வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 27

1674 ல் மொத்த மஹாராஷ்டிராவையும் பிடித்து, ராய்கரை தலைநகராக்கிக் கொண்டு தானே முடிசூட்டிக் கொண்டான். வேத சாஸ்திர நடைமுறைகளை தனது பிரதேசத்தில் கொண்டு வந்து பழைய இந்து ஆட்சியை நினைவு படுத்தி னான். ஆலம்கீர் வடமேற்கில் ஆஃப்கான் பழங்குடியினரின் பிரச்சினையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, 1676 லிருந்து 1680 வரை சிவாஜி தெற்கில் மேலும் சில பகுதிகளை வென்றான். ஜின்ஜி, வேலூர் மற்றும் விஜயநகர பேரரசின் சில பகுதிகளையும் வென்று இறுதியாக ஔரங்கஸேப்பை எதிர்க்கத் தயாரானான். ஆனால், 1680 ல் தன் ஐம்பத்தி மூன்றாவது வயதில் மரண மடைந்தான்.
பல மொகலாய தளபதிகளால் டெக்கானை வெல்ல முடியாத பட்சத்தில் ஔரங்கஸேப் தானே முன் வந்தார். ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டு, தனது முன்னோர்கள் வழியில் போரிட்டார். வரிசையாக பாமனி பேரரசு, பிதார், அஹ்மத்நகர், பிரார் ஆகியவற்றை தந்தையின் ஷாஹ்ஜ ஹானி படைகளின் உதவியுடன் கைப்பற்றினார். எஞ்சியது பலகாலமாக போராடி வரும் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா மட்டுமே. அதற்கு காரணம் அந்த சுல்தான்கள் ஷியா பிரிவு இஸ்லாமிய கொள்கைகளை உடையவர்கள். பெரும் கப்பத்தொகையை மொகலாயர்களுக்கு செலுத்தாமல் வைத்திருந் தார்கள். மராட்டியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மொகலாயர்களை மிரட்டி வந்தார்கள். மொகலாயர்களை விட பெர்ஷியாவின் ஷா தங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாய் காட்டிக் கொண்டார்கள். அவர்களின் பூமி மிகவும் வளம் கொழிப்பதாக இருந்தது. ஔரங்கஸேப் பெரும் படையை இரண்டாகப் பிரித்து ஒன்றை இளவரசர் முஃஅஸ்ஸிம் தலைமையில் மராட்டியர்களை எதிர்க்கவும், இன்னொன்றை இளவரசர் ஆஸம் தலைமையில் பிஜப்பூரை எதிர்க்கவும் அனுப்பினார். முஃஅஸ்ஸிம் கொங்கனின் உள்பகுதி வரை சென்று பலத்த இழப்புடன் திரும்பினார். இருந்தாலும் ஷோலாப்பூரை வென்றார். 1684 ல் முஃஅஸ்ஸிம் பிஜப்பூரின் படையெடுப்பில் தந்தையிடம் சுல்தானிடம் சமாதானமாகப் போக வேண்டி தொந்தரவு செய்தார். பல பிரச்சினைக்குப் பிறகு, ஔரங்கஸேப் தானே சென்று 1686 ல் பிஜப்பூரைக் கைப்பற்றினார். அப்போது அங்கு சுல்தானாக சிக்கந்தர் ஆதில் ஷா இருந்தார். 
அடுத்து கவனம் கொல்கொண்டாவின் மீது திரும்பியது. அங்கு பல இந்து மந்திரிகள் இருந்தார்கள். குறிப்பாக வைஸ்ராயர்கள் மடன்னா மற்றும் அகன்னா இவர்கள் இருவரும் முஸ்லீம்களிடத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்கள். மன்னரும் மொகலாயர்களுக்கு எதிராக சம்பூஜிக்கு ஆதரவளித்தார். மொகலாயப் போரில் பிஜப்பூருக்கும் உதவி செய்தார்கள். அதன் சுல்தான் அபுல் ஹசன் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார். மொகலாயர் களுக்கு கோல்கொண்டாவை வெல்வது கடுமையாக இருந்தது. அதன் தளபதி அப்துர் ரசாக் அரணாக நின்று சுல்தானைக் காத்தார். ஷியா பிரிவு அரசு களிலேயே தைரியமான தளபதி அப்துர் ரசாக். ஒற்றை வீரராக இருந்து நேருக்கு நேர் மோதினார். இறுதியில் அவர் வீழ்ந்த போது எழுபது இடங்க ளிலே காயமுற்றிருந்தார். முடிவில் அபுல் ஹசன் சிறைபிடிக்கப்பட்டு கோல்கொண்டா பேரரசுடன் இணைக்கப்பட்டது. தளபதி அப்துர் ரசாக்கின் குணநலன்களையும், வீரத்தையும் நன்கறிந்திருந்த ஔரங்கஸேப் தனது தனிப்பட்ட மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார். கோல்கொண்டா கோட்டையைக் காக்க அவர் காட்டிய வீரத்திற்காக ஔரங்கஸேப் கோட்டையை கைப்பற்றவில்லை. அடுத்து சிவாஜிக்குப் பிறகு மராட்டிய மன்னனான அவன் மகன் சம்பூஜி பெரும் குடிகாரனாக இருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தையும், செல்வங்களை பெண்களுக்கு செலவழிப்பதிலும் மூழ்கி இருந்தான். ஆட்சி நிர்வாகத்தை மராட்டியர்கள் அறிந்திடாத காவி குலேஷ் (காலூஷா) என்ற அமைச்சர் கவனித்து வந்தார். சம்பூஜியின் சரித்திரத்தை நாம் தவித்திடுவோம். இவனது வீரர்கள் வழக்கம் போல் கொள்ளையடித்து தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்கள். இது மொகலாயர்களுக்கு சாதகமாக இருக்க 1689 ல் வெற்றி பெற்றார்கள். சம்பூஜி சங்காமேஷ்வரா என்ற இடத்தில் குடிபோதையில் பெண்களுடன் நீராடிக் கொண்டிருக்கும் போது மொகலாய தளபதி தகர்ரப் கானால் கைது செய்யப்பட்டான். மராட்டிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சம்பூஜியின் மகன் சாஹுவை ஔரங்கஸேப் நன்றாக நடத்தி ஹானஸ்ட் என்று கூறி கௌரவித்தார்.
மராட்டியர்கள் பலவீனமடைந்தார்கள். பேரரசர் ராஜபரிவட்டத்துடன் பூனா வருகை அவர்களிடத்திலே பயத்தை உண்டுபண்ணியது. மேலும் ஔரங்க ஸேப் இராணுவத்தை அனுப்பி தலைநகர் ராய்கரை கைப்பற்றினார். மராட்டிய தலைவர்கள் ஒன்றுகூடி இறந்து போயிருந்த ஐந்து வயதே ஆகி இருந்த சம்பூஜியின் மகன் இரண்டாவது சிவாஜியை ராஜாவாக தேர்ந்தெடுத்து, ராஜாராம் அவருக்கு மேலிருந்து ராஜ்ஜியத்தை கவனித்துக் கொள்வார் என்று முடிவு செய்திருந்தார்கள். ராய்கரை பிடித்த பின் மொகலாயர்கள் மிரிசி மற்றும் பன்ஹாலா கோட்டைகளைப் பிடித்தார்கள். இளம் சிவாஜியையும் சிறை பிடித்தார்கள். ராஜாராம் ஜின்ஜிக்கு ஓடிப்போய் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். ராஜாராமை எதிர்த்து ஸுல்ஃபிகர் கான் என்னும் தளபதியை ஔரங்கஸேப் அனுப்பினார். அவர் ஜின்ஜியை வெல்ல முடியாமல் திரும்பி னார். மொகலாயர்களும் பல பிரதேசங்களை வென்றிருந்ததால் அவைகளைக் காக்க படைகள் பல கூறாகப் பிரிந்தது. ஸுல்ஃபிகருக்கு ஜின்ஜியில் பல ஆண்டு ஆனதால், இந்த தருணத்தை பயன்படுத்தி மராட்டியர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவியதால் இளவரசர் காம் பக் ஷை ஔரங்கஸேப் சிறையிலடைத்தார். ஸுல்ஃபிகார் கானை திரும்ப அழைத்துக் கொண்டு, 1694 லிருந்து 1697 வரை பல தளபதிகளை மாற்றியும் ஜின்ஜியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஔரங்கஸேப் பிராஹமாபுரியில் தங்கி இருந்து மராட்டியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கவனித்து வந்தார். மராட்டிய தளபதிகளிடையே பிரச்சினை வர மொகலாயர்கள் சில பகுதிகளை வென்றார்கள். ஜின்ஜி வீழ்ந்து விட ராஜாராம் சதாராவில் அரசு அமைத்துக் கொண்டார். அங்கும் மொகலாய படை விரைய ராஜாராம் குடும்பத்துடன் கிலோனா தப்பிச் சென்றார். ஓடிக்கொண்டிருந்த ராஜாராம் சிங்காரில் இருந்த போது 1700 ல் மரணமடைந்தார்.
ராஜாராம் இற்ந்த பிறகு, அவர் மகன் கர்ணா ராஜாவானார். அவர் குறுகிய நாளில் சின்னம்மை நோய் கண்டு மரணமடைந்தார். சிவாஜியின் விதவை மனைவி தாரா பாய் மூன்றாவது குழந்தையை மூன்றாவது சிவாஜியாக தேர்ந்தெடுத்து தானே அவனுக்கு பின் நின்று ஆட்சி புரிந்தார்.  இவள் வீறு கொண்டு மொகலாய படைகளை எதிர்க்க கிளம்பினாள். பெண்ணாகக் கிளம்பியதால் மராட்டியர்களிடம் ஒரு வேகம் வந்தது. இது மொகலாய படைகளை சிதறடித்தது. ஔரங்கஸேபுக்கு எண்பத்து நான்கு வயதான போது பிரச்சைனைகள் நாற்புறமும் சூழ்ந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் பலம் பெற ஆரம்பித்தார்கள். புர்ஹான்பூரில் ஜாட்கள் மொகலாயர்களுக்கு இணங்காமல் புரட்சியில் ஈடுபட்டார்கள். இச்சூழ்நிலையில் 1707 ல் ஔரங்கஸேப் மரண மடைந்தார். மராட்டியர்கள் காணும் இடமெல்லாம் மொகலாய வாகனங்களை கொள்ளையடித்தார்கள். சீக்கியர்கள் சுதந்திர பூமி வேண்டி விரைந்தார்கள். ஆங்கிலேயர்களும் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி பலமாகிக் கொண்டிருந்தார்கள். ஜஹாங்கீரின் காலத்தில் தர்பாருக்கு வந்த சர். தாமஸ் ரவ் பேரரசால் வாணிபம்செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் 1639 ல் சந்தேரி ராஜாவிடம் ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து மதராஸில் கோட்டையுடம் கூடிய தொழிற்சாலையைக் கட்டி டச்சுக்காரர்களை எதிர்த்தனர். அதுதான் இன்றைக்கும் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எல்லா மொகலாய மன்னர்களை விட ஷாஜஹான் ஆங்கிலேயர்களை 1650-51ல் ஹூக்லி, காசிம்பஜார் ஆகிய இடங்களில் பல தொழிற்சாலைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தார். எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் அனைத்து தொழிற்சாலைகளையும் சூரத் நகருக்கு மாற்றிக் கொண்டார்கள். 1666 ல் சிவாஜியுடனான போரில் இறக்குமதிக்கான வரியை மொகலாயர்களிடம் குறைத்ததற்காக ஔரங்கஸேப் பாராட்டினார். 1668 ல் மேற்குகரைப் பகுதிகளான பம்பாய், சால்செட்டில் பலமாக இருந்தார்கள். தற்போது சொந்த துறமுகம் இருந்த அந்த பகுதியில் மராட்டியர்களுக்கும், டச்சுக்காரர்களுக்கும் பயந்தவர்களாக இருந்தார்கள்.
1685 ல் அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த ஷாயுஸ்தா கான் ஆங்கிலேயர்களுக்கு சில வரிகளை விதித்தார். அதை செலுத்த ஆங்கிலேயர் கள் மறுத்தனர். இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே நிர்வாகப் போர் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தின் மன்னர் இரண்டாம் ஜேம்ஸ் ஆதரவளித்தார். அவர்கள் பத்து கப்பல்களில் சென்று சிட்டகாங்கை பிடித்தனர். சர். ஜான் சைல்ட் என்பவன் மொகலாய கப்பல்களைத் தாக்கினான். இதனால் ஆலம்கீர் அவர்களை சிறைபிடித்து சூரத், மசூலிப்பட்டனம் மற்றும் ஹீக்லியில் இருந்த தொழிற்சாலைகளை மூட வைத்தார். அந்நிய வாணிபத்தை தடை செய்தார். சில நாட்கள் கழித்து அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த இப்ராஹீமிடம் ஆங்கிலேயர்கள் மீது கடுமை காட்ட வேண்டாம் என்றார். இதனால் இப்ராஹீம் ஜாப் சர்னாக் என்ற ஆங்கிலேயரை திரும்ப அழைத்து 1690 ல் ஹூக்ளி கரையில் அவர்களுக்காக தனி பகுதியை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தார். அப்படி அவர்கள் உருவாக்கிய நகரம் தான் தற்போதைய கல்கத்தா நகரம். ஹூக்ளி ஆற்றின் இருந்த சிறு கிராமமான காலீகதா என்ற பெயரையே இந்நகரம் பெற்றது. சிறியதாக துவங்கிய இந்த கல்கத்தா நகரம் பின்னாளில் விரிவாக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நகரமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கால் பதிக்க சூரத்தின் தலைவராக இருந்த ஜான் சைல்ட் மொகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தான். ஆனால் அமைதி வேண்டி சமாதானம் ஆனான். பேரரசர் அவர்களை மன்னித்து 1,50,000 ரூபாய் செலுத்தி விட்டு மீண்டும் வாணிபம் செய்து கொள்ள அனுமதித்தார். 1690 ல் உச்சத்தில் இருந்த ஔரங்கஸேப் ஏறக்குறைய இந்தியாவை ஆண்டார். வடக்கில் காஷ்மீர், தெற்கில் கேப் கொமோரின், மேற்கில் காபூல், கிழக்கில் சிட்டகாங்க் வரை பரவி இருந்தார். 
ஆட்சி நிர்வாகத்தில் முன்னோர்களின் நடைமுறையையே கடை பிடித்தார். அதிக நிலப்பரப்புகளை வென்றெடுத்த பின் எல்லைகளை மாற்றி அமைத்தார். பெங்கால், முல்டான், காபூல் ஆகியவை பெரிய மாகாணங்களாக இருந்ததால் தனித்தனி கவர்னர்களை நியமித்தார். அரசியலையும், மதத்தையும் தனியாக்கினார். சட்டங்கள் திருக்குரானின் வழிகாட்டுதல் படி அமைத்தார். அக்பரின் தீனே இலாஹி நடைமுறைகளை புறந்தள்ளி இஸ்லாமிய நாட்காட்டியை பின் பற்றினார். மதத்திற்கு ஒத்துவராத அனைத்து வரிகளையும் நீக்கினார். இந்து புனிதஸ்தலங்களுக்கான வரியை நீக்கி ஜிஸ்யாவை கொண்டு வந்தார். ஆனால் அதில் கடுமையைக் காட்டவில்லை. விபச்சாரம், மது மற்றும் போதை பழக்கங்களை ஒழித்தார். விபச்சாரிகளை நகரை விட்டு வெளியேற்றி தனியாக ஒரு இடத்தில் சிவப்பாடை மட்டுமே உடுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ‘லால் பீபி’ என்று அழைக்கப்படச் செய்தார். மக்களின் பணத்திற்கு மன்னர் பொறுப்பானவராக இருந்தார். ‘பெய்த் உல் மால்’ என்னும் இஸ்லாமிய முறைப்படி அமைத்திருந்தார். நீதி வழங்குவதற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் ‘தீவான் இ காஸ்’ என்ற மண்டபத்தில் காலை எட்டு மணி முதல் மதியம் வரை இருப்பார். (இதை இப்போதும் மத்திய அரசு பாஸ்போர்ட் போன்ற பலதுறைகளில் அதாலத் தின் (தீர்ப்பு நாள்)என்று பழக்கப்படுத்தி வருகிறது.) இதில் ஔரங்கஸேபுக்கு சிறப்பு வாய்ந்த ஒரு குழு உதவியாக இருந்தது. ஒவிங்க்டன் என்பவர், ஔரங்கஸேப் நீதியின் கடல், சமமான நீதியைத் தருவதில் குறியாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வமாக இருந்தார். எல்லா நகரங்களிலும் பல்கலைக் கழகங்களை நிறுவினார். சிறிய நகரங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்தார். ஔரங்கஸேப் ஆட்சியில் டெல்லி, ஜொன்பூர், சியால்கோட் மற்றும் தட்டா ஆகியவை கல்வியில் முதல்நிலையில் இருந்தது. ஹாமில்டன் என்பவர், ‘தட்டா நகரம் நானூறு கல்லூரிகளை நிறுவி மதக் கல்வி, தத்துவம், அரசியல் போன்ற துறைகளை இளைஞர்களுக்கு போதித்து வந்தது’ என்று பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய இலக்கணம் நன்கு இருந்தது. குறிப்பாக ராஜவம்சத்தினர் கடந்த கால அரசியல், பொதுக் கல்வி, வெளிநாட்டு மொழிகள் கற்றுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆட்சிக்காலம் முழுதும் பிரச்சினைகள் சூழ்ந்திருந்ததால், கலையை இவர் முக்கியமாக கருதவில்லை. இவர் காலத்தில் டெல்லி கோட்டையில் பளிங்கு கல் மசூதியும், லாகூரில் பாதுஷாஹி மசூதியும் சிறப்பானது. மற்றபடி இசை, ஓவியங்களில் அவ்வள வாக ஆர்வமில்லாதவர். அக்பரின் காலத்தில் ஏறக்குறைய ஊக்குவிக்கப்பட்டு இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் எல்லா காலகட்டத்திலும், நிகழ்ச்சிகளிலும், புனித தலங்களிலும் தலைவிரித்து ஆடிய இசையை தடை செய்தார்.அக்பரின் காலத்தில் தான்சேன் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை கொண்டிருந்த மொகலாய சபையை அறவே இசை இல்லாமல் செய்தார். ஒரு வெள்ளிக்கிழமை ஔரங்கஸேப் அறியும் வண்ணம் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் அழுதவாறு கல்லறையை நோக்கி ஊர்வலமாகச் சென்று இசையைத் தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக்கேள்விப்பட்ட ஔரங்கஸேப் அவர்களின் உறவினர்கள் நல்லவிதமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாரா என்று பார்க்கச்செல்லும் யாரையும் தடை செய்யவேண்டாம் என்று அமைதியாகக் கூறிவிட்டார். சில ஓவியர்கள் போர் நடவடிக்கை ஓவியங்களை வரைந்திருந்தனர். தோட்டங்களில் லாகூரில் பாதுஷாஹி மசூதியுடன் இணைந்த அழகிய தோட்டமும், டெல்லியில் ரோஷனாரா பேகம் தோட்டம், லாகூரில் சௌபுர்ஜி பாக், நவான்கல் பாக் மற்றும் பின்ஜார் தோட்டம் ஆகியவை இவர் உருவாக்கியவை. இவரின் தோற்றம் பேரரசருக்கு உரிய கம்பீரம் இருக்கும். சிறந்த மதப்பற்றுள்ளவர். பொது வாழ்க்கையில் ஆடம்பரமில்லாத மிக மிக சாதாரணமானவர். கடிதங்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். ஏழைகளின் பாதுகாவலானாக இருந்தார். இவரின் குணாதிசயங்களுக்காகவே ஒரு பெரும் கட்டுரை எழுதலாம். புகழ் பெற்ற நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு, மிகவும் தூய்மையான ஒரு இஸ்லாமிய மன்னர் என்று உலகம் போற்றியது. 
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியைத் தோற்றுவித்தாலும் மாற்று மதத்தவருக்கு பெரும் மரியாதை செய்தார். இஸ்லாமியர்களாய் இருந்தாலும், மனம் போல் தன் முன்னோர்கள் ஆண்டதால் அப்போதைய இந்துக்கள் பல மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டினார்கள். அதற்கு அப்போதைய மொகலாய ஆட்சியின் இந்து அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்கள். அப்படிப்பட்ட கோவில்களைத் தான் இடிக்கச் சொன்னார். ஆனால், பாவிகள் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவரான ஔரங்கஸேப்பை அரசியல் ஆதாயத்திற்காக இந்துக்களுக்கு எதிரானவர் என்று சொல்லி வருகிறார்கள். இழிவான சில ஹிந்துக்களைத் தவிர பெர்னியர், நிக்கோலாவ் மனுச்சி, கீன், ஓர்மி போன்ற பல ஆசிரியர்கள் ஔரங்கஸேபை புகழ்ந்து எழுதியுள்ளனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக