திங்கள், 6 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 12

                                                               ஒரு சமயம் அக்பரின் ஆசிரியர் ஹுமாயுனின் உறவுப்பெண் சலீமா சுல்தானாவுக்கு தவறுதலாக கை குலுக்க முயல, அக்பர் பெரிதாக நினைக்காமல் அவரை மன்னிக்க இருந்தார். ஆனால், பைராம்கான் கோபத்துடன் அவரை சிறையில் அடைக்கச் செய்தார். இன்னொருமுறை அர ண்மனைப் பணியாள் பீர்முஹம்மது என்பவனை செய்த தவறுக்காக கொல்ல சொன்னார். மேலும் நம்பிக்கைக்காக தன் ஷியா பிரிவைச் சேர்ந்த உறவுக்கார ர்களை பணியில் அமர்த்தி இருந்தார். மேலும் ஹுமாயுனின் சகோதரர் கம்ரா னின் மகன் அபுல் யாஸிமை மன்னராக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்பருக் குத் தகவல் போகிறது. இதனால் அக்பருக்கும், பைராம்கானுக்கும் இடையே ஆன உறவில் விரிசல் பலமாகிக் கொண்டு போனது. போதாக்குறைக்கு, ஒரு குழப்பம் உருவாக்கும் வகையில் ஹமீதாபானுபேகம், மஹம் அன்காஹ், ஆத ம்கான், ஷஹாபுதீன் மற்றும் அக்பர் ஆகியோர் வேட்டைக்காக பைனாஹ் போனபோது, அனைவரும் அக்பரை வற்புறுத்தி உடல் நலம் குன்றி இருக்கும் தாயாரைப் பார்க்க டெல்லி செல்ல வற்புறுத்தி அக்பரை அனுப்பிவிடுகிறார் கள்.
                                                    உடன்சென்ற மஹம் அன்காஹ் அக்பருக்கு திரும்பிச் சென்றவுடன் ஒரு உத்தரவை வெளியிட அறிவுரைக்கிறார். அதன்படி, அக்பர் டெல்லியிலிருந்து திரும்பியவுடன், நமது அரசின் நலனில் அக்கறையுள்ள அர சாங்கப் பணியாளர்கள் எல்லா பணிகளிலிருந்தும் முற்றிலுமாக விலக்கப் பட்டு புனித மக்கா பயணம் சென்று இறுதிகாலத்தை இறைவனை வணங்குவ தில் கழிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று அரசு உத்தரவொன் றைப் பிரப்பிக்கிறார். பைராம்கான் அந்த உத்தரவு தன்னைத்தான் பதவியிலி ருந்து விலக்குகிறது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, இரண்டு நம்பிக்கை யான அதிகாரிகளை அக்பரிடம் அனுப்பி, தான் என்றைக்கும் ஆட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றும் கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தன்னை அந்த உத்தரவிலிருந்து நீக்கவும் கோருகிறார். அக்பர் வந்த தூதுவர் களை சிறையில் அடைத்து, பீர்முஹம்மது என்ற அரசு ஊழியனிடம் செய்தி அனுப்பி பைராம்கானை மக்கா செல்ல பயணமாகும்படி கூறுகிறார். பைராம் கான் உணர்ச்சி வசப்பட்டு கலவரத்தில் இறங்குகிறார். ஆனால், விரைவில் கைது செய்யப்பட்டு அக்பரின் முன் நிறுத்தப்பட அக்பர் அவர் தனக்கு முன்பு செய்த நல்லவைகளை நினைத்து மன்னித்து விடுகிறார். அக்பரை அரண்ம னையில் கண்டதும் பைராம்கான் விழுந்து அழுதுவிடுகிறார். அக்பர் அவரை கைப் பிடித்து தூக்கி தன்னருகே வலப்பக்க இருக்கையில் அமர வைக்கிறார். அக்பர் அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் அழகிய அங்கியை அணிவித் து மூன்று மாற்று வாய்ப்புகளை அறிவித்து ஒன்றை  தேர்ந்தெடுத்துக் கொள்ள செய்கிறார்.
                                                    ஒன்று, அவர் பழைய பணியிலேயே இருப்பதானால் அரசு அவருக்கு உகந்த மரியாதை கொடுத்து அங்கீகரிக்கும். இரண்டு, அவர் விருப்பப்பட்டால் பெரிய மாகாணம் ஒன்றுக்கு கவர்னராக பதவி அளிக்கப் படும். மூன்று, புனித மக்கா பயணம் செல்வதாக இருந்தால் உரிய அரசு மரியா தையுடன் அனுப்பி வைக்கப்படுவார். பைராம்கான் ‘இந்த மூன்றை விட தாங் கள் என்னை மன்னித்து நான் முன்பு செய்த பணிகளுக்கு நன்றி செலுத்தி விட் டீர்கள் இதுவே போதும்’ என்றார். ஆனாலும், அக்பர் அவரை உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் புனித மக்காவுக்கு பயணம் அனுப்பி, அவர் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற வழிசெய்தார். ஆனால், மக்கா செல்லும் வழி யில் பைராம் கானால் பாதிக்கப்பட்ட எதிரி ஒருவனால், பதான் என்ற இடத்தில் கொல்லப்பட்டு இறந்து போனார். இது ஜனவரி மாதம் 1561 ல் நடந்தது. பைராம் கானின் மொகலாய அரசின் வெற்றிடம் பாவாடை அரசியலுக்கு (PETTY COAT POLITICS) சாதகமாகிப் போனது. டாக்டர் ஸ்மித் என்பவரின் கூற்றுப்படி, மஹம் அன்காஹ் அரசின் முக்கியமான உயர் பதவிக்கு வந்தார். ஒரு பெரிய பேரரசு க்கு தகுதியில்லாத மனசாட்சியற்ற பெண்மனி மஹம் அன்காஹ் யோக்கியம ற்றவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தினார். டாக்டர் ஸ்மித் உண்மை யின் அடிப்படையிலேயே மதிப்பிட்டிருக்கிறார்.
                                                               எல்லா விஷயத்திலும் அவளாள் அக்பரை மீற முடியவில்லை.  பைராம்கானின் விதி முடிந்த பிறகு, ராஜ்ஜியத்தில் மஹம் அன்காஹ்வே அக்பருக்கு பிரதான எதிரியாக இருந்தாள். இவள் தூண்டுதலின் பேரிலேயே ஒருவேளை அக்பர் முழுமையாக செயல்பட்டிருந்தால், தனக்கெ திராக புரட்சியில் ஈடுபட்ட பைராம்கானை கனிவாக நடத்தி இருக்க மாட்டாள். இவள் தன் மகன் ஆதம்கானை எந்த உயர்பதவியிலும் அமர்த்த முடியவில் லை. ஒரு முறை ஆதம்கானை படைக்கு தலைமையாக்கி மால்வா பகுதிக்கு அனுப்பினார். அவன் அந்தப் போரையே நாசப்படுத்தினான். உடனே அக்பர் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். அடுத்த முறை ஆதம்கான் ஷம்சுத்தீன் அத்கா கானை கொலை செய்து விட, அக்பர் நீதிபதிகளிடமும், வழக்கறிஞர் களிடம் அவன் தாயாரின் போக்கில் செயல்பட வேண்டாம் என்று கூறி, நேர் மையான முறையில் தீர்ப்பளிக்கச் சொன்னார். அதன்படி, ஆதம்கானை கோட்டையின் மதில் சுவரிலிருந்து இரண்டுமுறை தலைகீழாக வீசப்பட்டு தலை சிதறி சாகடிக்கப்பட்டான். ஒருவேளை அக்பர் முழுக்க மஹம் அன்கா ஹ்வின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.
                                                  அக்பர் டெல்லி தலைநகரின் அரியணையில் இருந்து தானே நேரடியாக விவகாரங்களை கவனித்து ஆட்சி நடத்தினார். ஆட்சியில் அவ்வப்போது தோன்றிய கலவரங்கள், புரட்சியை அடக்கினார். 1560 ல் பெங்கா லில் இருந்து முஹம்மது ஷா ஆதிலின் மகன் இரண்டாம் ஷேர்ஷா டெல்லி யைக் கைப்பற்ற போரிட்டான். அக்பரின் தளபதி கான்ஸமான் என்பவரால் படுதோல்வி அடைந்து, யானைகள் மற்றும் போர்தளவாடங்களை ஒப்படைக்க மறுத்தான். அக்பர் நேரடியாக ஜான்பூர் சென்றார். அக்பர் வருவதைக் கேள்விப் பட்ட அவன் அவருக்குத் தலைவணங்கி எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத் தான். அக்பரின் வழக்கமான தாராள மனம் ஜான்பூரை இரண்டாம் ஷேர்ஷாவி டமே திரும்ப கொடுத்துவிட்டார். உஸ்பெஸ்கிஸ்தான்களை அடக்கினார்.
                                                             அக்பர் பரந்த மொகலாயப்பேரரசு இந்தியாவில் அமைய வேண்டுமானால், ராஜபுத்திரர்கள் போன்ற தாய்நாட்டு வீரர்களின் அரவணைப்பு வேண்டும் என்பதை உணர்ந்தார். அதனால் அவர்களுடன் இரத்த உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அதன்படி முதலில் அம்ப ரைச் சேர்ந்த பார்மல் கஸ்வாஹா என்ற ராஜபுத்திரரின் மகளை திருமணம் செய்து கொண்டார். தொடந்து ஜெய்சல்மார், பிகானிர் இளவரசிகளையும், இள வரசர் சலீமுக்கு ராஜா பக்வாந்தாசின் மகளையும் திருமணம் செய்து வைத் தார். திறமையான ராஜபுத்திரர்களை சமூக மற்றும் இராணுவத்துறைகளில் உயர்பதவியில் அமர்த்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். ராஜா தோடர் மால், ராஜா பர்மால், ராஜா பக்வான்தாஸ் மற்றும் ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் இராணு வத்தில் உயர்பதவியில் இருந்து அனுபவித்தார்கள். மேலும், பாதிக்கும் மேற்பட்ட படை வீரரகளும் இந்துக்களாகவே இருந்தனர். இந்துக்கள் சுதந்திரமாக கோவில்களில் வழிபடச் செய்தார். குழந்தை திருமணங்களை தடை செய்து, சதி ஏறுதல், விதவைத் திருமணங்களை ஆதரித்தார். முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஜிஸ்யா வரியை நீக்கினார். இதனாலேயே மொகலாய பேரரசு நான்கு தலைமுறையாக ஆட்சி செய்ய ஏதுவாய் இருந்ததாக டாக்டர் பேனி பிரசாத் கூறுகிறார்.
                                                           அக்பர் ஃபதேபூர் சிக்ரியில் ‘இபாதத் கானா’ என்ற அறிவுஜீவிகளுக்கான அமைப்பொன்றை ஏற்படுத்தினார். கோவாவிலிருந்த போர்ச்சுகீசியர்களுக்கு அவர்களின் மதத்தில் இருந்த சிறந்த கிறிஸ்தவமத ஞானம் உள்ளவர்களை கலந்து கொண்டு கருத்துக்களை தெரியபடுத்த வேண் டினார். அவர்களும் இந்தியப் பேரரசின் மன்னரை கிறிஸ்துவராக மாற்ற அரு மையான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதென்று ஃபாதர் ருடோல்ஃப் அக்வாவி வா மற்றும் ஃபாதர் மான்செர்ரட் தலைமையில் ஒரு குழுவை ஆர்வமுடன் அனுப்பி வைத்தனர். அக்பர் அவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தி, ஆக் ராவில் அவர்களை தேவாலயம் கட்டிக்கொள்ள அனுமதித்தார். ஏசுநாதர் மற் றும் அன்னை மேரியின் படங்களின் மீது ஆர்வமாய் இருந்தார். தன் மகன் சலீமை அவர்களின் சபைக்கு அனுப்பி கிறிஸ்தவ போதனைகளைக் கேட்கச் செய்தார். ஆனால், சலீமுக்கு இஸ்லாமைத் தவிர வேறுமதத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. மூன்று ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்த கிறிஸ்தவகுழு அக்பரை மதமாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது. 1590 ல் இரண்டாவது குழு வந்து மூன்று ஆண்டுகள் முயன்றது அதுவும் அக்பரை மதம் மாற்றம் செய்ய முடியாமல் திரும்பியது.
                                            மூன்றாவது கிறிஸ்தவகுழு லாஹூருக்கு வந்தது. அது முடிந்தமட்டும் மக்களில் சிலரை மதம் மாற்றம் செய்து, லாஹூரிலும், ஆக்ரா விலும் தேவாலயங்களைக் கட்டியது. மேலும் போர்ச்சுகீசியர்களுக்கு சாதகமா க வாணிப ஒப்பந்தம் ஒன்றை மொகலாயப்பேரரசுடன் ஏற்படுத்திக் கொண்டது. அக்பர் சிறு பிரதேசங்களையும் இணைத்து நிலையான அதிகாரமிக்க மத்திய ஆட்சியைக் கொண்டு வர ஆர்வம் கொண்டார். சிறு பிரதேசங்களின் ஆட்சியா ளர்களால் அவ்வப்போது எழும் பிரச்சினை இதனால் அடங்கிப் போகலாம் என்று எண்ணினார். 1564 ல் கோந்த் வானா என்ற ராஜபுத்திர இடத்திற்கு அசாஃப் கான தலைமையில் படையனுப்பினார். கோந்த்வானாவை சிறுவயது மகனின் சார்பாக துர்காவதி என்பவள் ஆண்டுவந்தாள். அவள் முடிந்த மட்டும் போராடி, போர்களத்திலேயே தற்கொலை செய்துகொண்டாள். பெருவாரியான போர் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இடையில் உஸ்பெஸ்கிஸ்தானின் கலவரத் தால் சற்று பாதிப்படைந்த ராஜபுத்திர பிரதேசங்களை சரி செய்ய எண்ணினார்.
                                                ராஜஸ்தானை ராணாசிங்கின் மகன் உதய்சிங் ஆண்டு வந்தான். இவன் தந்தையின் தரத்திற்கு தகுதி இல்லாதவனாக இருந்தான். சித் தூர் ராணாவும் அக்பரிடம் திருமண உறவு ஏற்படுத்திக்கொள்ள மறுத்தார். அக் பர் என்றுமே நிலையான இந்தியாவை ஆளவே ஆசைப்பட்டார். அக்பர் உதய்சி ங்குடன் போரிட்டார். உதய்சிங் 8000 வீரர்களை ஜெயமால் மற்றும் பட்டா என்ப வர்கள் தலைமையில் போரிட விட்டு விட்டு தப்பித்து மலைப்பிரதேசத்திற்கு ஒடினான். ராஜபுத்திர வீரர்கள் கோட்டைக்குள் பதுங்கி இருந்தபடி போரிட்ட னர். 1567 ல் கோட்டையை கைப்பற்றிய மொகலாயப் படைகள் சுரங்கம் இருப்ப தை கண்டுபிடித்தனர். அக்பர் பொறியாளர்களை வைத்து சுரங்கங்களை ஆய்வு செய்தார். வெடிவைத்து சுரங்கத்தை தகர்த்ததில் 500 வீரர்கள் இறந்து போயினா ர்கள். சித்தூருடன் ரன்தம்போர் மற்றும் கலிஞ்சர் என்ற இரண்டு கோட்டைக ளும் கைப்பற்றப்பட்டன. இன்னொரு ராஜபுத்திர மன்னர் ராஜா ராம் சந்திரா ராஜஸ்தானின் பலம்வாய்ந்த இரு கோட்டைகள் மொகலாயர்கள் வசம் வீழ்ந்த தைக் கேள்விப்பட்டவுடன் அக்பரிடம் சரணடைந்தார். இவரைத் தொடர்ந்து அனைத்து சிறு ராஜபுத்திர மன்னர்களும் அக்பரிடம் சரணடைந்தனர்.
                                                         தப்பிச் சென்ற உதய்சிங் உதய்பூர் என்ற நகரத்தை தனியாக உருவாக்கி ஆண்டுவந்தான். 1527 ல் அவன் மரணமடைந்தவுடன், அவன் மகன் ராணா பிரதாப் சிங் மன்னனாகி, பேரரசுக்கு எதிரானதைவிட, இஸ்லாமுக்கு எதிரானான். இந்துக்களிடம் மத உணர்வைத் தூண்டிவிட்டான். தான் முஸ்லீம்களை இந்த பூமியை விட்டு விரட்டுவேன் என்று சபதமிட்டான். மொகலாயப்படையுடன் ஒப்பிடும்போது இவனின் படைகள் பலமற்று இருந்த து. இவன் முறையற்ற போரின் மூலம் மேவாரை வென்றான். இரண்டாம் அசாஃப்கான் தலைமையில் பெரும் படையுடன் கோல்கொண்டா கோட்டை யை முற்றுகையிட்டான். கடுமையான போருக்குப் பிறகு, காயமடைந்து மலைப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டான். அக்பர் லாஹூரில் தூரன் என்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய தவிர்க்க முடியாத காரணத் தால் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மீண்டும் ராணா பிரதாப் சிங் 1578 ல் வெளியில் வந்து கோந்த்வானா, உதய்பூர் மட்டும் முன்பு இழந்திருந்தவன் சித்தூர், அஜ்மீர், மண்டல்கர் தவிர மொத்த மேவாரை யும் வென்றெடுத்தான்.  1597 ல் ராணா பிரதாப் சிங் இறந்துபோனான்.
                                     ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக