அவர்கள் காட்டிய நட்பையும் நினைவு கூர்ந்து நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்டார். மிக விரைவில் தொடர்ந்த வெள்ளிக்கிழமை தொழுகையில் அப்பாசிட் கலீஃபாவுக்கு பதில் நூருத்தீனின் பெயரில் உரை துவங்க உத்தரவிட்டார். நூருத்தீனின் பெயர் தாங்கிய நாணயம் வெளியிட்டார். அரண்மனை பொக்கிஷத் திலிருந்து விலை மதிப்பில்லாத பரிசுகளை அளித்து தன் இராஜ விசுவாசத்தை வெளிப் படுத்தினார்.
இந்த சூழ்நிலையில் சில இராணுவ தளபதிகளும், நம்பிக்கை துரோகிகளும் ஸலாவுத்தீனின் கீழ்படியாமல் எகிப்தில் வாழ மறுத்தனர். அவர்கள் ஸலாவுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே அபிப்பிராய பேதத்தை விதைத்து வெறுப்புத் தீயையும் பகையையும் வளர்த்தனர். சில காரியங்களில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி ஸலாமுத்தீனுக்கும், நூருத்தீனுக்கும் இடையே முரண்பாடு களினாலும், உத்தரவை மீறுவதாலும் கிடைத்தது. சில நேர்மை யாளர்கள் இருவருக்கும் இடையே வளரும் விரோதத்தை எச்சரித் தனர். இந்த பகையால் ஒளிந்திருக்கும் எதிரிக்கு தான் நன்மையை விளைவிக்கும் என அறிந்திருந்தனர். மிகக்குறிகிய கால இடை வெளியில் அவர்கள் இருவருக்குமிடையேயான நட்பு, நம்பிக்கை, உண்மை பாதுகாக்கப்பட்டது. நூருத்தீன் 569 A.H. (1173 C.E.) ல் இறக்கும் வரை ஸலாவுத்தீன் அவருடனான விசுவாசத்தில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். அவரின் முன்னேற் றத்திற்கு ஏற்றவாறு எதிரிகளும் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

ஸலாவுத்தீன் வரலாறு 5



பாகம் : 9
எகிப்தில் ஸலாவுத்தீன்
சித்தப்பா அஸாத்தத்தீன் ஷிர்குஹ் இறந்த பிறகு ஸலாவுத்தீன் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தார். ஃபாத்திமிட் கலிஃபா அல் அதித் (ஷியா பிரிவு ) இளைய வயதுடைய யூஸுஃப் ஸலாவுத்தீன் அல் அய்யூபை மூத்த தளபதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் முன்னிலையில் எகிப்தின் ஆட்சியாளராக நியமித்தார். ஷியா பிரிவின் ஃபாத்திமிட் அல் அதிதி இளம் வயது ஸலாவுத்தீனை பதவியில் அமர்த்துவதால் அவர் தன் அழைப்புக்கெல்லாம் தலை சாய்ப்பார் என்றும், தன் கட்டளைக்கெல்லாம் இசைந்து போவார் என்றும் கருதினார். இஸ்லாத்தின் வரலாற்றை சிறுவயதிலிருந்து சிறந்த ஞானிகளிடமிருந்து பயின்றதால் அவருக்கு ஷியாக்களின் உண்மை கொள்கை தெரியும். விதி வேறு விதமாக இருந்தது. இறைவனால் தீர்மானிக்கப்பட்டு நம்மால் விதி என்று அழைக்கப்படுவது நமக்கு தீமை செய்யும் அதே நேரத்தில் எதிராளிக்கு நன்மை செய்யும் என்பதை மறந்து விடுகின்றோம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போது ஸலாவுத்தீனுக்கு முப்பத்தி இரண்டு வயது, நூருத்தீனுடனும், ஷிர்குஹுடனும் இணைந்து போர்களை நடத்தியதால் சிறந்த அனுபவங் களைப் பெற்று அதுவே அவர் மேன்மேலும் உயர்வடை வதற்க்கு காரணமாகியது. ஸலாவுத்தீன் எகிப்து மக்களை அன்புடனும், பொருளுதவிகள் கொடுத்தும் நல்ல முறையில் நடத்தினார். எகிப்து இளவரசர்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு அவர்களை நெருங்கி உறவாடும் நிலையில் வைத்துக் கொண்டார். மேலும் டமெய்டா, காஸா, அக்காபா போன்ற இடங்களை வென்று சுதந்திர பிரதேசமாக்கி பிரபலமானார். அக்காபா துறை முகத்தை செங்கடலுக்கு நுழைவாயிலாக்கி எகிப்தியர்கள் மக்கா புனித பயணம் மேற்கொள்ள வழி வகுத்தார். இது எகிப்து மக்களிடையே ஸலாவுத்தீனுக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்தது. மேலும் எகிப்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஷியா கொள்கையை விட்டு சுன்னி வழி முறையில் ஸலாவுத்தீனுடன் இணைந்து அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்தனர். இளம் வயது அதுவும் வெளி நாட்டவர் மிக வேகமாக முன்னேறி அதுவும் ஷியா கொள்கையை விரட்டுவது கண்டு அடிப்படை ஷியா ஃபாத்திமிட்கள் என்ன விலை கொடுத்தேனும் ஸலாவுத் தீனை எகிப்தை விட்டு விரட்ட திட்டம் தீட்டினர்.
நஜாஹ்வின் நயவஞ்சக திட்டம்
அதில் குறிப்பிடத்தக்கவர் நஜாஹ் மற்றும் ஃபாத்திமிட் கலிஃபாவுக்கு நம்பிக்கையான இமாரா அல் யமனி, கன்ஸ் அத் தௌலா ஆகியோர். 564 A.H. ல் இறுதி ஃபாத்திமிட் கலிஃபா அல் அதீதின் அரண்மனையைச் சேர்ந்த நஜாஹ் என்னும் செல்வாக்கான அரவாணி எகிப்தில் ஒரு குழுவை உருவாக்கி சிலுவைப் போராளிகளான ஃப்ராங்க்ஸுடன் இணைந்து ஸலாவுத்தீனை எதிர்த்தான். அரவானி நஜாஹ் சிலுவைப் போராளிகளை முன்னோக்கி வரச்செய்து அவர்கள் ஸலாவுத்தீனுடன் போரிடும் போது தான் பின்னிருந்து தாக்குவதாகவும் திட்டமிட்டு கடிதம் ஒன்றை எழுதி அதை ஒரு ஒற்றன் மூலம் புது ஷூவுக்குள் வைத்து ஃப்ராங்க்ஸுக்கு செய்தி அனுப்பினான். விதி அது தவறு தலாக ஸலாவுத்தீனின் ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்க அவர் உடனடியாக ஸலாவுத்தீனிடம் சேர்ப்பித்தார். அவர் நஜாஹ்வை தண்டிப்பதிலிருந்தும் கடிதம் உரியவரிடம் சேர்ந்து தன்னை அவர்கள் எதிர்க்க காத்திருந்தார். தன் உத்தரவுகளையும் தாமதப்படுத்தினார்.
நஜாஹ் தன் திட்டத்துடன் கெய்ரோவிற்கு வெளியே உள்ள தனது அரண்மனையை அடைந்தவுடன் ஸலாவுத்தீன் ஒரு படைக் குழுவை அனுப்பி நஜாஹ்வை கொல்ல உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கலீஃபா அல் அதீதின் சூடானிய வீரர்கள் 50,000 பேர் அடங்கிய படை ஸலாவுத்தீன் இராணுவத்தினருடன் இரண்டு நாட்கள் போரிட்டனர். ஸலாவுத்தீன் அவர்களை வென்று நஜாஹ் மற்றும் சூடானிய படைகளை விரட்டினார். சூடானியர் களின் சூழ்ச்சி மட்டுமில்லாமல் ஃபாத்திமிட் இளவரசர் மூட்டிய போர் தீயையும் விரட்டினார்.
பாகம் : 10
இமாராஹ் அல் யமானியின் சூழ்ச்சி
ஸலாவுத்தீனுக்கு எதிராக மிகப்பெரிய குழப்பத்தை சரித்திரத்தில் விளைவித்தவன் காலத்தால் நன்கு பதியப்பட்ட இமாராஹ் அல் யமானி. இவன் பலமான ஆதரவு கூட்டத்தை கெய்ரோவில் கூட்டி ஃபாத்திமிட்களின் கடைசி மன்னன் அல் அதீதின் ஒரு மகனின் தலைமையில் ஸலாவுத்தீனை விரட்டி விட்டு மீண்டும் ஷியா பிரிவின் ஃபாத்திமிட் ஆட்சியைக் கொண்டு வர திட்டம் தீட்டினான். அந்த செய்தியை உடனே ஃப்ராங்க்ஸுக்கு தெரியப்படுத்தி தனக்கு ஒத்துழைப்பு தர வேண்டினான். மிக குரோத எண்ணமும், வெறுக்கத்தக்க குணம் கொண்டவர்களும் இமாராஹ்வுடன் இணைந்தனர்.
அவர்களிலிருந்து ஒரு குழப்பவாதி ஸைன் அத்தீன் இப்னு நஜா என்பவன் பிரிந்து வந்து ஸலாவுத்தீனிடம் சேர்ந்து பரிசும், நல்ல பெயரும் வாங்க வேண்டும் என்று நம்பிக்கை துரோகம் செய்யும் விதமாக ஸலாவுத்தீனுக்கு காட்டிக் கொடுத்தான். ஸலாவுத்தீன் அவனையும் கூட்டாளிகளையும் கொன்று நாட்டில் கேடு விளைவிப் பவர்களுக்கு இது தான் பாடம் என்று உதாரணமாக்கினார். இது நடந்தது 569 A.H.
கன்ஸ் அத் தௌலாஹ்வின் சூழ்ச்சி
570 A.H. ல் மீண்டும் ஓரு குழப்பம் அஸ்வான் மற்றும் குஸ் பகுதியில் தோன்றியது. இதன் காரணகர்த்தா அஸ்வான் பகுதியை ஆண்ட கன்ஸ் அத் தௌலாஹ். இவன் அரபியர் கள், சூடானியர்களை ஒன்று கூட்டி ஃபாத்திமிட் ஆட்சியை மீண்டும் கொண்டு வர உத்தேசித்து நேரடியாக கெய்ரோ விற்குள் நுழைந்தான்.அதை நிறை வேற்றுவதற்காக பெரும் பணம் செலவு செய்தான். மேலும் ஒரு குழுவை இணைத்துக் கொண்டு பத்து ஸலாவுத்தீன் ஆதரவு இளவரசர்களைக் கொன்றான். மேலும் துட் என்னும் கிராமத்திலிருந்து வந்த கியாஸ் இப்னு ஷாதி என்பவன் குஸ் பகுதியின் வளத்தை சூறையாடினான். ஸலாவுத்தீன் தன் சகோதரர் அல் மாலிக் அல் ஆதில் மூலம் பெரும் படை அனுப்பி கியாஸ் இப்னு ஷாதியைக் கொன்று அவன் படைகளை சிதறடித்தார். பின் அல் மாலிக் அல் ஆதில் கன்ஸ் அத் தௌலாஹ்வின் பெரும் படைகளைக் கொன்று தப்பிச் சென்ற தௌலாஹ்வையும் கொன்று கெய்ரோ திரும்பினார். இவைகள் எல்லாம் ஸலாவுத்தீன் குழப்பங் களை வேரறுத்து, நேர்மையற்றவர்களையும், அநீதியாளர் களையும், சூழ்ச்சியாளர்களையும் களையெடுத்து தன் புத்திசாலிதனத்தையும், ஆர்வத்தையும் அரசியல் அரங்கில் காட்டச் செய்தது.

ஸலாவுத்தீன் வரலாறு 4



பாகம் : 7
ஜெருசலத்தின் ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் எகிப்தி லும், ஹரம் மற்றும் பானியஸை வெல்வதில் தீவிரம் காட்டிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நூருத்தீன் ஏறக்குறைய எகிப்தை வென்றார். இதன் விளைவாக அல் மாரிக்குக்கு அச்சம் ஏற்பட்டு தளபதி ஷிர்குஹுடன் போர் ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரு படைகளும் எகிப்திலிருந்து விலக வேண்டும் என்று முடிவாகியது. இதனால் நூருத்தீனுக்கும் சிலுவைப் போராளிகளுக்குமான முதல் கட்ட போர் (ஃப்ராங்க்ஸ்) எகிப்தில் தவிர்க்கப்பட்டது. ஃப்ராங்க்சின் சிலுவைப் போராளிகளுக்கும், சிரியாவை ஆண்ட நூருத்தீனுக்கும் நிலையில்லாமல் ஷியா பிரிவினர் ஆண்டு வரும் எகிப்தைப் பிடிப்பதில் ஆர்வமாகியது.
இந்த ஆர்வம் ஷிர்குஹுக்கு எகிப்தில் நுழைவதற்கு வாய்ப்பாகவும், சிலுவைப் போராளிகளை எதிர்க்க எகிப்து சிறந்த இடம் என்றும் துல்லியமாக அறிந்து கொண்டார். இதை நூருத்தீனிடம் எளிமையாக்கி விளக்கி எகிப்தை கைப்பற்ற அவரின் அனுமதி வேண்டினார். ஷிர்குஹின் வேண்டுதலை ஏற்று நூருத்தீன் இரண்டாம் முறையாக 562 A.H. ல் ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் மீண்டும் எகிப்துக்கு அனுப்பினார்.
சிரியப் படைகள் எகிப்தை முன்னோக்குவதை அறிந்த மந்திரி ஷவீர் சிலுவைப் போராளியின் உதவியை நாட அவர்கள் சேர்ந்து போரிட ஒப்புக்கொண்டார்கள். இரு இராணுவமும் மேற்புர எகிப்தில் ‘முனியா’ என்ற இடத்தில் சந்தித்தன. இதில் ஷிர்குஹ், ஸலாவுத்தீன் தலைமையில் சிரியா இராணுவம் வெற்றி பெற்றது. இப்போரில் ஸலாவு தீனின் தன்னிகரற்ற வலிமையும், வீரமும் வெளிப்பட்டது. உடன் சிரிய இராணுவம் தடையின்றி வடக்கையும், துறை முக நகரமான அலக்ஸாண்டிரியாவையும் வென்றது. ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவின் ஆட்சியாளராக ஸலாவுத்தீனை நியமித்தார். இதுவே ஸலாவுத்தீன் முதன்முறையாக பொறுப்பான ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றார். விதி அவருக்கு  வீரத்தையும், திறமையையும், புத்திக்கூர்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. ஷிர்குஹ் அல் ஃபுஸ்தத் மற்றும் கெய்ரோவில் கவனத்தை திசை திருப்பிய போது, சிலுவைப் போராளிகள் பைசாந் திய இராணுவ உதவியுடன் அலெக்ஸாண்டிரியாவை கடல் மற்றும் நில வழியாக முற்றுகையிட்டனர்.
பாகம் : 8
அலெக்ஸாண்டிரியாவின் மக்கள் எதிரிகளின் சண்டையி லிருந்து ஏறக்குறைய தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைய தயாராயிருந்தனர். ஆனால் ஸலாவுத்தீன் ஷிர்குஹ் கெய்ரோவிலிருந்து வந்து தன்னுடன் இணையும் வரை தாக்குப்பிடித்து போரை நீட்டித்தார். விளைவு இரு படைகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு எகிப்தை விட்டு விலகுவதாக முடிவாகியது.
ஆனால் ஜெருசலத்தின் ஆட்சியாளர் அல் மாரிக் ஒப்பந்தத்தை முறித்து குறிப்பிட்ட எண்ணிக்கையினாலான படையை வாபஸ் வாங்காமல் சிரியப் படைகள் வெளியேறியவுடன் எகிப்தை ஆக்கிரமிக்க உத்தேசித்தார். அதுபோலவே சிரிய படைகள் வெளியேறியவுடன் விரைந்து தயாராகி பெரும்பான்மையான மக்களைக் கொன்று புல்பைஸ் என்னும் நகரை கைப்பற்றினார். பின் அல் ஃபுஸ்தத் நகரை ஆக்கிரமிக்க முன்னோக்கினார். இது கூட்டாளி ஷவீருக்கு தெரிய வந்ததால் அவர் அல் ஃபுஸ்தத்தை நாற்பத்தி நான்கு நாட்கள் தீ மூட்டி எறியச் செய்தார். இதனால் சிலுவைப் போராளிகள் மாற்றாக கெய்ரோவை முற்றுகையிட்டனர். ஷவீர் மீண்டும் நூருத்தீனின் உதவியை நாட சிரிய இராணுவம் தன்னுடன் இணையும் வரை ஷவீர் சிலுவைப் போராளிகளுடன் பேச்சுவார்த்தையை நீட்டித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நூருத்தீன் மீண்டும் மூன்றாம் முறையாக ஷிர்குஹையும், ஸலாவுத்தீனையும் அனுப்பி எகிப்தை கைப்பற்றினார். அவர்கள் எகிப்து சென்று ஷவிர் இராணுவத்துடன் இணைந்தனர். இதனால் சிலுவைப் போராளிகள் சண்டையின்றி வெளியேறினர். சித்தப்பா ஷிர்குஹ் கெய்ரோவில் நுழைந்தவுடன் மக்கள் அதை நல்ல சகுணமாக நினைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஃபாத்திமிட் கலிஃபா அல் அதித் தாராள மனதுடன்  ஷிர்குஹை வரவேற்றுக் கொண்டார். 564 A.H. ல் ஷவீர் அஸ் ஸாதி சதி செய்து கொலை செய்யப்பட்டார். அல் அதித் சித்தப்பா ஷிர்குஹை ஃபாத்திமிட் கலீஃபாவாக பதவியில் அமர்த்தினார். ஆனால், இரண்டு மாதத்திலேயே அவர் மரணமடைந்தார்.