செவ்வாய், 14 ஜூலை, 2015

சாதியன்கள் வரலாறு 2

இவரை இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மது என்பார்கள். இவர் ஆட்சிக்கு வந்தவுடன் தன் சகோதரரைக் கொன்று டட்லாவில் கவர்னராய் இருந்த முலாய் எந் நாசர் என்பவரை சிறையில் அடைத்தார். வெளியேறிப்போய் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த  அபு மர்வான் அப்த் அல் மாலிக் ஓட்டோமான்களின் அல்ஜீரியாவில் இருந்தார். இவர் ஓட்டோமான் படைகளின் உதவியுடன் மொரோக்கோவில் ஊடுருவி இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மதுவிடம் இருந்து ஃபெஸ் பகுதியைக் கைப்பற்றினார். பின் வரிசையாக அல் ருக்ன், ஜன்டக் அல் ரைய்ஹான் டரூடண்ட் ஆகியவற்றையும் வென்றார். 1578 ல் அல்கஸர்க்யூவிர் போரில் அபு மர்வான் அப்த் அல் மாலிக் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மது இருவரும் மரணமடைந்தார்கள். அப்த் அல் மாலிக் இறக்கும் முன் தன் சகோதரர் அஹ்மத் அல் மன்சூரை ஆட்சிக்கு முன் மொழிந்திருந்தார்.
சாதியன் பேரரசின் புகழ்பெற்ற ஆட்சியாளராக சுல்தான் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் 1578 ல் ஆட்சிக்கு வந்தார். இவரின் பலமான, சாதுரியமான இராணுவத் திறமையால் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் நன்கு அறியப்பட்டார். இவர் முஹம்மது அஷ் ஷெய் கின் ஐந்தாம் மகனாவார். இவர் போர்ச்சுகீசியர்களிடம் அவர்களின் வீரர்கள், தளபதிகள் போரில் பிடிபட்டால் பணயத்தொகை விட மாட்டேன் என்று கூறினார். அதன்படி நிறைய வீரர்கள் இவரிடம் பிடிபட பெரிய பணயத் தொகைகளை அடிக்கடிப் பெற்றார். மர்ரகெஷில் ‘எல் பாடி’ என்னும் பிரமாண்டமான அரண்மனையைக் கட்டினார். 200 மீட்டர் நீளத்தில் பெரிய முன்புற முற்றம் வைத்து இந்தியாவிலிருந்து பணியாட் களையும், ஐயர்லாந்து ,இத்தாலியிலிருந்து பளிங்கு கற்களையும் வரவழைத்துக் கட்டினார். ஐயர்லாந்தில் அப்போது சர்க்கரை இல்லை. அதற்கு பதில் சர்க்கரைக் கொடுத்து பளிங்கு கற்களை வாங்கினார். ஆயிரம் தூண்களைக் கொண்டும், பணயத்தொகை செலுத்த முடியாத ஐரோப்பிய வீரர்க ளைக் கொண்டும் பதினாறு ஆண்டாக இந்த அல் பாதி அரண்மனையைக் கட்டினார். மொரோக்கோ மக்களின் ஒவ்வொருவரின் உழைப்பும் இதில் இருந்ததாம். இவர் அரண்மனைப் பணியை பார்வையிட வரும் போதெல்லாம் பணியாளர்களுக்கு சிறப்புத் தொகை கொடுப்பாராம். தூண்களில் தங்க இலைக ளை பதித்தாராம். அரண்மனைக்குள் நீச்சல் குளம், தோட்டங்களையும் அமைத்தாராம். அக்கால கட்டத் தில் மிகப்பெரிய பொருட் செலவில் ஆன கட்டுமானம் இந்த அல் பாதி அரண்மனையாம். பூமியின் சொர்க்கம், உலகின் அதிசயம் என்று போற்றப்பட்டது. இதை நேரில் பார்த்த ஒரு ஐரோப்பியர் அரண்ம னைப் பணி நடந்த ஒவ்வொரு நாளும் எந்நேரமும் 1,400 பணியாட்கள் வாசலில் தங்கங்களை சுத்தி யல் கொண்டு வடிவமைப்பார்களாம். ஒரு வண்டியில் 3000 லிருந்து 3600 கிலோ வரை கொள்ளளவு கொண்ட தங்கத்தை 36 வண்டிகளில் கொண்டு வந்தாராம். இதன் கலைப்படைப்பால் உலகின் எட்டாவது அதிசயமாக இது கருதப்பட்டது. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் மொரோக்கோவில் உள்ள அனைத்து மெழுகுவர்த்திகளும் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு அரண்மனை இதுதான் சொர்க்கமா என்று நம்பும்படி கண் கொள்ளாகாட்சியாக ஜொலிக்குமாம். அந்நாட்களில் மொத்த மக்க ளுக்கும் சிறப்பான உணவு தகுதிக்கேற்ப வழங்கப்படுமாம். சாதியன்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மொரோக்கோவை ஆண்ட அலாவோயிட் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் என்பவர் அனைத் தையும் பிரித்து தனது தலைநகர் மெக்னெசில் கட்டிய புதிய அரண்மனைக்கு எடுத்துச் சென்றாராம். தற்போது இந்த அரண்மனை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இவரால் நிறைய கட்டிடங் களும், ஆடம்பரமான வாழ்க்கை முறையாலும் இராணுவ செலவினங்களாலும், சிறப்பான ஒற்றர்களி ன் ஊதியங்களாலும் அரசு கஜானா விரைவில் காலியாகியது. கிறிஸ்தவ நாடாகவே இருந்த மொரோ க்கோவில் அதிகமான ஸ்பெயின் மற்றும் போர்ச் சுகீசியர்கள் இருந்தார்கள். அவர்களைக் கொண்டே மொரோக்கோவின் பொருளாதாரம் இருக்கிறது என்பதை அல் மன்சூர் நன்கறிவார். மொரோக்கோவில் குறிப்பிட்ட அளவில் தங்கம் சுரங்கம் மூலமாக கிடைத்தது. இதனால் ட்ரான்ஸ் சஹாரன் தங்க வியாபாரத்தில் முனைப்பு காட்டினார். அஹ்மத் அல் மன்சூர் இங்கிலாந்துடன் நட்புறவிலும் இருந்தார். அமெரிக்காவிலும் ஒரு மெஹ்தி தோன்றி இஸ்லாமை வளப்படுத்துவார் என்று கூறினார். இவருக்கு மருத்துவராக இருந்த ஃப்ரான்சைச் சேர்ந்த அர்னூ ல்ட் டி லிஸ்லி என்பவரும், ஈடியன்னீ ஹூபெர்ட் டி ஓர் லியன்சும் பின்னாளில் ஃப்ரான்ச் திரும்பி அரபுக் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றினார்கள்.
ஆப்பிரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசாக மேற்கில் சொங்காய் பேரரசு இருந்தது. 1590 ல் அங்கு நடந்த உள்நாட்டுக் கலவரத்தை பயன்படுத்தி இஸ்லாமியராக மார்க்கம் மாறியிருந்த ஸ்பெயினின் ஜுடார் பாஷாவின் தலைமையில் 4,000 வீரர்களை சஹாரா பாலைவனம் கடந்து அனுப்பினார். 40,000 வீரர்களுடன் அதை எதிர்கொண்ட சொங்காய் பேரரசு சாதியன் பயன்படுத்திய வெடிப்பொருள்களால் சிதறியது. அஹ்மத் அல் மன்சூரின் படைகள் சொங்காயின் நகரங்களான டொண்டிபி, டிம்புக்டு, ஜென்னி மற்றும் தலைநகர் காவ் ஆகியவற்றைக் கைப்பற்றியது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நகரங்களைப் பாதுகாக்க ஆட்களுக்கும், பொருள்களுக்கும் நீண்ட தொலைவு சஹாரா பாலைவனத்தை கடக்கும்படி இருந்ததால் விரைவில் அந்நகரங்களை விட்டு திரும்பினார். இவரது ஆட்சியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அஹ்மத் முஹம்மது அல் மக்கரி, அப்த் அல் அஜீஸ் அல் ஃபிஷ்டலி, அஹ்மத் இப்ன் அல் காதி மற்றும் அல் மஸ்ஃபிவி ஆகியோர் இருந்தார் கள். 1603 ல் ஏற்பட்ட ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு அஹ்மத் அல் மன்சூர் இறந்து போனார். அவரது உடல் மொரோக்கோவின் சாதியன்கள் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.
அஹ்மத் அல் மன்சூருக்குப் பிறகு, அவர் மகன் ஸிடான் எல் நாசிர் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த பின் பெரும் இழப்புகளைச் சந்தித்தார். பல பகுதிகளில் உள்நாட்டு கலவரங்கள் நடந்தது. அனார்சி நகரத்தின் அதிகாரம் போனது. சாலி நகரமும் பிரிந்து சுதந்திரமானது. உள்நாட்டு கலவரங்கள் தொடர்ந்து தெற்கில் அஹ்மத் இப்ன் அபி மஹல்லி என்பவராலும், சிடி அல் அயாச்சி என்பவரால் வடக்கிலும் நடந்தது. ஸ்பெயினும் 1610 ல் லராச்சி மற்றும் அல் மஃமுரா நகரங்களைக் கைப்பற்றியது. சிறிய நாட்டுத்தலைவர்களான முஹம்மது அல்குவாஸிர், யூசுஃப் பிஸ்கைனோ ஆகியோருடன் நட்பாகப் பழகினார். இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் 1610,1613, 1615 ஆகிய ஆண்டுக ளில் ஜான் ஹாரிஸ்ஸன் என்பவரை தூதுவராக அனுப்பி ஆங்கில கைதிகளை ஸிடான் எல் நாசிரிடம் விடுதலைச் செய்யச் சொல்லி அழைத்துச் சென்றார். தொடர்ந்த உள்நாட்டுப் போரால் தனது மொத்தப் பொருட்களையும் ஒரு கப்பலில் ஏற்றி இடம் மாற்றினார். ஆனால் கப்பல் கேப்டன் அவைகளைத் திருடி கப்பலை ஸ்பெயினுக்கு எடுத்துச் சென்று எல் எஸ்கோரியல் நகரத்தில் விற்று விட்டான்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அபு மர்வான் அப்த் அல் மாலிக் இரண்டாம் இப்ன் ஸிடன் இருந்தார். இவர் இரண்டாம் அப்த் அல் மாலிக் என்று அழைக்கப்பட் டார். ஃப்ரான்சின் ஐசக் டி ரஸில்லி மொரோக்கோ மீது படையெடுத்ததால், அவருடன் இரண்டாம் அப்த் அல் மாலிக் ‘ஃப்ரான்கோ மொரோக்கன் போர் ஒப்பந்தம்’ என்று ஓர் ஒப்பந்தைச் செய்து கொண்டார். இதனால் ஆட்சியின் அதிகாரத்தில் ஃப்ரான்சுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இவரைப் பற்றி மேலதிக விவரம் ‘மலெய் அப்தல மெலிக்’ என்று ஜான் ஹாரிஸ்ஸன் 1633ல் எழுதிய புத்தகத்தில் மட்டுமே உள்ளது. அடுத்து 1631 லிருந்து 1636 வரை அல் வலீத் பென் ஸிடான் என்பவர் மொரோக்கோவின் சுல்தானாக இருந்தார். இவர் ஃப்ரான்சின் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டார். பின்னர் முஹம்மது அஷ் ஷெய்க் அஸ் ஸெகிர் என்பவர் சுல்தான் ஆனார். 1640 ல் குடைந்து உருவாக்கப்பட்ட இவரது ஓவியம் ஒன்று உள்ளது. இவரைப் பற்றியும் அவ்வளவாக விவரம் இல்லை. இறுதியாக அஹ்மத் அல் அப்பாஸி என்ற சுல்தானுடன் சாதியன்கள் ஆட்சி முடிவுற்றது. அஹ்மத் அல் அப்பாஸி இறந்த பிறகு, மிச்சமிருந்த ராஜகுடும்ப உறுப்பினர்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அலாஓயிட் என்பவர்களின் புதிய ஆட்சியாக முலாய் அல் ராஷித் ஆட்சிக்கு வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக