திங்கள், 20 ஏப்ரல், 2015

வைக்கிங்குகள் வரலாறு

                                     ‘வைக்கிங்குகள்’ இது ஏதோ புதியதாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். ஐரோப்பாவில் தரம் தாழ்ந்திருந்த மனித வாழ்வை சீர்படுத்திட இஸ்லாமிய மன்னர்களால் படையெடுப்பின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அழகிய மதமாக அறிமுகமான இஸ்லாமையும், இஸ்லாமிய ஆட்சியையும் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக கருவறுக்க நினைப்பவர்கள். இவர்கள் தான் 11 க்கும் அதிகமான சிலுவைப்போர்களில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தவர்கள், இன்றும் அமெரிக்கா, இஸ்ரேலுடன் கை கோர்த்துக் கொண்டு முஸ்லீம்களை தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் என்று கொல்பவர்கள். கடற்கொள்ளையையும், கொலைகளையும், முறையற்ற காமக்களியாட்டங்களை காதலுடன் செய்த ஒரு காட்டுமிராண்டி கூட்டம். இதை நாம் சொல்லவில்லை. மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களே எழுதியது. அதனாலேயே இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது
                  793 ல் இங்கிலாந்தின் வடகிழக்கில் துறவிகளின் தீவான லிண்டிஸ்ஃபார்னியில் துறவிகள் தியானத்திலும், இறைவணக்கத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும் சத்தம், அலைகளை மீறிய சத்தம் ஆவேசமாக, வெறித்தனமாக வந்திறங்கியது ஒரு மிருகக்கூட்டம். துறவிகளின் துரதிஷ்டம் அவர்களுக்கு முடிவாகவும், வந்திறங்கியவர்களுக்கு உலக சரித்திரத்தில் சாதிக்க இருப்பதற்கு முதல் நாளாகவும் ஆகியது. வந்திறங்கியவர்களின் சொந்த பூர்வீக இடம் கோத்ஸ் மற்றும் வண்டல்ஸ். ஸ்காண்டிநேவியாவிலிருந்து வந்த அந்தக் கூட்டம் “வைக்கிங்குகள்” ஆவார்கள்.
                                ஸ்காண்டிநேவிய மொழியில் “விகிங்க்ர்”(VIKINGR) என்றால் கடற்கொள்ளையர்கள் என்று அர்த்தம். இந்த வைக்கிங்குகள் பிரிட்டன் கரைகளையும், வடமேற்கு ஃப்ரான்சையும் சரியாக இரு நூற்றாண்டுகளாக தாக்கி இருக்கிறார்கள். இந்த ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகளில் சிலர்  வட அட்லாண்டிக்கிலும், பிரிட்டிஷ் தீவுகள் சிலவற்றிலும், நார்மண்டி, சிசிலி மற்றும் ரஷ்யாவின் இதயப்பகுதியிலும் குடியேறினர். எல்லா வைக்கிங்குகளும் அதே பூர்வீக இடத்திலிருந்து வந்தவர்கள் என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாது. ஆனால், வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து கரையிலிருந்து அயர்லாந்து வரை நார்வேயிலிருந்து வந்த கூட்டம்தான் தாக்கியது. ஸ்காண்டிநேவிய வைக்கிங்குகள் ஸ்காட்லாந்து தீவுகள்,ஐஸ்லாந்து மற்றும் அயர்லாந்தின் சில பகுதிகளிலும் குடியேறினார்கள்.
                                    டென்மார்க்கிலிருந்தும் வந்த சில வைக்கிங்குகள் சண்டையிட்டு பின் கிழக்கு பிரிட்டன், வடமேற்கு ஃப்ரான்ஸிலும் தங்கினார்கள். ஸ்வீடனிலிருந்து வந்தவர்கள் பால்டிக் வழியே தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் மையப்பகுதியில் வியாபாரிகளாக ஆனார்கள். பிரிட்டனின் கடலோரங்களில் அக்காலத்தில் சிறு சிறு ஆட்சியாளர்கள் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தார்கள். மிகச்செழிப்பாக  இல்லாவிட்டாலும் வளமோடு இருந்தார்கள். இது கொள் ளைக்கார வைக்கிங்குகளை ஈர்த்தது. இதில் மிகவும் புகழ்பெற்ற லோனா என்ற தீவை தொடர்ந்து 795, 802, 805 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை கொள்ளை அடித்தார்கள். பிரிட்டிஷ் தீவுகள் உள்ளுக்குள்ளேயே ஆறுகள் ஓடும்படியான பாதுகாப்போடு இருப்பது போல் தோன்றினாலும், வைக்கிங்குகளின் நீண்ட படகுகள் உள் நுழைந்து தாக்குவதற்கு வசதியாக இருந்தன. வழக்கமான தாக்குதலுக்குப் பிறகு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அங்கேயே தங்கிப்போனார்கள்.
                              வெகு விரைவில் ஸ்காட்லாந்தின் அனைத்து தீவுகளையும் கைப்பற்றினார்கள். பின் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் முக்கிய தரைப்பகுதிகளையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். இவர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் உத்தி எதிரிகளைப் பயமுறுத்தி நிலைகுலையச் செய்தது. 838 ல் நார்வேனிய வைக்கிங்குகள் டப்ளின் நகரைக் கைப்பற்றி அயர்லாந்தில் நார்ஸ் மன்னராட்சியை அமைத்துக்கொண்டார்கள். டென்மார்க் வைக்கிங்குகள் முப்பது ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து கொள்ளை அடித்தும், போரிட்டும் 838 ல் கிழக்கு இங்கிலாந்தில் குடியேறினார்கள். மேலும், டென்மார்க் வைக்கிங்குகள் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்புகளை சித்திரவதை செய்தும் துன்புறுத்தியும் வாங்கினார்கள். 866 ல் யோர்க், 867 ல் நாட்டிங்காம், 869 ல் தெட் ஃபோர்ட்டையும் வரிசையாகக் கைப்பற்றினார்கள். நார்தும்ப்ரியா, மெர்சியா மற்றும் கிழக்கு அங்கிலியா மன்னர்கள் வைக்கிங்குகளிடம் பயந்து ஒப்பந்தம் செய்ய சமாதானம் பேசினார்கள். 870 ல் டென்மார்க் வைக்கிங்குகள் வெஸ்ஸெக்ஸை நோக்கி முன்னேறினார்கள். படிக்கும் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் இறுதியில் எங்கே மோதவந்தார்கள் என்று ஆம் அதுதான் இங்கிலாந்து. கடுமையான ஒன்பது போர்களுக்குப் பிறகு 871 ல் ஆஷ்டவுனில் நடந்த போரில் வைக்கிங்குகளின் மன்னனும், ஒன்பது பிரபுக்களும் போர்களத்திலேயே கொல்லப்பட்டு வெல்லவே முடியாதவர்களாக இருந்த வைக்கிங்குகளை ஆங்கிலேயர்கள் முதல்முறையாக வென்றார்கள். இது வெஸ்ஸெக்ஸ் மட்டுமல்லாமல் எந்த ஆங்கில மன்னர்களையும் அவ்வளவு சுலபமாக வெல்ல முடியாது என்பதை உணர்த்தியது. டேனிஷ்கள் (வைக்கிங்குகள்/டென்மார்க்) அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு குளிர்காலத்தில் லண்டனை விட்டு வெளியேறினார்கள். ஆஷ் டவுன் வெற்றி ஆங்கிலேயர்கள் சரித்திரத்தில் புதியமுகமாக வெஸ்ஸெக்ஸ் மன்னனின் சகோதரன் ஆல்ஃப்ரடை அறிமுகப்படுத்தியது. இராணுவ வீரர்கள் இவனை வெஸ்ஸெக்ஸ் வீதியில் ஊர்வலமாக தூக்கி வந்தனர்.
                                இங்கிலாந்தில் மறுக்கப்பட்ட மிகவும் பாரம்பரியமான கதை இந்த ஆல்ஃபிரட் இடமிருந்து தான் ஆரம்பித்தது. அவனின் வீரத்திற்கு தகுதியானதாக அந்த வெற்றி அமைந்தது. ஆல்ஃபிரட் தான் முதல் ஆங்கிலோ-சாக்ஸன் ஆட்சியாளன். இவனை இங்கிலாந்தின் தேசிய தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த பகுதிகளில் டேனிஷ்களை தடுக்க இவனேயே தகுதியானவனாக ஆங்கிலேயர்கள் கருதினார்கள். இவன் தான் முதல்முறையாக ‘தி கிரேட்’ என்னும் தகுதியை இங்கிலாந்தில் பெற்றான். மன்னனுக்குண்டான தகுதிகளை கற்றான். முப்பது ஆண்டு சிக்கல்களுக்குப் பிறகு, டேனிஷ்களை வென்று இந்த தகுதிகளை அவன் அடைந்தான். வெற்றிபெற்ற அதே 871 ம் ஆண்டு மூத்த சகோதரன் இறந்துவிட ஆல்ஃபிரட் வெஸ்ஸெக்ஸின் மன்னனாகப் பதவி ஏற்றான். முதல் காரியமாக ஆங்கிலேய கப்பல்படையை நிறுவினான். டேனிஷ்கள் தங்களை பலப்படுத்திக்கொண்டு சுழலும் நீண்ட வைக்கிங்க் கப்பல்களுடன் வந்தார்கள். ஆங்கிலோ-சாக்ஸன் தீவு இனமக்கள் பயத்திற்கு பதில் எதிர்க்க ஆரம்பித்தார்கள். 875 ல் ஆல்ஃபிரட் தன் கப்பல்படை மூலம் தானும் ஒரு கப்பலில் சென்று, முற்றுகை இட்ட ஏழு டேனிஷ் படகுகளில் ஒன்றை சிறைப்பிடித்தான். இந்த வெற்றி மேலும் அவன் புகழ்பெற உதவியது.
                                      தரையிலும் சில வெற்றிகள் பெற்றான். டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு விரட்டினான். எப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டாலும், அதை ஒவ்வொரு முறையும் டேனிஷ்கள் மீறினார்கள். 878 ல் திடீரென்று டேனிஷ்கள் தாக்குதல் நடத்த, ஆல்ஃப்ரட் மேற்கு நோக்கி சோமர்செட் சதுப்பு நில பரப்புகள் உள்ள பகுதிக்கு தள்ளப்பட்டான். ஏதெல்னிய் என்ற கோட்டையில் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து டேனிஷ்களை எதிர்த்தான். ஆனால் மட்டரகமான முறையில் தோல்வியடைந்தான். இதன் மூலம் டேனிஷ்கள் வெஸ்ஸெக்ஸைக் கைப்பற்றி மொத்த இங்கிலாந்தையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த சில மாதங்களில் சற்று பலத்துடன் மீண்டும் கிழக்கில் வில்ட் ஷயர் பகுதியில் எடிங்க்டன் என்ற இடத்தில் டேனிஷ்களை வென்றான். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த தாக்குதலில் ஈஸ்ட் ஏன்ஜிலியா என்ற இடத்தையும் ஆல்ஃப்ரட் கைப்பற்றினான். டேனிஷ் மன்னன் குத்ரும் அவன் கூடாரத்தில் சுற்றி வளைக்கப்பட்டான். தான் வெஸ்ஸெக்ஸை விட்டு விலகுவதாக மீண்டும் வழக்கம் போல் உறுதியளித்தான். மேலும் தான் கிறிஸ்துவ மதததைத் தழுவுவதாகவும் வாக்களித்தான். குத்ருமின் மதம் மாறும் விழா பார்ரேட் ஆற்றின்கரையில் ஆல்ஃப்ரடின் தலைமையில் 878 ல் நடந்தது. இரு கிறிஸ்தவ மன்னர்களும் வெட் மோர் என்ற இடத்தில் பனிரெண்டு நாட்கள் விருந்தும், கொண்டாட்டமுமாகக் கழித்தனர். இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தம் டேனிஷ்களை வெஸ்ஸெக்ஸை விட்டு  விலக்கியது.
                                885 ல் டேனிஷ் வைக்கிங்குகள் கெண்ட் பகுதியில் நுழைந்தனர். இது ஆல்ஃப்ரடுக்கு கிழக்கில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு 886 ல் டேனிஷ்களை விரட்டி லண்டன் நகரைக் கைப்பற்றினான். இந்த வெற்றிக்குப் பிறகு, மீண்டும் குத்ருமுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் ஆங்கிலோ-சாக்ஸன்களும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் டேனிஷ்களும் இருப்பதாக முடிவானது. டேனிஷ்களின் பகுதி டேன்லா என்று அழைக்கப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் நார்வே மன்னர்கள், அயர்லாந்து மன்னர்களுடன் போரிட்டார்கள். பல படையெடுப்புகளின் மூலம் பெரும் துயரத்தை இருவரும் சந்திக்க நேர்ந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் சூழ்நிலை வைக்கிங்குகளுக்கு ஆதரவாக மாறியது. அவர்கள் அயர்லாந்தின் பலமான முக்கிய ஆறுகளைக் கைப்பற்றினார்கள். 914 ல் வாட்டர் ஃபோர்டும், 920 ல் லைம்ரிக் நகரையும் கைப்பற்றினார்கள். கார்க் பகுதி வைக்கிங்குகளால் பலமுறை கைப்பற்றப்பட்டது. வெக்ஸ்ஃபோர்டும் நார்வே வைக்கிங்குகள் வசமானது. அயர்லாந்தின் பெயர்பெற்ற மன்னன் பிரைன் போரு திருப்பி போரிட்டான்.
                              அயர்லாந்து மன்னன் பிரைன் போரு ஷன்னான் என்னும் ஆறு ஓடும் பகுதியில் பிறந்தவன். சிறிய பகுதியை ஆட்சி செய்த ஆட்சியாளர் ஒருவருக்கு மகனாகப்பிறந்த இவன் போரு என்றே அறியப்பட்டான். இவன் குடும்பத்தினர் ஒரு முறை வைக்கிங்குகளை எதிர்த்து வெற்றி பெற்றதால் ஆட்சி கிடைக்கப் பெற்றனர். 964 ல் போருவின் மூத்த சகோதரன் அயர்லாந்தின் மதிப்பும், சக்தியும் வாய்ந்த முன்ஸ்டர் பேரரசை எதிர்த்தான். அவர்களின் பலமான கேஷெல் என்ற பகுதியை வெற்றி கொண்டான். பின்னாளில் முன்ஸ்டர் பேரரசின் மன்னனாகி, தென் அயர்லாந்தில் வைக்கிங்குகளை அடக்கும் படைக்குத் தலைவனாகவும் ஆனான். 976 ல் போரு இரு பதவிகளையும் வெற்றிகரமாக அடைந்தான். போரு வைக்கிங்குகளை ஷன்னானிலிருந்து விரட்டினான். 1002 ல் போரு மொத்த அயர்லாந்துக்கும் மன்னன் ஆனான். 1013 ல் இவனின் போரால் நார்வே வைக்கிங்குகள் இடம் பெயர ஆரம்பித்தார்கள். 1013 ல் டப்ளினின் நார்வே வைக்கிங்க் மன்னன் ஓர்க்னிய்ஸ் என்ற நகரில் வேறொரு உள்ளூர் வைக்கிங்க் ஆட்சியாளருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் இருந்தான். அப்போது இருவரும் ஒரு திட்டம் தீட்டினர். ஓர்க்னிய்ஸ் நகரின் ஆட்சியாளர் ஒரு கப்பலையும், இராணுவத்தினரையும் ஈஸ்டருக்கு முன் டப்ளினிக்கு அழைத்துவந்து அயர்லாந்து மன்னன் போருவை வெல்ல நார்வே வைக்கிங்க் மன்னனுக்கு உதவுவதாகத் திட்டம் இருந்தது.
                              குறிக்கப்பட்ட நாளில் ஏப்ரல் 23 1014 ல் டப்ளின் நகரின் கிழக்கிலிருந்து க்ளோண்டர்ஃப் என்ற இடத்தில் நார்வே வைக்கிங்குகளுடன் போரு போர்புரிந்தான். அவருக்கு அப்போது வயது 73 ஆனதால், படைகளுக்கு வெறும் உத்தரவு மட்டும் செய்துகொண்டிருந்தார். அவர் மகன் முர்சட் என்பவன் நேரடியாக களத்திலிருந்து போரிட்டு ஓர்க்னெய்ஸ் ஆட்சியாளனால் கொல்லப்பட்டான். இருந்தாலும் நார்வே வைக்கிங்குகள் தோல்வியுற்றனர். வைக்கிங்குகளின் தலைவன் போர்க்களத்தை விட்டு நழுவி, போருவின் கூடாரத்திற்குள் நுழைந்து அவரைக் கொன்றான். அயர்லாந்தின் க்ளோண்டர்ஃப் வெற்றி நார்வே வைக்கிங்குகளை மீண்டும் அயர்லாந்துக்குள் நுழையவிடாமல் செய்தது. ஆனால் வைக்கிங்குகள் டப்ளிங்கின் கடற்கரைப் பகுதிகளையும், வாட்டர்ஃபோர்டையும் விட்டுவிடவில்லை. மன்னர் போரு மற்றும் அவர் மகன் மரணங்களால் அயர்லாந்தும் சரியான ஆட்சியாளர் இல்லாமல் தடுமாறியது. இந்த தடுமாற்றத்துடனே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சக்திவாய்ந்த “நார்மன்கள்” அயர்லாந்தின் கரைப்பகுதிக்கு வரும் வரை ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
                                          சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கள் நீண்ட கப்பல்களில் ஐரோப்பிய வட கடலோரப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்த நார்வே வைக்கிங்குகள் நியோதிக் (ஓர்க்நெய்ஸ் மற்றும் ஷெட்லாந்து பகுதி) பகுதிகளை ஒட்டி உள்ள தீவுகளிலும், தங்களைச் சேர்ந்த சிலர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருக்கும் சிறு இடங்களிலும் தங்கியிருந்து தங்களுக்கான நிரந்தர இடத்தினைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில்பட்டது துறவிகளின் தீவான ஐஸ்லாந்து. துறவிகளை விரட்டி விட்டு ஐஸ்லாந்தைப் பிடித்த வைக்கிங்குகளுக்கு அங்கிருந்து மேலும் மேற்கு நோக்கி பரவ வசதியாக கிரீன்லாந்து அமைந்தது. ஆனால் இவர்களுக்கு முன் எஸ்கிமோக்கள் முந்திவிட்டார்கள்.
                                874 ல் வைக்கிங்குகளின் நீண்ட கப்பல்கள் ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் வந்து நங்கூரமிட்டது. நார்வே வைக்கிங்குகள் தங்கள் தலைவனாக இன்கூல்ஃபுர் அர்னர்சன் என்பவனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்துடன், கால்நடைகளையும் கொண்டுவந்திருந்தனர். முதல் குழு புதிய இடத்தில் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலையும், ஆடு வளர்த்தலையும் அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். மற்ற குழுக்களும் பின்னால் வந்து அருகிலுள்ள தீவுகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். அவர்களின் மக்கள் தொகை 75,000 ஆக இருந்தது. இந்த ஐஸ்லாந்திலிருந்து சென்ற நார்வே வைக்கிங்குகள் தான் அமெரிக்க கண்டத்தில் முதல் ஐரோப்பிய குடியேற்ற நாடுகளாக கிரீன்லாந்து மற்றும் வின்லாந்தை ஆக்கிக்கொண்டார்கள்.
                                     ஐரோப்பாவின் வடமேற்கின் எல்லா பகுதிகளையும் கொள்ளையடித்தனர். ஃப்ரான்ஸின் கரையோரங்களிலும் கொள்ளையடித்து நாளடைவில் அந்தந்த இடங்களை குடியேற்ற பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வட்டப்பகுதியாக சியானின் கீழ் புறத்தில் டேனிஷ்களின் ஒரு பகுதி இருந்தது. பத்தாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் பல சாதனைகளைப் புரிந்து தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு நார்வே நாட்டினன் அவர்களுடன் வந்து சேர்ந்தான். அவன் பெயர் ஹ்ர்ஊல்ஃப்ர் ஆகும். மேற்கத்திய சரித்திரத்தில் இவன் பெயர் ரோல்லோ தி கேங்கர். குறுகிய காலத்தில் ரோல்லோ சியானி வைக்கிங்குகளின் தலைவனாகி ஃப்ரான்சு நகரமாகிய சார்ட்ரெஸ் மீது போர் தொடுத்தான். ஃப்ராங்கிஷின் மன்னன் மூன்றாம் சார்லஸ் என்பவன் செயிண்ட் க்ளெய்ர் சுர் எப்டி என்ற இடத்தில் தனக்கு சேவையின் அடிப்படையில் உதவும் வகையில் (ஆங்கிலத்தில் FEUDEL SYSTEM) ரோவனைச் சுற்றியுள்ள பகுதிகளை ரோல்லோவுக்கு தருவதாக சமாதானம் செய்துகொள்ள போர் நின்றது.
                   வைக்கிங்கு என்ற வார்த்தைக்கு ஸ்காண்டிநேவியனில் நார்த்மேன் என்ற அர்த்தமாகும். புராதன ஃப்ரென்சுகள் நார்மண்ட் என்று அழைத்தனர். ரோல்லோவும், அவன் வழிவந்தவர்களும் ஒப்பந்தத்தை மீறி வேகமாக தங்கள் பகுதிகளை விரிவுபடுத்தி “நார்மன்”கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் ராஜ்ஜியம் எல்லைகளைத் தாண்டி விரிந்து கொண்டே போனது. ஆரம்பத்தில் கொலையிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வந்த சிறு குழு, இரக்கத்திற்கும், துரோகத்துக்கும் அடையாளமான அந்த கூட்டம் உலக சரித்திரத்தில் “நார்மண்டி” கள் என்ற அழியாத பெயரைப் பெற்றது. இந்த நார்மன்கள் தான் சிலுவைப்போரில் முஸ்லீம்களின் இரத்தத்தில் குளித்தது. இன்றுவரை இங்கிலாந்தில் ராஜவம்சமுமாய், மற்ற ஐரோப்பிய மன்னர்கள் பரம்பரையுமாய் இருப்பவர்கள் இவர்கள் தான். நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், ஆதியிலிருந்து கடற்கொள்ளையையே தொழிலாகக் கொண்டு, அதன் மூலம் ஐரோப்பாவில் பரவிய இவர்கள், இன்று கூட்டுப்படை அமைத்து ஆப்பிரிக்க கடற்கொள்ளையை அடக்குகிறார்களாம். இந்த ரோல்லோவின் ஆண் சந்ததி இரு நூற்றாண்டுகளாக முதலாம் ஹென்றி என்பவன் 1135 ல் இறக்கும் வரை ஆண்டது. இதற்கிடையில் ரோல்லோ கிறிஸ்தவனாக மதம் மாறி இருந்தான். அவன் மகன் முதலாம் வில்லியம் பிறப்பால் கிறிஸ்தவனான முதல் நார்மன் மன்னன் ஆவான்.
                                    வைக்கிங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது கொள்ளை அடிப்பது. இந்த கொள்ளை இவர்களை கடல்வழியே ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ரஷ்யா கொண்டு சேர்த்தது. அங்கு வியாபாரம் செய்ய துவங்கினார்கள். இயற்கையாகவே கிழக்கு ஐரோப்பாவின் ஆறுகள் வடக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் அமைப்பைக் கொண்டிருந்தது. இது பால்டிக் கடலுக்கும், கருங்கடலுக்கும் நடுவே வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. வினா, நெய்பெர் மற்றும் வோல்கா ஆறுகள் மிக அருகாமையில் இருந்தன. அவற்றின் அருகே இல்மென் என்ற ஏரி தான் பிரதானமான வியாபாரத்தலமாக இருந்தது. பால்டிக், கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வந்து சேரும் கப்பல்களிலிருந்து, சிறிய படகுகளுக்கு மாற்றி வியாபாரப் பொருள்களை இங்கு கொண்டுவருவார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி வியாபார வைக்கிங்குகள் நோவ்கோராட் என்ற இடத்தில் மையம் கொண்டு “ரஸ்” என்று அழைக்கப்பட்டனர். இந்த ரஸ்களின் பெயரில் தான் பின்னால் ரஷ்யா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நெய்பெர் ஆற்றின் கீழ்ப்புறத்தில் தான் வியாபாரம் பரவலானது, இதுவே ரஷ்யா என்ற தேசம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.
                                   882 ல் ஓலெக் என்ற ஒரு வைக்கிங்க் தலைவன் தன் வியாபாரத் தலைமையகத்தை நெய்பெர் ஆற்றின் கீழ் பகுதியில் மாற்றினான் பின் அருகிலிருந்த கீவ் என்ற நகரத்தைக் கைப்பற்றினான். 911 ல் இங்கு பைஸாந்திய பேரரசுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த ரஷ்ய கீவ் நகரம் இரண்டு தலைமுறைக்குப் பின் தென்பகுதி மக்கள் பெருக்கமுள்ள பைஸாந்தியம், மத்தியில் பசுமையான ரஷ்ய பூமி, வடக்கில் இருண்ட காடுகள் என்ற அமைப்பில் இருந்தது. இங்கு கிரேக்கத்திலிருந்து தங்கம், துணிகள், மதுவகைகள் மற்றும் பழங்களும், செக்கோஸ்லாவேக்கியாவிலிருந்து வெள்ளி மற்றும் குதிரைகளும், மெல்லிய உரோமங்கள், மெழுகு, தேன் மற்றும் அடிமைகள் ரஷ்யாவிலிருந்தும் விற்பனைக்கு வந்தன. பத்தாம் நூற்றாண்டு வரை கீவ் நகரம் வைக்கிங்குகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 980 ல் வ்லாடிமிர் எதிரிகளிடமிருந்த கீவ் நகரத்தை வெற்றி கொண்டு மொத்த ரஷ்யாவின் இளவரசராக ஆனார். வைக்கிங்குகள் என்ன நினைத்தார்களோ அவர்களும் தங்களை ரஷ்யர்களாகவே மாற்றிக்கொண்டார்கள்.
                        வ்ளாடிமிரின் ஆரம்பகாலம் காட்டுமிராண்டிகளைப் போல் இருந்தது. எந்நேரமும் சண்டையும், பெண்வேட்கையுமாக இருந்தது. சரித்திர ஆதாரமாக சுமார் 800 பெண்களுடன் காம தொடர்பு வைத்திருந்தாராம். 988 ல் இவர் ரஷ்யாவுக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்தார். தானும் துறவிபோல் மாறி, தூதுவர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி எது நல்ல மதம் என்று அறிந்து வரச்செய்தார். அறிந்து வந்தவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் கிரேக்க ஆர்தொடக்ஸை ரஷ்யாவுக்கான ஆட்சி மதமாகத் தேர்ந்தெடுத்தார். பழைய அரசர்கள், அவர்களின் வயதான இளவரசர்கள் என்று ரஷ்யா மிகவும் பழமை தோய்ந்திருந்தது. இடையில் வந்த ஸ்காண்டிநேவியா சாதனை (நாம் முன்பு பார்த்த) இளவரசனால் இடைவிடாமல் 600 ஆண்டுகள் ஆண்வாரிசுடன் ஆட்சி தொடர்ந்தது. ரஷ்யாவின் ராஜவம்சம் வைக்கிங்குகளுடன் நெருங்கிய தொடர்புடையது. நார்மன்களின் இங்கிலாந்து படையெடுப்பின் மூலமாகவோ அல்லது ஐஸ்லாந்து, கிரீன்லாந்து குடியேற்றத்தினாலோ இணைந்திருக்கலாம்.
                                           உயர்ந்த நிலப்பரப்பைக் கொண்ட ஐஸ்லாந்துக்கும், சிகரமுள்ள கிரீன்லாந்துக்கும் நடுவில் 175 மைல் மறைப்பில்லாத நீர் இருந்ததால் சில நேரங்களில் பார்க்கமுடியும். இது 981 ல் வைக்கிங்க் சாதனையாளன் எரிக் தோர்வல்ட் சன்னை (எரிக் தி ரெட்) கவர்ந்தது. இவன் ஒரு மனிதனை வெட்டிக் கொன்றதற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தான். எரிக் நீண்ட கப்பலில் தன் குடும்பத்தினர், அவர்களின் வேலைக்காரர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை ஏற்றிகொண்டு தூரத்தில் தெரிந்த அந்த சிகரத்தை நோக்கி பயணித்தான். அந்த தீவின் தென் பகுதியில் தற்போதைய ஜூலியன்ஹாப் பகுதியை அடைந்தான். அவர்கள் அங்கு மூன்று ஆண்டுகள் தங்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. பின் ஐஸ்லாந்து திரும்பி மேலும் குடியேற்றவாசிகளை தன்னுடன் அழைத்துக் கொண்டான். துல்லியமாக சிந்தித்து மக்களுடன் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று அந்த இடத்திற்கு கிரீன்லாந்து எனப் பெயரிட்டான். பின் மீண்டும் ஐஸ்லாந்து திரும்பி 25 நீண்ட கப்பல்களில் மக்களை அழைத்துவந்தான். அவர்களில் 12 கப்பல்கள் விருப்பமில்லாமல் பாதி வழியில் திரும்பிவிட 13 கப்பல்களில் 350 பேரும், கால்நடைகளும் வந்து சேர்ந்தன. அவர்கள் அங்கே நானூறு ஆண்டு களாக சிறந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, கிரீன்லாந்து முற்றிலும் மனிதர்களற்று கைவிடப்பட்டது. ஆனால் கிரீன்லாந்தை விட்டுத் தள்ளி வட அமெரிக்காவில் ஒரு குடியேற்ற பூமி நிறுவப் பட்டது.
                                    பதிமூன்றாம் நூற்றாண்டின் ஐஸ்லாந்து வாசிகளின்  சாதனைச் சரித்திரம் லீஃப் எரிக்சனைப் பற்றி பலவிதமாகக் குறிப்பிடுகிறது. எரிக்கின் மகன் லீஃப் என்பவன் வழக்கமாக குளிர் காலங்களைக் கழிக்க கிரீன் லாந்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வான். அப்படி வழக்கமாகச் சென்ற பகுதிக்கு வின்லாந்து என்று பெயரிட்டான். வின் என்ற சொல்லுக்கு வைன் என்னும் மதுவோ அல்லது சம அளவிலான பச்சைப்புல் நிரம்பிய பூமியோ காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது. இன்னொன்றில் ஒருமுறை லீஃப் நார்வேயி லிருந்து வரும் போது கடலில் வழி தவறிப் போனான். அவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜார்னிஹெர் ஜோல்ஃப்சன் சொன்ன பாதையில் சென்று விட்டதாகக் கூறுகிறது. அதன்படி 1000 ல் லீஃப் எரிக்சன் வட அமெரிக்காவில் மூன்று தீவுகளை இனம்கண்டு ஹெல்லுலாந்து, மார்க்லாந்து, வின்லாந்து என பெயரிட்டான். மற்றவர்களைப் பற்றி சரியான தகவல் இல்லை. அவர்கள் பஃப்ஃபின் தீவு, லேப்ரடார் அல்லது நியூஃபவுண்ட்லாந்து ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது. லீஃப் மீண்டும் தென்பகுதி நோக்கி பயணமானான்.
                           அடுத்த ஆண்டு லீஃப் கிரீன்லாந்து திரும்பினான். கொஞ்ச வருடங்கள் கழித்து போர் ஒன்று நடந்ததென்றும், அப்போது தோர்ஃபின் கர்ல்செஃப்னி என்பவனால் புதிய குடியேற்றம் நடந்ததென்றும், அவர்கள் வெறும் மூன்றாண்டு காலம்தான் அங்கு வாழ்ந்தார்கள் என்றும், சேவேஜெஸ் (SAVAGES) என்ற சொந்த அமெரிக்கர்கள் அவர்களை விரட்டி விட்டனர் என்றும் சாதனைப் புத்தகத்தில் உள்ளது. வடஅமெரிக்காவில் லான்ஸ் ஆக்ஸ் மேடோவ்ஸ் என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி, நியூஃபௌண்ட்லேண்டில் நீண்ட வீடுகள், மாபெரும் வராண்டா அமைப்புகள் வைக்கிங்குகள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரத்தைத் தெரியப்படுத்துகின்றன. ஆனால், வின்லாந்தின் வரைபடம் போலி என்பதை நிரூபிக்கிறது. நார்மன்களுக்கு பரவுவதற்கு ஃப்ரான்சின் ஃப்ராங்கிஷ் பேரரசு மிகவும் வலிமையாக இருந்தது. ஆனால், வைக்கிங்குகளுக்கு இயற்கையிலேயே உண்டான சாதிக்கும் ஆர்வம் அவர்களை விவசாயிகளாக அங்கே குடியேறச் செய்தது. சக்திவாய்ந்த கடல்கொள்ளையர்களாக இருந்த அவர்கள், ஃப்ராங்க்ஸ்களிடமிருந்து கற்ற மிகச்சிறந்த சக்திகொண்ட குதிரைப்படையை அமைத்துக்கொண்டு எதிர்த்தார்கள். பெயர்பெற்ற குடும்பத்திலிருந்து ஆர்வமுள்ள ஒரு இளைஞனை போர்பயிற்சி கொடுத்து இராணுவக் கூலியாக வைத்து கொண்டார்கள்.
                                1017 ல் நார்மன்கள் வட இத்தாலிக்கு வந்து போப்பின் எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டனர். மெடிட்டரேனியனில் ரோமன் கத்தோலிக்கத்தைச் தழுவியிருந்த நார்மன்களுக்கு இரண்டு விதமான எதிரிகள் இருந்தனர். ஒன்று இத்தாலியின் தென்பகுதியில் இருந்த பைஸாந்திய பிரதிநிதிகள் கிரேக்க வைதீக (GREEK ORTHODOX) கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர்கள். சிசிலியில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முஸ்லீம்கள். 1059 லிருந்து போப் இரு பிரதேசத்திலும் நார்மன்கள் ஆள்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் நார்மன்களுக்கு ஆசையைத் தூண்டிய வாய்ப்பு அருகிலேயே கிடைத்தது. 1066 ல் ‘நார்மன் போர்’ என்ற ஒன்றை இங்கிலாந்தின் மீது திணித்தார்கள். இந்த 66 வது வருடம் உலக வரலாற்றில் ஐரோப்பாவைத் திருப்பிப் போட்டது. நீங்கள் இப்போதும் டட்டூஸ் என்னும் சனியனை உடலில் வரைவதிலும், ஆங்கில சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் இந்த 66 வது வருடத்தை சகுனித்தனமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். டி-ஷர்டுகள், வாகனங்கள், ரெஸ்டாரண்டுகள், வாசனைப் பொருட்கள்(ரூட்66) என்று விடாமல் இன்றும் நினைவு படுத்துவார்கள். தங்களின் பூர்வீக ஸ்காண்டிநேவிய சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி போரிட்டார்கள்.                      

புதன், 15 ஏப்ரல், 2015

மருத்துவத்தின் வரலாறு

                                   இந்த கட்டுரை இறுதியில் எழுதப்பட்டுள்ள ஆதாரமான புத்தகங்களின் வாயிலாகவே எழுதப்படுகிறது. எதுவும் கூட்டப்படவில்லை, குறைக்கப்படவில்லை. சில முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் புத்தகங்கள் கூட பயன்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பி. சையத் பி.எச்.டி என்பவரின் ஆதார பூர்வமான திரட்டலின் பகுதியாகும். இந்த அளப்பறிய வரலாற்றுப் பணிக்காக அவருக்கு எனது சலாமையும், நன்றிகளையும் உங்களின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
                                  நபி (ஸல்) அவர்களின் இறப்பிற்குப் பிறகு, இஸ்லாமியர்கள் வெறும் நிலப்பரப்புகளை மட்டும் வெல்லவில்லை. விஞ்சானத் துறையில் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை கண்டுபிடித்து உலக சமுதாயத்திற்கு மாபெரும் சேவையை செய்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் மருத்துவஞானம் மேற்குலகை வியப்படைய வைத்தது. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருக்க ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவ மனைகள், மருத்துவர்கள், ஆராய்ச்சிகள் என்று பிரபலமாக இருந்தது. குறிப்பாக பாக்தாதின் பொது மருத்துவமனை நவீனமயமாக இருந்தது. நோயாளிகளின் அறையைச் சுற்றி நீரூற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன. மனநோயாளிகள் அக்கரையுடன் சிகிச்சை பெற்றும், வலி நோயாளிகள் இரவுகளில் கதையுடன் கூடிய மெல்லிய இசை முழங்கப்பட்டு கவனிக்கப்பட்டனர்.
                                   இளவரசர்களும், ஆண்டிகளும் சமமான சிகிச்சை பெற்றனர். தங்கள் உடலை யாரோ மூன்றாவது மனிதனிடத்திலே காட்டுவதா? என்று தயக்கத்தில் இருந்தவர்களையும், மருத்துவத்துறையை பிரபல்யமாக்கவும் சிகிச்சை முடிந்து செல்பவர்களுக்கு ஐந்து தங்க துண்டுகள் வழங்கப்பட்டன. பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும்சகதியுமாக இருக்க பாக்தாத், கெய்ரோ நகரங்களில் ஆண், பெண்களுக்கென தனித்தனியாக மருத்துவமனைகள் இருந்தன. மருத்துவமனைகள் மருந்தகம், நூலகம் இணைந்திருந்தன. உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவும் இருந்தது. புறநகர் பகுதிகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நடமாடும் மருத்துவமனைகள் கூட இருந்தன. மருந்தகங்கள் பதிவு செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
                                   நபி (ஸல்) கள் நாயகம் அவர்களை மைக்கேல் ஹார்ட் என்னும் யூத ஆசிரியர் (THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY) உலகம் போற்றும் முதல் நூறு நபர்களில் முதல் நபராக தேர்வு செய்திருக்கிறார். உலகின் கடுமையான மக்களான அரபுக்களை பழுவாங்குதல், உள்நாட்டுக் குழப்பம், போர் போன்ற பல பிண்ணனியில் இருந்து நாயகம் அவர்கள் வென்றார்கள். அப்போது இருபுறமும் பெர்ஷியா, பைஸாந்தியர்கள் என்ற இரு பிரமாண்டமான சாம்ராஜ்ஜியம் இருந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் அட்லாண்டிக் கடலிலிருந்து மேற்கிலும், சீனாவின் எல்லை வரை கிழக்கிலும் பரவிக்கொண்டிருந்தது. நபி(ஸல்)கள் நாயகம் இறப்பிற்கு 80 ஆண்டுகளுக்குப் பின் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் நுழைந்து 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். தாங்கள் வென்ற இடத்தில் எல்லாம் உலகின் மிகச்சிறந்த இஸ்லாமிய கலாச்சாரத்தை விதைத்தார்கள்.
                                          இஸ்லாமிய பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியதும் கலாச்சாரத்தை சார்ந்த ஈடற்ற மருத்துவமும் எதிரிகளால் அழிக்கப்பட்டன. 1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை தீயிட்டு அழித்தனர். அது சரித்திரத்தில் இன்றுவரை ஈடு செய்யமுடியாத இழப்பு. ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. பல ஆராய்ச்சிக் குறிப்புகள், வரலாற்றுபதிவுகள் தீக்கிரையாகின. அதன்பிறகு, இஸ்லாமின் மீதுள்ள வெறுப்பால் ஸ்பானியார்டுகள் ஸ்பெயினில் மிகப்பெரிய அறிவுக் களஞ்சியங்களை அழித்தனர். இஸ்லாமிய பேரரசு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையும், அதிகப்படியான மக்களையும் ஆட்சி செய்த ஒரே பேரரசு. இந்த ஒன்றே மற்ற மதங்கள் இஸ்லாமின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குர் ஆனும், அதன் ஆராய்ச்சிகளும் இஸ்லாமியர்களுக்கு அளப்பறிய அறிவாற்றலை தந்தது. அதற்கு குர்ஆனே சாட்சியாகவும் இருக்கிறது. தானே மனிதனுக்கு அறிவூட்டுவதற்கு இறைவன் உத்திரவாதம் அளிக்கிறான்.
                              ஏன் எடுத்த எடுப்பிலேயே முஹம்மது நபிகளை அனுப்பி இருக்கலாமே என்று கேள்வி எழலாம். படைத்தவனுக்கு தான் தெரியும். தான் படைத்த மனிதன் அறிவில் சிறந்து முழுமை பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமென்று. ஒரு மோட்டார் வாகனம் செய்ய வேண்டுமானால் இயந்திரம் சீர் செய்ய, வடிவமைக்க, வர்ணம் பூச என்று எத்தனை காலம் பிடிக்கிறது. ஒருமோட்டார் வாகனம் தானே இன்னொரு மோட்டார் வாகனம் செய்து கொள்ள முடியாது. மனிதன் அப்படியல்ல தனக்கான உணவு, இருப்பிடம், தன் சந்ததி, தன் தேவைகள் என்று தானே செய்து கொள்ள வேண்டிய ஆற்றல் உள்ளவன். படைத்தவனுக்கு தான் தெரியும், தன் படைப்பின் சக்தி பற்றி. அவன் கோபம், கொலை, நன்றி, மகிழ்ச்சி, வெறுப்பு, போட்டி, பொறாமை என்று பலவற்றை அறிந்து, அதன் நல்லது கெட்டது தெரிந்து கொள்ள அவர்களிலிருந்தே ஒரு நபியையோ, ஒரு நல்லடியாரையோ அவ்வப்போது சில நூற்றாண்டுகள் இடைவெளியிட்டு அனுப்பி முழுமை பெற்ற பின் இறுதியாக ஈடுஇணையற்ற நம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். எந்த கண்டுபிடிப்பானாலும் அதன் பூர்வீகம் ஆராய்ந்தால், முட்டுச்சந்து போல் இஸ்லாமியர்களிடம் தான் முடியும். ஆம். அல்லாஹுத்தாலா மறையில் இன்றோடு நான் இஸ்லாத்தை முழுமை ஆக்கிவிட்டேன் என்று எப்போது சொன்னானோ, அறிவை அள்ளி வழங்கிவிட்டான். இன்று குறிப்பாக மருத்துவத்தில் எந்த ஒரு கண்டுபிடிப்பும் மேற்கத்தியர்களாலும், யூதர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டது போல் தான் சொல்லப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும், இதற்கு ஆரம்ப அடி பிடித்துக் கொடுத்தவர்கள் முஸ்லீம்கள். இது அவர்களுக்கும் தெரியும். உதாரணத்திற்கு பலர் தங்கள் திறமைக்கேற்ப ஆடைகளை வடிவமைத்து பெயர் பெற்றாலும், ஊசியும், நூலையும் ஆரம்பத்தில் கொடுத்தவரை மறக்க முடியாது. அப்படிதான் முஸ்லீம்கள் இந்த மனித இனத்திற்கு மருத்துவத்தைக் கொடுத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்து கற்காத வரை உலகில் யாராலும் மருத்துவம் படிக்க முடியாது. இது மிகைப்படுத்திச் சொல்லப்படுவதல்ல. அப்பழுக்கற்ற உண்மை. யூத, கிறிஸ்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். முஸ்லீம்கள் அறிவுத்தாகம் எடுத்து தேடினார்கள். மங்கோலியர்களாலும், ஸ்பானியார்டுகளாலும் அழிக்கப்பட்டது போக, பத்தாம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவ குறிப்புகள் டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் பாக்தாத் நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு அரபு மொழியில் ஆராய்ச்சிக்காக மொழி பெயர்க்கப்பட்டன.
                       அப்போதைய உலகின் மருத்துவத்துறையில் பாக்தாத் தான் தலைமையகமாகத் திகழ்ந்தது. முஸ்லீம்கள் உலக மருத்துவத் துறையில் ஒளியைப் பரப்பினார்கள். மருத்துவத்தைப் பற்றி கேம்ப்பெல் என்பவர், ”ஐரோப்பிய மருத்துவம் அரபுகளின் மூலம் மட்டுமல்ல அதன் கட்டமைப்பின் மீது தான் இருக்கிறது. அரபியர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் ஐரோப்பியர்களுக்கு முன்னோடிகள்” என்று புகழ்ந்துள்ளார். இஸ்லாமிய மருத்துவம் மருத்துவமனை, நுண்ணணு, மருந்து, மயக்கமேற்றுதல், அறுவை சிகிச்சை, மருந்தகம், கண் மருத்துவம், மனநோய் போன்று அனைத்திலும் சிறந்து விளங்கி இருந்தது. மருத்துவமனை நிர்வாகமாகிய உள்நோயாளி, புறநோயாளி, அவர்களுக்கான நோயாளி மற்றும் நோயின் குறிப்புகள் போன்றவைகள் பிரமிக்கத்தக்க வகையில் பாக்தாத் மருத்துவமனையில் பத்தாம் நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
                                    636 ல் பெர்ஷிய நகரமான ஜுண்டி ஷபூர் (தமிழில்- அழகிய பூங்கா) முஸ்லீம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவம் பயில பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் கட்டினார்கள். இது அப்போதைய அப்பாஸிட் மன்னர் அலி இப்ன் உல் அப் பாஸ் அவர்களின் உத்தரவுப்படி கட்டப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தொழிலைப்போல மருத்துவம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. 850 க்குப் பிறகு இருந்த ராஸி என்பவர் மாணவர்களுக்கு நோயாளியின் நோய் அறிந்து அதன் கிருமித்தன்மைக்கு ஏற்றவாறு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார். புகழ்பெற்ற மருத்துவர்களாக அப்போதிருந்த அல் ராஸியும், இப்ன் சினா (அவி சென்னா) வும் மருத்துவ மனையின் இயக்குனர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்தனர். ஜுண்டி ஷாபூர் மற்றும் பாக்தாத் கல்லூரிகள் அடிப்படை மருத்துவத்தை போதித்தன. மனித தலை மற்றும் எலும்புகள் சம்பந்தமாகக் கற்க பாக்தாதில் தனி கல்லூரி இருந்தது. அப்போது பாரிஸ் மற்றும் பிரான்சு நகரங்கள் சேரும் சகதியுமாக இருந்தன.
                                  அடிப்படை மருத்துவம் பயின்ற மாணவர்கள் மருத்துவமனைகளில் தொழிலாளியாக பணியில் அமர்த்தப்பட்டனர். அங்கு மேலும் அவர்களுக்கு கலந்துரையாடல், விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. தேர்வுகளில் நோயாளிகளின் நடவடிக்கை, வலி உணரப்படும் பகுதிகள், வீக்கங்கள் மற்றும் அளிக்கப்பட்ட மருந்துகள் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்னும் எலும்பு சம்பந்தமான மருத்துவம் பத்தாம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளில் இருக்க, மேற்கத்தியர்கள் புதுமை போல் 1852 ல் தான் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கண் மருத்துவம் சர்வ சாதாரணமாக இருந்தது. இப்ன் சினாவும், ஹாஸி என்பவரும் மனநோய் பற்றி வகுப்பெடுத்தார்கள்.
                                     931 ல் பாக்தாத் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறால் ஒரு நோயாளி இறந்துவிட, அப்போதைய மன்னர் அல் முக் ததிர் மூத்த மருத்துவர் சினன் இப்ன் தபித் பின் குர்ராஹ் என்பவரை அழைத்து மருத்துவர்களின் தரத்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கச் சொல்லி உத்தரவிட்டார். முதல் மருத்துவ மாணவர்கள் குழு 860 பேர் பாக்தாதில் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது அமெரிக்காவில் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை அப்போதே பாக்தாதில் செய்தார்கள். மருத்துவர்களின் தரம் அறிந்து அவர்கள் தொழில் செய்யவும், மருந்தகம் வைக்கவும் உத்தரவு அளித்தனர். ஐரோப்பிய மருத்துவ கல்லூரிகள் இஸ்லாமிய மருத்துவக் கல்லூரியின் நடைமுறைகளையே தொடர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் கூட சார்பன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இப்ன் சினாவின் கானுன் (கேனன்) என்னும் பாடத்தைப் படிக்காமல் மருத்துவப்பட்டம் பெற முடியாது.
                              ராஸி அவர்களின் மருத்துவத்தின் ஆரம்ப காலத்தையும், நவீனத்தையும் தெரிந்து கொள்ளாமலும், மருத்துவமனையில் துவக்கப்பணியில் அமராமலும் ஒருவரால் சிறந்த மருத்துவராக ஆக முடியாது என்று கூறுகிறார். இஸ்லாமிய ஆட்சியில் மருத்துவம் வசதி, நிறம், வயது, மதம் என்ற எந்தவித வித்தியாசம் காணாமலும் பார்க்கப்பட்டது. மருத்துவமனைகள் ஆண், பெண் இரு வருக்கும் தனிப் பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது. 872 ல் அமைக்கப்பட்ட கெய்ரோவின் துலூம் மருத்துவமனையின் ஹத்தாத் என்பவர், மருத்துவமனையின் நூலகத்தில் 100,000 மருத்துவ புத்தகங்கள் இருந்ததாகக் கூறுகிறார். மேலும், பாக்தாதின் முஸ்தான்சிர்ரிய்யா பல்கலைக்கழகத்தில் 80,000 புத்தகங்களும், கார்டோபாவில் 600.000 புத்தகங்களும், கெய்ரோவில் 2,000,000 புத்தகங்களும், திரிபோலியில் 3,000,000 புத்தகங்களும் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பதிப்புத்துறையில் நவீனம் இல்லாத அந்தக்காலத்தில் இவ்வளவு புத்தகங்களை கையாண்டது பெரிய சாதனையாகும், தற்போது அமெரிக்கா பாக்தாதைத் தாக்கியபோது கூட முதலில் நூலகங்களில் நுழைந்து பெருவாரியான அறிவுக்களஞ்சியங்களை கொள்ளையடித்ததாக சமீபத்தில் கூட செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அப்போதே துலூன் மருத்துவமனையில் நோயாளிக்கென பிரத்தியேக ஆடை வழங்கப்பட்டது. டமாஸ்கசில் தொழுநோயாளிகளுக்கென தனியாக மருத்துவமனை இருந்தது. அந்த மருத்துவமனை இருக்கும்போதே ஐரோப்பாவில் அடுத்த ஆறு நூற்றாண்டுகளாக தொழுநோயாளிகளை நோய் பிறருக்கு தொற்றாமல் இருக்க அரசு சட்டமாக தீயிலிட்டு கொளுத்தினார்கள்.
                          துனிஷியாவில் 830 ல் கைரவான் மருத்துவமனை பெரிய சிகிச்சை அறைகளும், காத்திருப்பு அறைகள், பார்வையாளர் அறைகளும் உள்ளடங்கிய வண்ணம் கட்டப்பட்டது. முதல்முதலில் மருத்துவத்துறையில் செவிலிகள் (நர்சுகள்) சூடான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி கொடுத்து பயன்படுத்தப்பட்டனர். 981 ல் பாக்தாதில் அல் அதுதி மருத்துவமனை அப்போதைய நவீன கருவி களுடன் திறக்கப்பட்டது. அப்பாஸிய மந்திரி அலி இப்ன் இசா அரசு மரு த்துவர் சினன் இப்ன் தாபித்தை சிறந்த நிர்வாகம் அளிக்க வேண்டினார். முதல்முறையாக சிறை கைதிகளுக்கும் மருத்துவ வசதி தரப்பட்டது. இராணுவ வீரர்களைக் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள் நடத்தி வந்தார்கள்.
                                   ஒருமுறை அல் ராஸி பாக்தாத் வருகைதந்த போது அரசால் புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்கக் கேட்டுக்கொண்டார். அவர் முற்றிலும் சுகாதாரமான இடத்தைத் தேர்வுசெய்ய புதிய இறைச்சித் துண்டை நகரின் பல பகுதிகளில் கட்டித்தொங்கவிட்டு அதன் கெடும் தன்மைக்கு  ஏற்றவாறு இடத்தைத் தேர்வு செய்தார்.
                            இப்ன் சினா மற்றும் இப்ன் காதிமா ஆகியோரின் மருத்துவசேவை மனிதகுலத்துக்கு ஈடுஇணையற்ற பங்களிப்பாகும். இப்ன் காதிமா தான் நோயின் தொற்றை முதலில் கண்டுபிடித்தார். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் “கருப்பு மரணம்” என்ற வடிவில் புதிய நோய் பல உயிர்களைத் தாக்கியது. கிறிஸ்தவ உலகம் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கிரானாடாவில் இப்ன் அல் காதிப் அவர்கள். “நோய் தொற்று உள்ளவர்களை மதம் தடுக்கும்போது எப்படி நாம் அனுமதிக்க முடியும் என்று கேட்கிறார்கள்? நோயின் தொற்று ஆராய்ச்சிகளின் மூலமும், அனுபவங்களின் மூலமும், ஆதாரங்களின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டப்பிறகு, அதற்கு மதத்தின் சாயம் பூசுவது எப்படி சரியாகும். உங்களின் பாத்திரங்கள், நகைகள், உடைகள் மூலமாகவே பரவுகிறது” என்று அறிவுபூர்வமான பதிலளித்தார்.
                                   அல் ராஸிதான் முதல்முறையாக சிற்றம்மைக்கான நோயின் குறிப்பு எழுதினார். இப்ன் சினா மார்பகசளி நோயின் இயற்கைத் தொடர்பை பற்றி எழுதினார். சல்ஃபூரிக் அமிலத்தின் தயாரிப்பையும், தன்மையையும் பற்றியும் எழுதினார். கல்வியறிவு இல்லாத அந்தகாலத்தில் இப்ன் சினாவின் காயத்திற்கு வைன் (மது வகை) மிகச்சிறந்த நிவாரணி என்ற கண்டுபிடிப்பு மிகவும் புகழ் பெற்றது. அல் ராஸியும் ஆல்கஹால் ஒரு சிறந்த நோய்கிருமியின் எதிர்ப்பு என்பதைக் கண்டறிந்து கூறினார். இப்ன் சினா ஓப்பியம் ஒரு அருந்தத்தக்க மறுத்துப்போகச் செய்யும் ஒரு மருந்து என்பதைக் கண்டறிந்தார். மேலும், மிதமாக மறுத்துப்போவதற்கு மன்ட்ரகோரா, கஞ்சா விதை, ஹெம்லாக், ஹிஸ்சயாமுஸ், லெட்டூஸ் விதை, பனி மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவையும் ஏதுவானது என்பதையும் கண்டறிந்து கூறினார். அன்றைய காலங்களில் மறுத்துப்போவதற்கு அரபு நாடுகளில் நார்கோடிக் மற்றும் நறுமணங்களில் ஊறவைத்த பஞ்சுகளைப் பயன் படுத்தினார்கள். அப்போது ஐரோப்பாவில் அறுவை சிகிச்சைகளை செய்யும் போது மறுத்துப் போகச்செய்யாமல் காட்டுமிராண்டித்தனமாக நாவிதர்களை வைத்தும், முறையற்ற முறையிலும் செய்தார்கள்.
                                 அல் ராஸி அவர்கள் தான் முதல்முதலில் மிருகங்களை வைத்து அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். இஸ்லாமிய மருத்துவத்தில் அபு அல் காசிம் கலாஃப் இப்ன் அப்பாஸ் அல் ஸஹ்ராவி (மேற்கத்தியர்களுக்கு அபுல் காசிஸ்) மற்றும் அல் ஸஹ்ரவியஸ் ஆகியோர் மிகவும் பிரபலமான அறுவைசிகிச்சை நிபுணர்களாக இருந்தனர். அல் ஸஹ்ரவியஸ் ஹீமோஃபீலியா சம்பந்தமாக முதலில் அல் தஸ்ரிஃப் என்ற புத்தகத்தை எழுதி மருத்துவ உலகத்துக்கு அர்ப்பணித்தார். அதில் 200 வகையான அறுவை சிகிச்சை ஆயுதங்களை வடிவமைத்திருந்தார். அல் ஸஹ்ராவி உடற்கூறு பற்றி ஆராய்ந்து மட்டுமல்லாமல், பசுவின் எலும்பிலிருந்து மனிதனின் விழுந்து போன பற்களுக்கு மாற்றுப்பல் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்தினார். இதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பல் பொருத்தப்பட்டது. முதல்முதலில் அறுவை சிகிச்சைக்கு பஞ்சை பயன்படுத்தியவரும் அல் ஸஹ்ராவிதான். இவர்தான் கிட்னியில் ஏற்படும் கல்லை நீக்க சிறுநீர் பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பை வெட்டும் முறையை கண்டுபிடித்தார். இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த மனிதஎலும்பின் தோள்பட்டை மாற்று சம்பந்தமான சிகிச்சையை 1937 ல் ப்ரூக்கும், கோச்சாரும் கண்டுபிடித்தனர்.
                            இப்ன் சினாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான புற்றுநோய் சம்பந்தமான விளக்கங்கள் இன்றும் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அல் ஸஹ்ராவியால் கடை பிடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை இன்றளவும் அறியப்படாமலே உலகமெங்கும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இப்ன் ஸுஹ்ர் அவர்களால் அரிப்பு நோய், தூக்கவியாதி நோய்க்கு கல்கஷண்டி ஆகியோர் குறிப்புகள் தந்துள்ளனர். அல் அஷ் அத், அபு ஷல் அல் மசிஹி, இப்ன் அல் நஃபிஸ் ஆகியோரின் மருத்துவத்துறையின் பங்கும் சிறப்பானது. இப்ன் சினா வின் அல் கானுன் (CANON) என்ற புத்தகம் மருத்துவ உலகின் ஒரு மைல் கல்.
                                  கண் நோயில் ரெடீனா, கேடராக்ட் போன்ற வார்த்தைகள் அரபுச்சொல்லின் மூல வார்த்தைகள். பத்தாம் நூற்றாண்டில் இப்ன் அல் ஹைதம் அவர்களின் (மேற்கில்- அல் ஹாஸென்) “ஆப்டிகல் தெசாரஸ்”  (OPTICAL THESAURUS) என்ற புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இதிலிருந்து ரோஜர் பேகன், லியனார்டோ டா வின்சி மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் போன்றோர் சில பகுதிகளை எடுத்து கையாண்டிருக்கிறார்கள். இந்த புத்தகம் அதுவரை இருந்த ஒளிக்கற்றை, கண் பார்வை சம்பந்தமான கிரேக்கர்களின் கருத்தை உடைத்தது. இதை அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஒப்புக்கொண்டது. அல் ராஸி ஒளியைக் கண்டவுடன் கண்ணில் ஏற்படும் மாற்றங்களையும், இப்ன் சினா கண்விழியின் மொத்த நரம்புகளின் எண்ணிக்கையையும் முதல் முதலில் தெரியப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கண் சிகிச்சைக்கென ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹாலோ மெட்டாலிக் ஊசியை ஈராக்கின் மோசூலைச் சேர்ந்த அம்மார் பின் அலி பத்தாம் நூற்றாண்டுகளில் கண்டுபிடித்து விட்டார். 
                               நோய்களுக்கான மருந்து கண்டுபிடிப்புகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் யூஹன்னா பின் மசவய்யும் அவர் மாணவர் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதியும் பல நோய்களுக்கான மருந்துகளை அப்பாஸிட்கள் காலத்தில் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். மசாயில் ஹுனைன் என்ற புத்தகத்தில் ஹுனைன் பின் இஷாக் அல் இபாதி அவர்கள் விவரமாக மருந்துகளை பற்றி குறிப்புகள் தந்திருக்கிறார். மருந்தகங்கள் அப்போதைய ஆட்சியாளர்களால் தரம் சோதிக்கப்பட்டன. அரபு நாடுகளில் பணிபுரிபவர்களைக் கேட்டுப்பாருங்கள் இன்றும் மருத்துவத்துறையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். பெரும்பாலான மருந்தக சொற்கள் அரபுமொழியின் மூலமே. உதாரணத்திற்கு, ட்ரக், அல்கலி, அல்கஹால், அல் டிஹைட்ரேட், அல் எம்பிக் மற்றும் எலிக்ஸிர் போன்றவை அரபுச் சொற்கள்.
                 அப்போதைய மக்களின் அறியாமைத்தன்மைக்கு ஏற்ப கசப்பான மருந்துகளில் பன்னீர், ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றின் சுவையை மருந்துகளில் ஏற்றினார்கள். மருந்தகத் துறையில் அல் ராஸி, அல் ஸஹ் ராவி, பிரூனி, இப்ன் புட்லான் மற்றும் தமிமி ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. மருத்துவத் துறையில் இன்னும் அதிகமாக சொல்லிக்கொள்ள இருக்கிறது. இது துறை சம்பந்தமான சொற்களுடன் கூடியதால், உண்மையில் எனக்கும் விளங்காது உங்களுக்கும் விளங்காது. மனோதத்துவத் துறையிலும் பல புதுமைகளை அல் ராஸி அறிமுகப்படுத்தினார். ஒருமுறை கலிஃபா ஒருவருக்கு மனநோய் ஏற்பட்டது. அல் ராஸி அவரை குளிக்கச் சொன்னார். கலீஃபா குளியல் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அல் ராஸி கத்தியை எடுத்து கலீஃபாவைக் குத்துவது போல் முன்னேறினார். இதனால் கலீஃபா பயந்து போய் எழுந்து ஓட அவரின் இதய இயக்கம் அதிகமாகி நோயின் தன்மை உடனே குறைந்தது. ஒருமுறை ஒரு பெண்மனி குனியமுடியாமல் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். மருத்துவர் உடனே குனிந்து அந்த பெண்மனியின் கால்களிலிருந்து உடையை விலக்க அந்த பெண்மனி பதறியடித்து குனிய அவள் வலி குணமானது. அப்போதைய இஸ்லாமிய ஆட்சியில் இரு செயல்களுமே குற்றமாகக் கருதப்பட்டாலும், நவீன வசதியில்லாத அந்த காலத்தில் இந்த சிகிச்சைமுறை நல்ல பலனை தந்ததற்குப் பாராட்டப்பட்டது. மனநோய்க்கு நஜபுத்தீன் முஹம்மது என்பவரின் நஃப்காயி மலிகோலியா, குத்ரிப் மற்றும் துவால் குல்ப் ஆகிய படைப்புகள் சிறப்பானது.
                             மனநோய் காப்பகங்கள் மொரோக்கோ நகரின் ஃபெஸ் பகுதியிலும், 705 ல் பாக்தாதிலும், 800 ல் கெய்ரோவிலும், டமாஸ்கஸ் மற்றும் அலிப்போவில் 1270 லும் துவங்கப்பட்டன. உலகின் அப்போதைய மருத்துவ மாணவர்கள் இஸ்லாமிய நாடுகளில் மருத்துவம் படிப்பதை தங்கள் லட்சியமாகக் கருதினார்கள். இந்த நிலையை இந்த 21 ம் நூற்றாண்டில் தான் அமெரிக்காவில் மருத்துவத்துறையில் அடைய முடிந்தது. ஆறாம் நூற்றாண்டுகளிலிருந்தே படிப்படியாக முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலப்பரப்புகளை வென்று ஐரோப்பா நோக்கி முன்னேறினார்கள். இது பனிரெண்டாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. போகுமிடமெல்லாம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கலாச்சாரத்தையும், அறிவுக்களஞ்சியங்களையும் கொண்டு சென்றார்கள். இதற்கு பல ஆதாரங் கள் வரலாற்றில் உள்ளன. அடுத்து 400 ஆண்டுகளுக்கும் மேலாக கிறி ஸ்தவர்கள் சிலுவைப்போர் நடத்தி முஸ்லீம்களை ஸ்பெயின் மற்றும் வட பிரான்சை விட்டு விரட்டினார்கள். கொண்டுபோன ஆவணங்கள் அழிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் மேற்கத்திய நாடுகளிலேயே இருந்தது. காரியங்கள் முடிந்த பிறகு, ஐரோப்பிய நாடுகள் வளமை அடைந்தவுடன் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த ஆவணங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு ஒவ்வொரு கண்டுபிடிப்பும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள் பெயரால் வெளியிடப்பட்டன அல்லது முஸ்லீம் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் ஏதோ அவர்களுக்கு உச்சரிக்க வராததுபோல் திட்டமிட்டு யூத, கிறிஸ்தவ பெயர்கள் தோற்றமளிப்பது போல் குறிக்கப்பட்டன. மருத்துவம் மட்டுமல்ல பல துறைகளில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இதை நாம் சிறுகச்சிறுக ஐரோப்பிய, கிறிஸ்தவ ஆசிரியர்கள் எழுதிய ஆதாரபூர்வமான புத்தகங்களின் வாயிலாகவே வெளியிடுவோம். இன்றைய நாட்களில் இறைவன் தன் அருட்கொடையை அரபு நாடுகளில் திறந்துள்ளான். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளவுக்கு செல்வத்தை வழங்கியுள்ளான். கடிகாரத்தின் சுழற்சி போல் நிச்சயமாக மீண்டும் முட்கள் கடந்த எண்ணை மீண்டும் தொடும். மறுபடியும் இஸ்லாமியர்கள் எல்லாத்துறைகளிலும் முதல் இடத்தில் வருவார்கள்.
இந்த கட்டுரை எழுத ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் : 
க்ரேட் மோமெண்ட்ஸ் இன் மெடிசன் – ஜி.எ. பெண்டர்- பக்கம் 68-74
யூரோலஜி  – இ. டி. வைட்ஹெட் மற்றும் ஆர்.பி. புஷ்- பக்கம் 5
இருபத்தொன்பதாவது இண்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எஸ். ஹத்தாத்- பக்கம் 1600- 1607
எ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – சி. சிங்கர் மற்றும் எ. எ. அண்டர்வுட்- பக்கம் 76
எ ஹிஸ்டர் அஃப் மெடிசன் – எ. காஸ்டிக்லியானி- பக்கம் 268
தி அராப் ஷார்ட் ஹிஸ்டரி – பி. ஹிட்டி – பக்கம் 143
1001 நைட்ஸ் (ஆறாம் பகுதி) – எல். பர்டன் – பக்கம்- 1886
மேன் கைண்ட் – பி. மில்லர்- பக்கம் 8- 40
தி அராப் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – ஒய். எ. ஷாஹின்- பக்கம் 10
முஸ்லீம் கன்ட்ரிபுயூஷன் டு மெடிசன் – எச். என். வாஸ்டி – பக்கம் 5-16
எ மெடிகல் ஹிஸ்டரி ஆஃப் பெர்ஷியா – ஜி. எல்குட்- பக்கம் 278-301
ஹிஸ்டரி ஆஃப் மெடிசன் – எஃப். எச். காரிசன் – பக்கம் 134
அரேபியன் மெடிசன் – இ. ஜி. ப்ரௌனி – பக்கம் 5-16
இன்னும் பல புத்தகங்கள் உள்ளது.
          


                                
                   

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஸோரோஸ்ட்ரியன்கள்

                                                                                   கற்களும், அசிங்கங்களையும் தெரிந்து கொண்டால் சாலையைக் கடக்க ஏதுவாக இருக்குமல்லவா?. அதைப் போன்ற ஒரு அருவருப்பான கூட்டம் தான் இந்த ‘ஸோரோஸ்ட்ரியன்கள்’. குறிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டால் இந்தக் கூட்டத்தாரிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக வட இந்தியாவில் இவர்கள் பரவலாக இருக்கிறார்கள். அதற்காகவே இந்த பதிவு.                                    
                                      ஈரானியர்களால் ஸோரோஸ்டர் (ஸரதுஸ்த்ரா) என்ற கிரேக்க பெயரைத் தாங்கிய தூதர் ஒருவர் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தார். அவர் கிழக்குப் பகுதியில் கஸ்பியன் கடற்கரைப் பகுதி யில் வசித்ததாகக் கூறப்படுகிறது. இவரின் போதனைகளைப் பின்பற்றியவர்கள் “ஸோரோஸ்டரியன்கள்” எனப்பட்டனர். ஸோரோஸ்டரின் போதனையாவது, புராதன இந்திய ஈரானிய மதத்திலுள்ள பல கடவுளை மறுத்து ஒரே கடவுள் “அஹுரா மஸ்தா” என்பது தான். ஸோரோஸ்டரின் அஹுரா மஸ்தாவின் கருத்து களடங்கிய கதாஸின் ஆரம்ப பகுதியான “அவிஸ்டா” ஸோரோஸ்டர்களின் புனித நூலாகும்.
                                        அஹுரா மஸ்தா இரு ஆவிகளை உருவாக்கி தன் இரு மகன்களைப் படைத்தார். ஒன்று ஸ்பெண்டா மயின்யூ உண்மை, வெளிச் சம் மற்றும் உயிரானது. இன்னொன்று அங்க்ரா மயின்யூ சூது, இருட்டு மற்றும் மர ணமானது. ஸோரோஸ்டரின் மரணத்திற்குப் பிறகு, ஸோரோஸ்டரியனிஸம் ஒரு மதமாக மாறியது. அஹுரா மஸ்தா (இது பின்னாளில் “ஓர்மஸ்த்” என்றானது) தானே தன் நல்ல மகனைக் கைப்பற்றி, தீய மகனான அங்க்ரா மயின்யூவை அழிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மனித சரித்திரத்தில் ஸோரோஸ் டரியன்களின் நம்பிக்கையானது எதிரெதிராக உள்ள ஸ்பெண்டா மயின்யூ மற்றும் அங்க்ரா மயின்யூவின் நல்லது கெட்டது, வெளிச்சம் இருட்டு, உயிர் மரணம் இவைகளின் சிக்கல்களை நீக்கி வாழ்வது. ஸோரோஸ்டரின் தத்துவம் இவை களை எல்லாம் விட்டு இந்தோ ஈரானியர்கள் தீயினால் தியாகம் செய்து வாழ வேண்டும். ஆகவே நெருப்பு மட்டுமே ஸோரோஸ்டரியன்களின் தியாகத்தின் அடையாளம்.
                                     இந்த ஸோரோஸ்டரியனிஸம் ஈரான் முழுவதும் எப்படிப் பரவி “அக்கேமேனிய” பேரரசின் ஆட்சி மதமானது என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், முதலாம் தரியஸ் என்பவர் தனது பதவியேற்பின் போது “ கடவுள் அஹுரா மஸ்தாவின் அருளாள் நான் மன்னனாக இருக்கிறேன். இதை அவரே எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார். பக்திமிகுந்த மகி (மாஜிக் என்றும் இருக்கிறது) என்னும் பகுதி ஸோரோஸ்டரியத்துடன் இணைந்து ஆரம்பகால ஈரானிய மதத்தில் ஒத்துழைத்திருக்கிறது. பெர்ஷியர்கள் மகிக்கு உயரிய அந்தஸ்தைக் கொடுத்தனர். மகி கிழக்குப் பகுதியியை ஆளப் பிறந்தவர்கள் என்றனர். அடுத்த ஐந்நூறு ஆண்டுகள் கழித்து மகிக்கள் கிறிஸ்து வத்திற்கு பலமும், அதிகாரமும் கொடுத்தனர் என்றனர். மேலும், கிறிஸ்துவ கதை யில் வரும் மகி பெர்ஷியாவை ஆண்ட நாடோடி பேரரசான பார்தியனிலிருந்து குழந்தை ஏசுவுக்கு பரிசு கொண்டு தந்தது. ஆனால், ஸோரோஸ்டரியனிஸம் கிரிஸின் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் கிரீஸை வெற்றி கொண்ட சமயத்தில் ஸோரோஸ்டரியனிஸம் கிரீஸில் இருந்ததாக ஒரு வரலாறு உள்ளது.        
                                      சமீப காலங்களில் இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் பெரும் பணம் முதலீடு செய்து தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை எடுத்தார்கள். அதில் பெரும் கூலி கொடுத்து முன்னணி நட்சத்திரங்களை ( அலெக்ஸாண்டிரியா பாண்டரிஸ், ஸிடா காத்தரின் ஜோன்ஸ் போன்றவர்களை) நடிக்க வைத்தார்கள். அதில் மிகவும் புகழ் பெற்றது ஸோரோ தொடர் வரிசையில் ‘தி மஸ்க் ஆஃப் ஸோரோஸ்’. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ஷியா கொள்கை உள்ளவர்களின் செயல்பாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த ஸோரோஸ்ட்ரியன்கள் இன்றும் இந்தியாவில் பொருளாதாரம், பொழுதுபோக்கு, வாணிபம் போன்ற துறைகளில் பரவலாக உள்ளனர். ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், நஸ்ருத்தீன ஷா இன்னும் பல கான் நடிகர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருத்து இருக்கிறது. 1000 BCE யிலிருந்து 600 BCE வரை சசானியர்கள் ஆட்சியில் குஜராத்தில் பரவியது. இந்த ஸோரோஸ்ட்ரியனிசம் முழுக்க முழுக்க இந்திய பிராமண பாரம்பத்தைச் சேர்ந்தது. 34 ஆண்டுகளுக்கு முன், 1981 ன் இந்தியக் கணக்கெடுப்பின் படி 100,000 ஸோரோஸ்ட்ரியன்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிந்தது.
                                 ஸோரோஸ்ட்ரியன்களின் நாட்குறிப்பு 12 மாதங்களை அஹுரா மஸ்டா, அமிஷா ஸ்பெண்டா அல்லது யஸ்டா ஆகியவற்றின் பெயர் தாங்கியதாக இருக்கும். முழுக்க முழுக்க கொண்டாட்டமும், கேளிக்கை நிறைந்த பண்டிகைகளைக் கொண்டதாக இருக்கும். அவைகளில் ஆறு ‘கஹன்பர்கள்’ என்று சொல்லக்கூடிய மைத்யோஸாரம், மைத்யோஷாஹெம், பைத்திஷாஹெம், அயத்ரிம், மைத்யரிம், ஹமஸ்பெத்மைத்யம் முக்கியமானவை ஆகும். இவர்களின் முக்கியமான பண்டிகை “நௌரோஸ்” என்பதாகும். மதுவுக்கும், அருவருப்பான நடனத்துக்கும் பெயர் போனது. சுல்தான் ஸலாவுத்தீன் ஆட்சி காலத்தில் இதை தடை செய்தார். இவர்களின் திருமணவிழா 3 லிருந்து 7 நாட்களுக்கு நடக்கும். மணமக்கள் வெள்ளை உடை தான் அணிய வேண்டும். இவர்கள் அடக்கஸ்தலங்களின் மீது கோபுரம் எழுப்புவார்கள். ஸோரோஸ்ட்ரியன்களின் அடக்கஸ்தலங்களில் மும்பையிலுள்ள “டவர் ஆஃப் சைலன்ஸ்” மிகவும் பெயர் பெற்றது. மும்பையில் 57 ஏக்கர் பரப்பளவில் இதற்காவே பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கிறார்கள்.
                        இந்த ஸோரோஸ்ட்ரியன்களை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து ஆராதிப்பவர்கள் யூதர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள். காரணம் உண்மை முஸ்லீம்களை ஆத்திரமூட்டுகிறார்களாம். நௌரோஸ் பண்டிகை தினத்தில் உலக பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

புதன், 8 ஏப்ரல், 2015

தைமூரியர்கள் வரலாறு

 இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டுவந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார் கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள்.
                                     1336 ல் இவர்களில் பிரபலமாக ஒருவர் பிறந்தார் அவர் பெயர் தைமூர். மேற்கத்தியர்களால் டாமெர்லேன் என்று அழைக்கப்பட்டார். துருக்கிகள் டிமுர் இ லெங்க் என்று அழைத்தனர். இவர் எப்படியேனும் ஒரு பேர ரசை மீண்டும் நிலைநாட்டிட முயற்சி செய்தார். துருக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்பட்டார். இவருக்கு சொந்தமாக பெரிய நிலப்பரப்பு இருந் தது. இவர் தனிச்செல்வாக்காக அவரின் கூட்டத்தினருள் திகழ்ந்தார். சிறந்த கலை ஞராகவும், கட்டிடக்கலை நிபுணராகவும் இருந்தார். மாபெரும் இஸ்லாமிய மார் க்க அறிஞர் இப்ன் கல்தூன் என்பவரின் மாணாக்கராக இருந்தார். 1383 ல் இவரு க்கு அப்போதே 50 வயதாகி இருந்தது. இருபது ஆண்டுகள் விடாது போரிட்டு மேற் கில் பாதி பகுதிகளை வென்றார். முதலில் ஹிராத் என்ற ஆஃப்கானிஸ்தான் மற் றும் ஈரானிய எல்லைப்பகுதியை வென்றார். ஹிராத் பின்னாளில் பெர்ஷிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியது. பின் தைமூர் கிழக்கு பெர்ஷியாவையும் வென்றார். 1394 ல் மொத்த பெர்ஷியா, மெஸோபொடாமியா, கருங்கடல், கஸ்பி யன் கடல், அர்மேனியா, அஸெர்பைஜான் மற்றும் ஜியார்ஜியாவை வென்றெடுத் தார். 1396 ல் புயலைப்போல் ரஷ்யாவை வெற்றி கொண்டு ஒரு ஆண்டு கையகப் படுத்தி வைத்திருந்தார்.
                                                                        தைமூரின் ஆட்சி மிகவும் மிருகத்தனமாக இருந்தது. பெர்ஷியாவில் தன்னை எதிர்த்தவர்களை ஜெங்கிஸ்கானைவிட கொடுமையாகத் தண்டித்தார். மக்களை கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கினார். கொல்லப்பட் டவர்களின் மண்டை ஓடுகளால் பெரிய கோபுரம் அமைத்து மற்றவர்களுக்கு அதை எச்சரிக்கை ஆக்கினார். ஜெங்கிஸ்கான் தவறிய ஒன்றை 1398 ல் தைமூர் செய்தார். ஆம் அதுதான் இந்தியாவின் மீதான படையெடுப்பு. டெல்லி நகரில் நுழைந்து அதை சூறையாடி, பல மாதங்கள் தங்கி கொள்ளையடித்து, கைது செய்தவர்களை கொன்று, 120 யானைகளையும் கைப்பற்றி திரும்பினார். தனது நகரமான சமர்கண்டை இஸ்லாமிய கலைவடிவத்தில் அமைத்தார். இந்தியாவில் இருந்து கொண்டு வந்த யானைக ளையும், கலை விற்பன்னர்களை வைத்தும் நகரை அழகுபடுத்தினார். 1399 ல் 60 வது வயதிலும் ஆக்ரோஷத்தோடு மேற்கு நோக்கி படையெடுத்தார்.
                                    1401 ல் தைமூர் எகிப்தின் மம்லூக் இராணுவத்தை சிரியாவில் வென்றார். டமாஸ்கஸ் நகரத்தை சேதப்படுத்தினார். அதே ஆண்டு பாக்தாத் மீது தாக்குதல் நடத்தி 20,000 பேரை கொன்று குவித்தார். 1402 ல் அனுப வம் வாய்ந்த வீரர்களுடன் அனடோலியாவை நோக்கி முன்னேறினார். ஓட்டோ மான் பேரரசர் பயேஸெட் என்பவரை அங்காரா என்ற இடத்தில் தோற்கடித்து சுல்தானைக் கொன்றார். மேலும் மேற்காக நகர்ந்து ஏஜியன் மற்றும் ரோட்ஸ் மன்னனை வென்று இஸ்மிர் நகரத்தையும் கைப்பற்றினார். பின் தைமூர் 1404 ல் சமர்கண்ட் திரும்பினார். அப்போது அவருக்கு 68 வயதாகி இருந்தது. அப்போதும் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. 1404 ல் தைமூர் சீனாவின் மீது ஆக்கிரமித்தார். சிம்கெண்ட் என்ற இடத்தில் இருக்கும் போது 1405 ல் நோயில் விழுந்து இறந்துபோனார். தைமூரின் பிடியிலிருந்து சீனா தப்பித்ததாகவே கருதப்பட்டது. இவருக்குப் பின் இவரது பிரதேசம் தைமூரின் இராணுவ கமாண்டர்களாலும், எதிரிகளாலும் பிரிக்கப்பட்டது.            

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஜானிஸ்ஸரீஸ் என்னும் இஸ்லாமிய படை


                                                             ஜானிஸ்ஸரீஸ் என்பது ஓட்டோமான் பேரரசின் சிறப்பு போர் படையாகும். ஜானிஸ்ஸரீஸ் என்றால் துருக்கியில் புதிய வீரர்கள் என்று அர்த்தம். இந்த ஜானிஸ்ஸரீஸ் படைக்கு ஆறு வயதிலிருந்தே தேர்வு செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பயிற்சி உடல்தகுதி, உயர்கல்வியுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகவோ, கட்டிடக்கலை நிபுணராகவோ, மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ அல்லது அதிகபட்சம் வைசிராயராகவும் உயரும் தகுதியுடன் கூடியது. இவர்கள் சுல்தானின் தனிப்பாதுகாவலராகவும் இருப்பார்கள். பால்கன் தீபகற்பம், வட கிரீஸ், செர்பியா, அனடோலியாவில் இருந்த கிறிஸ்தவர்களும் இந்தப்படையில் இருந்தார்கள். போரில் காலாட்படைகளாக இது 1363 லிருந்து 1826 வரை ஓட்டோமான் பேரரசில் இருந்தது. ஆரம்பத்தில் 1000 வீரர்களாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைவீரர்களின் எண்ணிக்கை 1680 ல் 135,000 வரை உயர்ந்தது. இதன் தலைமையகங்கள் அட்ரியனோபிள்(எடிர்னி) மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளில்(இஸ்தான்புல்) இருந்தது. இந்த படைவீரர்கள் பெயர் பெற்ற கொஸோவா போர், நிகோபாலிஸ் போர், அங்காரா போர், வர்னா போர், சால்டிரன் போர், மொஹாக்ஸ் போர், வியன்னா போர் இன்னும் பல போர்களில் ஓட்டோமான் பேரரசுக்காக போரிட்டிருக்கிறார்கள்.           
                                ஜானிஸ்ஸரீஸுக்கு முதல் கமாண்டராக சுல்தான் முதலாம் முராதும், கடைசி கமாண்டராக சுல்தான் இரண்டாம் மஹ்மூதும் இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் ஊழல்களும், தவறுகளும் நிறைந்து, விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 6000 பேர் தூக்கிலிடப்பட்டு சுல்தான் இரண்டாம் மஹ்மூதால் கலைக்கப்பட்டது. பெரும்பான்மையான வீரர்கள் நாடோடிகளிடமிருந்து வந்ததால் முரட்டுத்தனத்துடன் இருந்த இவர்களிடம் மற்றவற்றை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இராணுவக் கட்டுப்பாடு, சிறந்த கல்வி, நேர்மையுடன் இருந்த ஜானிஸ்ஸரீஸ்கள் சுல்தான்களின் அவ்வப்போதைய சலுகைகளால் பொதுமக்களோடு சாதாரணமாக வாழலாம், நகரில் நிலங்கள் வாங்கிக்கொள்ளலாம், வியாபாரங்கள் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நாட்டு மக்களுடன் கலந்தனர். போட்டி, பொறாமைகள் எழுந்தன, அவர்களின் அடிப்படை இராணுவ ஒழுக்கம், கட்டுப்பாடுகள் சீர்குலைந்தன. பயிற்சிகளுக்கு முறையாக செல்வதைத் தவிர்த்தனர். தங்களின் சொந்த ஆதாயத்துக்கே முதலிடம் கொடுத்தார்கள். முதலில் ஒழுக்கத்துடன் இவர்கள் தான் உலகில் முதல்முதலில் சீருடையணிந்த இராணுவத்தினர். ஜானிஸ்ஸரீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், பணி ஓய்வு மற்றும் தனிசமூக அந்தஸ்து ஆகியவை உண்டு. சிறப்பான தகுதியில் இருந்தார்கள். தேர்ந்தெடுத்த சிலரை ‘எண்டெருன்’ என்னும் அரண்மனைப் பள்ளியில் தங்கவைத்து சிறப்புப்பயிற்சி கொடுப்பார்கள். இதனால் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மன்னர் பரம்பரையில் உயர்பணிகளை புரியும் வாய்ப்பு கிடைத்தது. எண்டெருனில் படிப்பது பெரிய கௌரவமாக இருந்தது ஏனென்றால் பல கலாச்சாரத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் இருந்தார்கள், தரமான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அங்கு வழங்கப்பட்டது. முதலாம் முராதுக்குப் பின் வந்த இரண்டாம் முராத் எண்டெரூனை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
                       பால்கன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் 6 லிருந்து 14 வயதான பிள்ளைகளைத் தானே முன் வந்து எண்டெரூன் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஜானிஸ்ஸரீஸ்கள் ஓட்டோமான் பேரரசில் ‘அஸ்கெரி’ என்னும் உயர்தரகுடிமக்களாகக் கருதப்பட்டனர். 16 ம் நூற்றாண்டின் சுல்தான் ஜானிஸ்ஸரீஸ் வீரர்களின் பிள்ளைகளும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேரலாம் என்றும், தாடி வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு, 300 ஆண்டுகளாக அதற்கெல்லாம் இருந்த தடையை நீக்கினார். ஜானிஸ்ஸரீஸ் வீரர்களாய் இருந்து புகழ் பெற்றவர்கள் அல்பேனியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கஸ்ட்ரியோடி 20 ஆண்டுகளாக நடந்த அல்பேனிய கலவரத்தை அடக்கினார். போஸ்னியாவைச் சேர்ந்த சொகொல்லு மெஹ்மெத் பாஷா என்பவர் 14 ஆண்டுகாலம் ஓட்டோமானின் தலைமை வைசிராயராக இருந்து மூன்று சுல்தான்களிடம் பணிபுரிந்தார்.
                                போர் இல்லாத காலங்களில் ஜானிஸ்ஸரீஸ்கள் தீயணைப்பு பணிகள், காவலர் மற்றும் அரண்மனைக்காவல் ஆகியவற்றை கவனிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான சாலைகளைப் போடுவது, கூடாரங்களைப் போடுவது, ரொட்டி தயாரிப்பது என்று சகல பணிகளையும் செய்து கொள்வார்கள். ஜானிஸ்ஸரீஸ் படையிலிருந்து பணி ஓய்வு பெற்றிருந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளை பேரரசு கவனித்துக் கொண்டது. ஓட்டோமான் பேரரசின் எல்லைகள் விரிவான பின் பல்கேரியா, க்ரோட்ஸ், செர்ப்ஸ், ரோம், ஜியாரியா, போல்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருப்பவர்களையும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேர்த்தார்கள். ஊழல்களும், சீர்கேடும் ஜானிஸ்ஸரீஸ் படையில் தலைவிரித்து ஆடியதால் சுல்தான் நான்காம் மெஹ்மெத் துருக்கிய முஸ்லீம்களை மட்டும் படையில் சேர்த்தார். சுல்தான் முதலாம் அஹ்மெத் காலத்தில் ஒருநாளைக்கு 3 அக்சிஸாக இருந்த ஜானிஸ்ஸரீஸ்களின் சம்பளம். பதவி உயர்வு பெற்றால் 10 அக்சிஸாக உயர்த்தப்பட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 12 அக்சிஸ்கள் சீருடை சீரமைக்கவும், 30 அக்சிஸ்கள் ஆயுதங்கள் கையாள்வதற்கும் மேலும் ஒரு தொகை வெடிமருந்து கையாள்வதற்கும் வழங்கப்பட்டது. படைக்கு தேர்ந்தெடுத்தவர்களை முதலில் துருக்கிய குடும்பங்களுக்கு அனுப்பி எப்படி துருக்கி மொழி பேசுவது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை ஆரம்ப பாடமாக பயில வைத்தனர்.
                                ஜானிஸ்ஸரீஸ்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டார்கள். துருக்கியில் ஜிமாத் என்று அழைக்கப்பட்ட 101 வீர்ர்கள் வீதம் கொண்ட முண்னணிப்படை. பெய்லிக் என்று அழைக்கப்பட்ட 61 வீரர்கள் வீதம் கொண்ட சுல்தானின் பாதுகாப்புப்படை. செக்பான் என்று அழைக்கப்பட்ட 34 வீரர்கள் வீதம் அடங்கிய காலாட்படை என்று இருந்தது. யெர்லிய்யஸ் என்ற படைகள் நிரந்திரமாக ஏதாவது ஒரு ஊரிலோ அல்லது நகரத்திலோ நிற்க வைக்கப்படும். ஆரம்பத்தில் ஜானிஸ்ஸரீஸ் படைகள் ஈட்டி எறிவதில் வல்லவராக இருந்தார்கள். பின் 15 ம் நூற்றாண்டில் பரவலாகக் கிடைத்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்கள். மிலீ போரில் கோடாரிகளைப் பயன்படுத்தினார்கள். சீருடையுடன் கூடிய ‘யடகன்’  எனப்பட்ட வாள் ஜானிஸ்ஸரீஸ்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
                           16 ம் நூற்றாண்டுகளில் ஓட்டோமானின் எதிரிகளை அஞ்சவைத்த 80 மில்லிமீட்டர் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட ‘ட்ரென்ச் கன்’ பயன்படுத்தப்பட்டது. மேலும் கையெறி குண்டு, கை பீரங்கி ஆகியவற்றையும். 1645 க்குப் பிறகு க்ரீடன் போரில் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தினார்கள்.
                                    சமூகத்தில் கலந்திருந்ததனாலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததனாலும் இவர்கள் எப்போதும் சற்று தயக்கத்துடனே வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு உயர்குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்ததால் 17 ம் நூற்றாண்டில் இவர்கள் சமூகத்திலும், இராணுவத்திலும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மெதுவாக செயல்பட ஆரம்பித்தார்கள். ஜானிஸ்ஸரீஸ் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு மைதானம் சார்ந்த கடுமையான பயிற்சிகள் தேவையில்லை என்றார்கள். ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதனால் தங்களுக்கான ஆதாயத்தைப் பெற துணிந்தார்கள். அரண்மனைக் காவலில் இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைகள் மூலம் சுல்தானையே சிறைபிடிக்க முடியும் என்றும் நம்பினார்கள். சில சர்ச்சைகளால் ஓட்டோமானின் வடக்குப் பகுதியில் பிரச்சினை ஆரம்பித்தது.
                           ஜானிஸ்ஸரீஸ்கள் சம்பள உயர்வு வேண்டும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு சுல்தான் மாறும் போதும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் செலிம் தான் ஜானிஸ்ஸரீஸ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதித்தார். இப்படி பல சலுகைகளை அனுபவித்த பிறகும், ஐரோப்பாவுக்கு எதிரான ஓட்டோமான்களின் போரில் சரியான ஒத்துழைப்பைத் தராமல் இருந்தார்கள். சுல்தான் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது போன்ற வதந்தியைக் கேள்விப்பட்டு சுல்தான் மூன்றாம் செலிமைக் கைது செய்து பெயர் பெற்ற ஏழு கோபுரங்கள் என்ற இடத்தில் வைத்துக் கொன்றார்கள்.
                           வடக்குப் பகுதியில் ஸ்மெடெரெவோ என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜானிஸ்ஸரீஸ்கள், எங்கே சுல்தான் செர்பியர்களின் கூட்டுடன் சேர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவாரோ என்று அஞ்சி மத்திய செர்பியாவிலிருந்த அனைத்து தலைவர்களையும் கொன்றார்கள். இது ஸ்லாட்டர் ஆஃப் தி நிஸெஸ் (SLAUGHTER OF THE KNEZES) என்று எல்லோராலும் அறியப்பட்டது. இரண்டாம் மெஹ்முத் ஒரு ஆண்டுகாலம் தன்னைச் சுற்றி முதலில் பலப்படுத்திக் கொண்டார். முதலில் ஓட்டோமான் இராணுவத்தை தற்போதைய ஐரோப்பிய முறையில் நவீனப்படுத்தப் போவதாக அறிவித்தார். ஆத்திரமடைந்த ஜானிஸ்ஸரீஸ்கள் அனைவரும் தங்குமிடங்களை விட்டு கலவரம் செய்த வண்ணம் சுல்தானின் கோட்டையை நோக்கி வந்தனர். முதலில் அவர்களின் தங்குமிடங்களை சுல்தான் அழித்தார். அட்டூழியம் செய்த 4000 ஜானிஸ்ஸரீஸ் படையினரைக் கொன்றார். மேலும், அனைத்துக்கும் காரணமான 1000 வீரர்களை விசாரணைக்குப் பிறகு கொன்றார். இந்த சம்பவம் சரித்திரத்தில் ‘தி ஆஸ்பிஷியஸ் இன்ஸிடண்ட்’ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.                                   

வியாழன், 2 ஏப்ரல், 2015

டடார்கள் வரலாறு



டடார்கள் எனப்படுபவர்கள் பலவகை உண்டு. வோல்கா டடார்கள், கிரிமியன் டடார்கள், லிப்கா டடார்கள், அஸ்ட்ரகான் டடார்கள், சைபீரிய டடார்கள் இன்னும் சில சிறு பிரிவைச் சேர்ந்த டடார்கள். நாம் பார்க்கப் போவது பழைய துருக்கி டடார்கள். உய்குர் இனத்தைச் சேர்ந்த மத்திய ஆசியாவைச் சார்ந்தவர்கள். இவர்களை டர்டார்கள் என்றும் அழைப்பார்கள். சைபீரியா கலந்த துருக்கி மொழி பேசக்கூடியவர்கள். இவர்களின் மொழி 7 ம் நூற்றாண்டிலிருந்து 13 ம் நூற்றாண்டுவரை காலங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் டடர்ஸ்தான் மற்றும் பஷ்கோர்தோர்ஸ்தான் பகுதியிலிருந்த வோல்கான் டடார்கள் ஆவார்கள். இவர்கள் ஏறக்குறைய 6 மில்லியன்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. துருக்கி மொழி பேசும் முஸ்லீம்களும் டடார்களாகவே கணக்கிடப்பட்டனர். இதில் 0.50% மில்லியன் கிரிமிய டடார்களும் அடங்கும். பொதுவாக ஜெங்கிஸ்கானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும், ருஸ் எனப்படுபவர்களின் ஆக்கிரமிப்பின் மூலம் வந்த டடார்களே அதிகம். டடார் என்றால் துருக்கிய மற்றும் பெர்ஷிய மொழியில் “உயர்ந்த தூதன்” என்று பொருள். ரஷ்ய பேரரசில் இருந்த துருக்கிகள் அனைவருமே டடார்களாக அழைக்கப்பட்டனர். துருக்கிய மோங்கோல் டடார்களின் பலம் 14 மற்றும் 15 ம் நூற்றாண்டுகளில் அதிகமிருந்தது. ரஷ்யாவில் கிரிமிய நோகாய் படையெடுப்பின் மூலம் அதிகமான அடிமைகளை சிறைப் பிடித்து ஓட்டோமான் பேரரசுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இது இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. மேலும் இந்த படையெடுப்புகள் கொசாக்குகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியது.
                                          அதிகப்படியான டடார் மொழிபேசுபவர்கள் இருப்பதாக 2010 ல் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது. இவர்களின் எழுத்து வடிவம் ‘சிரில்லிக்’ என்னும் அமைப்பைக் கொண்டதாக இருக்கும். டடார்கள் மரம், துணி, செராமிக், தோல், உலோகங்களைக் குடைந்து வடிவமைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். இது அவர்களுக்கு பெரிதும் வாணிபத்தில் உதவியது. 
                                           7 ம் நூற்றாண்டுகளில் வோல்கா நதிக்கரையில் பரவியவர்கள் 922 ல் அஹ்மது இப்னு ஃபத்லான் என்பவரின் உபதேசத்தால் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். பிறகு, மங்கோலிய படையெடுப்புக்குப் பின் வோல்கா பகுதி (கோல்டன் ஹார்டி) தங்க நாடோடிகளுடன் இணைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய கிரிமியன் டடார்கள் மத்திய ஐரோப்பாவில் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். மங்கோலிய ஜெங்கிஸ்கானின் பேரன் பதூ கான் என்பவரின் தலைமையில் 1223 ல் ஐரோப்பாவை நோக்கி படையெடுத்தார்கள். முதலில் குமன்ஸ், வோல்கா பல்கேரியா, கெய்வன் ருஸ் ஆகிய பகுதிகளை வென்றார்கள். இவர்களின் திட்டம் அட்லாண்டிக் கரைப்பகுதிகள் வரை வெல்வதாக இருந்தது. பதூ கானின் உறவினரும், ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனுமாகிய ஓகிடெய் கானின் திடீர் மரணத்தால் படையெடுப்பை நிறுத்தி கொண்டு. கிழக்குப் புறமாக தங்கள் மலைப்பிரதேசத்திற்குத் திரும்பினார்கள். 1223 லிருந்து 1293 வரை நிறைய படையெடுப்புகளை பல்கேரியா, லுத்வேனியா, போலந்து மற்றும் இன்னும் பல பகுதிகளின் மீது நடத்தினார்கள்.

கர்மாஷியன்கள் வரலாறு



கர்மாஷியன்கள் என்பவர்கள் (அரபியில் கராமிதா) ஷியா பிரிவின் இஸ்மாயிலிகளுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் வெறும் சைவம் மட்டுமே சாப்பிடுவதால் தி கிரீன்க்ரோஸர்’ (அரபியில் அல் பக்லியாஹ்) என்றும் அறியப்பட்டனர். இவர்கள் 899 ல் அபி ஸைத் அல் ஜன்னபி என்பவரின் கீழ் ரிலிஜியஸ் உடோபியன் ரிபப்ளிக் என்று ஒரு அமைப்பை தொடங்கி கிழக்கு அரேபியாவில் அல் ஹஸா என்ற பகுதியை தலைமையகமாக ஆக்கிக்கொண்டார்கள். இந்த கர்மாஷியன்கள் அப்பாஸியர்களின் ஆட்சியில் புரட்சி செய்து புகழ் பெற்றார்கள். மக்காவிற்கு புனித யாத்ரீகர்கள் வந்திருந்த சமயத்தில் அதன் தலைவன் அபு ஸைத் அல் ஜன்னபி கருப்புக்கல்லை கொள்ளையடித்துக் கொண்டு, ஜம்ஜம் என்றும் நீரின் புனிதத்தையும் பாழ்படுத்தி இஸ்லாமிய உலகத்தை அதிர்ச்சிப்படுத்தினான்.
                           750 லிருந்து 1258 வரை ஆண்ட அப்பாஸிய       ( நபி (ஸல்)அவர்களின் வம்சத்து சுன்னிப்பிரிவு) ஆட்சியாளர்களை எதிர்த்து பல ஷியா பிரிவு குழுக்கள் தோன்றின. அதில் இஸ்மாயிலிக்கள் சமூகத்தைச் சேர்ந்த முதன்மைக் குழு முபாரகிய்யாஹ்ஆகும். அதன் தலைமை இமாம் ஜாஃபர் அல் சாதிக் என்பவர் தன் இரண்டாவது மகன் இஸ்மாயில் இப்ன் ஜாஃபரை கொன்றுவிட உத்திரவிடுகிறார். சிலர் அவர் தப்பி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இஸ்மாயிலிகள் அவர் இறந்து விட்டதாகக் கூறி அவரின் மூத்த மகன் முஹம்மது இப்ன் இஸ்மாயிலை இமாமாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கூஃபாவில் தங்கியிருந்த பெரும்பான்மையான முபாரகிய்யாஹ் குழுவினருடன் தொடர்பில் இருந்தார். முஹம்மது இப்ன் இஸ்மாயில் இறந்து போக, இதை ஏற்றுக்கொள்ளாத அதிகப்படியானோர் அவர் இறக்கவில்லை அவர் ஒரு மஹ்தி என்றார்கள். இதனால் முபாரகிய்யாஹ்வில் பிளவு ஏற்படுகிறது. இறந்துவிட்டார் என்று நம்பிய குறைவானோர் ஃபாத்திமிட் இஸ்மாயிலிகள் என்று ஆனார்கள்.
                           இந்த அதிகப்படியானோர்கள் அல் ஹுஸைய்ன் அல் அஹ்வாஸி என்பவர் தலைமையில் ஸலாமியாஹ்(தற்போதைய சிரியா) மற்றும் குஸெஸ்தான்(தென்மேற்கு பெர்ஷியா) என்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதன் தலைவர் குஸெஸ்தானின் கூஃபன் மன் ஹம்தானை தங்கள் பிரிவுக்கு மாற்ற, அவர் கர்மத்என்று பெயர் பெற்றார். கர்மத்தும் அவரின் மதவாதி மருமகன் அப்தன் என்பவரும் புதிய மஹ்தி வரப்போகிறார் என்று தென் ஈராக்கில் மத மற்றும் இராணுவ அமைப்புகளை தயார் படுத்தினார்கள். இது மேலும் ஏமன், பஹ்ரைன் மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் பரவியது. இவர்களின் போதிப்பு கவர்ச்சியாக இருந்ததைக் கண்ட புதியதாக ஷியா பிரிவில் சேர்ந்தவர்கள் இதில் இணைந்து கொண்டார்கள். பின்னாளில் கர்மாஷியன்கள் ஈரான் மற்றும் ட்ரான்ஸோக்சியானா வரை பரவியது. ஸலாமிய்யாவில் இருந்தவர்களுக்கும், கர்மத் அவர்களுக்கும் இடையே மஹ்தியின் இறப்பு சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்து கலவரம் நடந்து மருமகன் அப்தன் கொல்லப்பட்டார். கர்மத் புதிய இமாமாகி அப்துல்லஹ் அல் மஹ்தி பில்லாஹ் என்று 909 ல் வட ஆப்பிரிக்காவில் ஃபாத்திமிட்கள்(நபி(ஸல்)அவர்களின் மகளார்) ஆட்சியை கொண்டு வந்தார். அபூ ஸைத் ஜன்னபி அப்பாஸியர்களிடமிருந்து பஹ்ரைன் மற்றும் அல் ஹஸா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
                             அரேபிய பாலையைக் கடந்து மக்கா புனித யாத்திரை செல்பவர்களத் தாக்கி கொன்றார்கள். 906 ல் அதுபோல் 20,000 யாத்ரீகர்களின் வாகனத்தை வழி மறித்து கொன்றார்கள். 10 ம் நூற்றாண்டுகளில் பெரும் சக்தியாக வளர்ந்து ஓமனின் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். மத்திய கிழக்கிலும், பெர்ஷியாவிலும் வளர்ந்திருந்தார்கள். கர்மாஷியன்களுக்கு எதிராக இருந்த இஸ்மாயிலிகளிடம்  கெய்ரோவிலிருந்து கொண்டு கப்பம் பெற்றார்கள்.
                        கர்மாஷியன்கள் கைப்பற்றி இருந்த இடங்கள் நல்ல வளமான இடங்கள். அடிமைச்சந்தை வாணிபத்தால் வரவு இருந்தது. பழங்களும், பருப்பு வகைகளும் விளையும் தீவுகள் நிறைந்திருந்தன. 1051 ல் அல் ஹஸா விஜயம் செய்திருந்த நஸிரி குஸ்ரு என்பவர்,’அங்கு ஒரு பண்னையில் 30,000 எத்தியோப்பிய அடிமைகள் பணியில் இருந்தார்கள். ஹஸாவாசிகளுக்கு வரிவிதிப்பில் விலக்கிருந்தது. ஏழையாய் இருந்தவர்களுக்கும், வியாபாரச்சரிவு கண்டவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.’ என்று கூறினார். ஒரு கர்மாஷியன் ஆட்சியாளர் 920 வெளியிட்டிருந்த நாணயம் 20 ம் நூற்றாண்டு வரை ஹஸாவில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 931 ல் வந்த சனி கிரகத்தை கருத்தில் கொண்டு கர்மாஷியன்களின் தலைவர் அபூ தாஹிர் அல் ஜன்னபி உலகம் அழியப் போகிறது என்றார். ஸோரோஸ்ட்ரியன் மதத்தூதர் மறைந்து 1500 ஆண்டுகள் வேறு ஆகியிருந்தது. புது மெஹ்தி வரப்போகிறார் என்ற பரபரப்பு இருந்தது. அதை எதிர்நோக்கி அபூ தாஹிர் அல் ஜன்னபி தனக்கு நம்பிக்கையான ஒரு இளைஞரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
                                     திடீரென்று அந்த பெர்ஷிய இளைஞர் இஸ்லாமிய சட்டம், தொழுகை ஆகியவற்றைப் புறக்கணிக்கச் சொன்னார், இறைத்தூதர்கள், இமாம்களை கேவலப்படுத்தினார். பல கர்மாஷியன் தலைவர்களைக் கொன்றார். இது முதல் தூதர் ஆதம்(அலை)அவர்களின் பூமி என்றார். 80 நாட்களே ஆண்ட அந்த இளைஞரை அபூ தாஹிர் கொன்று விட உத்தரவிட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்படுத்திய பாதிப்பு கர்மாஷியன்களின் அமைப்புக்கு சரிவைத் தந்தது. மேலும் 976 ல் சில பகுதிகளில் அப்பாஸியர்கள் கர்மாஷியன்களைத் தோற்கடித்தார்கள். ஈராக் போன்ற பகுதிகளிலிருந்து வந்த கப்பங்கள் நின்று போயின. உள்நாட்டுப் பொருளாதாரம் வீழ்ந்தது. பஹ்ரைனிலும் அபு அல் பஹ்லுல் அல் அவ்வாம் என்ற தலைவர் ஷியாபிரிவிலிருந்து விலகி சுன்னிப்பிரிவை ஏற்றுக் கொண்டார். இப்படி பல வகைகளிலும் சரிந்த கர்மாஷியன்கள் ஹோஃபுஃப் பகுதியில் சுருங்கி போனார்கள். அப்துல்லாஹ் பின் அலி அல் உயூனி என்பவர் செல்ஜுக் படைகளின் உதவியுடன் தொடர்ந்து 7 ஆண்டுகள் ஹோஃபுஃப் பகுதி மீது படையெடுத்து கர்மாஷியன்களின் இறுதி ஆட்சியை சரணடைய வைத்தார்.