வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 1

சிலுவைப் போர்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஆதாரனமான பதிவுகள்:                                                                                                          தி கன்னிபாலிசம் அண்ட் ப்ளட்பாத்ஸ் ஆஃப் தி க்ருசேடர்ஸ்

 இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்ற இந்த தலைப்பு ஏதோ புதிது என்று நினைக்காதீர்கள். ஆராய்ந்து ஆராய்ந்து அலுத்துப் போய் சிலுவைப் போரினால் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை அறிந்து மேற்கத்தியர்களே ஒப்புக் கொண்ட வாக்குமூலம் அது. முஸ்லீம்கள் மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமாய் மத்திய ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீதே, எங்கிருந்தோ கண்டம் தாண்டி வந்த கிறிஸ்தவர்களே நடத்திக் காட்டிய கொடுமை அது. 2001 ல் அமெரிக்காவை ஆண்ட ஜார்ஜ் புஷ் என்னும் காட்டுமிராண்டி, அரபு மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக மீண்டும் சிலுவைப் போரைத் தொடங்குவோம்’ என்றான். அட வல்லரசு நாட்டின் அறிவே வளராமல் போன மூடனே. நாகரீககாலத்தில் நாயைவிட கேவலமாக சிந்தித்த மடையனே. ஒரு பெண்ணிடம் நிர்வாணமாகு என்று சொன்னால் எந்தளவு பதறிப்போவாளோ, அந்தளவு உலக மக்களிடம் சிலுவைப்போர் என்று சொன்னால் பதறிப்போவார்கள். ஆம் அதன் பாதிப்புகள் அப்படி. பிறகு, மிகவும் கஷ்டப்பட்டு அமெரிக்க அரசு அந்த வார்த்தையை நீக்கிவிட்டு போர் என்று மாற்றியது. ஆனாலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் போர் சிலுவைப்போரின் கொடூரத்தைத்தான் காட்டியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பழங்கால அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் இன்னும் அவர்கள் மாறவில்லை என்று தான் உலகத்துக்குக் கூறினார்கள். உலக சரித்திரத்தில் இதுவரை நடந்த எந்த இனப்போர், மதப்போர்களிலும் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சிலுவைப் போர்களில் சிந்திய ரத்தம், கூட்டுக் கொலை, கற்பழிப்பு, காட்டுமிராண்டித்தனம் நடந்ததில்லை. அதைவிடக் கொடுமை இந்த கொடூரப்போருக்கு ‘புனிதப் போர்’ (HOLY WAR) என்று மாற்றமுடியாத பெயர் சூட்டி உலகம் முடியும் வரை அவமானத்தைத் தேடிக் கொண்டார்கள்.
மேற்கத்திய சிலுவைப் போராளிகள் ஆசிய மைனர், மத்திய ஆசியா, மெடிட்டரேனியன் கரை அரபுகளையும், யூதர்களையும் பிணங்களாக்கி ரத்தத்தில் ஊற வைத்தார்கள். சிலுவைப் போராளிகள் அனைவரையுமே அரபுகளாக கணக்கிட்டு (அரபு மண்ணில் வாழ்ந்த கிறிஸ்தவ, யூதர்களையும் சேர்த்து) ‘அரபுகளைக் கொல்லுங்கள் புனித மண்ணைக் கைப்பற்றுங்கள்’ என்று கோஷமிட்டுக் கொன்றார்கள். கிறிஸ்தவ போதகர் பால் ஜான்சன் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி’ என்ற புத்தகத்தில் பல தகவல்களை பதித்துள்ளார். பைஸாந்தியப் பேரரசர் முதலாம் அலெக்சியஸ் ஏதோ கிறிஸ்தவர்கள் அதிகப்படியான கொடுமையில் இருப்பதாக கற்பனை கலந்து போப் இரண்டாம் அர்பனை படை அனுப்ப வேண்டினான். முஸ்லீம் ஆட்சியாளர்கள் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் வரி வசூலித்தார்கள். முஸ்லீம்கள் ஆட்சியில் முஸ்லீமல்லாதவர்கள் இராணுவப் பணிக்கு நிர்பந்தப் படுத்தப்படுவதில்லை. அதேநேரத்தில் முஸ்லீம் இராணுவம் அவர்களுக்கும் பாதுகாப்பைக் கொடுத்தது. அடுத்து முஸ்லீம் மக்கள் கண்டிப்பாக ஜக்காத் என்னும் வரியை செலுத்தி ஆகவேண்டும். மேலும் புனித தலங்களில் யூத, கிறிஸ்தவ மக்கள் வழிபட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகாலமாக இருந்து இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இது, முழுக்க முழுக்க உள்நாட்டுப் பிரச்சினை. அந்த மேதாவி போப் அர்பன் இத்தாலியின் பியாசென்ஸா நகரில் அவசர அவசரமாக அனைத்து மேற்கு ஐரோப்பிய நாட்டு மன்னர்களையும் அழைத்து பெரும் பணம் திரட்டி அழிவின் ஆரம்பத்தை சிலுவைப் போராக துவக்கினான். மேற்கத்திய மன்னர்கள், தலைவர்கள், வணிகர்கள் ஆகியோர் அரசியல், இராணுவ, வாணிபக் காரணங்களில் ஏதோ ஒன்றை கணக்கில் வைத்து வளமான புதிய மண்ணை நோக்கி புனிதப் போருக்கு கிளம்பினார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போப் இரண்டாம் அர்பன் ஒன்று திரட்டி 1095 நவம்பரில் புகழ்பெற்ற மதவெறி உரையை நிகழ்த்தினான். எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்தில் தேனும், பாலும் ஓடுகிறது என்றான். பூமியில் கிறிஸ்தவர்களின் சொர்க்கம் என்றான். மொத்த கூட்டமும் “தியூ லெ வ்யூல்ட்” (DIEU LE VEULT) என்று வெறி பிடித்துக் கத்தியது. 476 ல் ரோமப் பேரரசு வீழ்ந்த பின் பாலஸ்தீனை நோக்கி மேற்கத்திய கிறிஸ்தவர்களின் மாபெரும் முதல் படையெடுப்பு இது. 200 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் போராக ஒன்பது முறையும், சிறு தாக்குதல்களாக பல முறையும் நடத்தப்பட்டது. முதல் சிலுவைப் போர் 1095-1099, இரண்டாவது 1147-1149, மூன்றாவது 1189-1192, நான்காவது 1198-1204, குழந்தைகள் சிலுவைப் போர் 1212, ஐந்தாவது 1217-1221, ஆறாவது 1228-1229, ஏழாவது 1248-1254, எட்டாவது 1270, ஒன்பதாவது 1290 லும் நடந்தது. உலகில் அரபு மற்றும் இஸ்லாமிய சக்திகளை வளர விடக்கூடாது என்று மிக அற்புதமாகத் திட்டமிட்ட இந்தப் போர்கள் பல பெயர்களில் 17 ம் நூற்றாண்டு வரை நடந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் 2001 பேச்சின் பிரகாரம் கணக்கிட்டால் 21 ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் மேற்கத்தியர்களும், அமெரிக்கர்களும் இன்னொரு சலாவுத்தீன் அய்யூபு உலகில் தோன்றுவதை விரும்பவில்லை. சரித்திரத்தை ஆழ்ந்து கவனித்தால் இதனால் தான் ஆப்பிரிக்காவை ஒன்றுபட நினைத்த உகாண்டாவின் ஈத் அமீன், லிபியாவின் மாம்மர் கடாஃபி, அரேபியாவை ஒன்றுபட நினைத்த ஈராக்கின் சதாம் ஹுசேன் ஆகியோர் ஏதோ ஒரு காரணம் கூறி கொல்லப்பட்டார்கள். பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகளைக் கொல்லும் ISIS அமைப்பு உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல என்பது உலகின் மூலை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் தெரியும். இவைகளை ஒரு முஸ்லீம் தீவிரவாத கூட்டம் செய்வது போல் சித்தரிக்கப்படுகின்றன. எந்த மதத்தினராக இருந்தாலும் சக மனிதனை தீவிரவாதத்தின் பேரில் கொல்பவன் (போரல்லாமல்) முஸ்லீமல்ல என்பதை அறிந்தவன் எப்படி தீவிரவாதம் செய்வான். பின் லாடன் செய்தது கூட தீவிரவாதம் அல்ல. ரஷ்யாவுக்கு எதிராக பின் லாடனும், அமெரிக்காவும் நண்பர்களாக இருந் தார்கள். நண்பர்கள் பிரிந்து அடித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளுடன் சேர்ந்து தீவிரவாதம் என்று பெயர் சூட்டினால் சூட்டிக் கொள்ளட்டும். சிலரின் வாய்கள் என்ன சுத்தம் செய்தாலும் சுத்தமாகாது அது அவர்களின் பிறப்பின் சாபக்கேடு அல்லது உணவுமுறைப் பழக்கம்      நாற்றத்துடன் தான் இருக்கும்.
இந்த சிலுவைப்போருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டன. குறிப்பாக போப் இரண்டாம் அர்பனுடன் ஃப்ரான்ஸ் கலந்து கொண்டது. ஃப்ரான்ஸ் “கெஸ்ட டெய்பெர் ஃப்ராங்கோஸ்” (ஃப்ராங்குகள் இறைவனால் வழங்கப்பட்ட கருவி) என்று முழக்கமிட்டுக் கொண்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள், ஸ்காட்லாந்து, வெல்ஷ், ஐரிஷ், இத்தாலியர்கள், ஜெர்மனி, ஆஸ்ட்ரியங்கள், ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள், நார்மன்கள், பெல்ஜியம், டச்சுக்காரர்கள், ஸ்காண்டிநேவியன்கள் மற்றும் ஸ்விஸ்கள் கலந்து கொண்டார்கள். இந்த சிலுவைப் போரில் இராணுவத்தின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொண்டார்கள். மேலும், ராஜாக்கள், சிறு மன்னர்கள், சிறப்பானவர்கள், நிலப்பிரபுக்கள், பாதிரியார்கள், துறவிகள், இராணுவத் தலைவர்கள், இராணுவ வீரர்கள், புத்திசுவாதீனமில்லாதவர்கள், பக்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், தீயவர்கள் என்று அனைத்துத் தரப்பும் கலந்து கொண்டன. மதவெறியூட்டப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் என்று யாவரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக ஃப்ரான்சின் ஏமியன் நகரத்தைச் சேர்ந்த பியர்ரி லெர்மிட் (பீட்டர் தி ஹெர்மிட்) என்ற மதத்தலைவனும் கலந்து கொண்டான். இவன் ஒரு மனநோயாளி போல் தோற்றமளிப்பான். காலில் பாதணி கூட அணியாமல் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருப்பான். தலை முடியால் கழுத்து, காதுகளை மறைத்திருப்பான். சிரைக்காத தாடியை மார்புக்கு கீழ்வரை வளர்த்திருந்தான். ஹெர்மிட் பேச்சுத்திறனில் மிகவும் வல்லவன். இவன் பேச்சைக் கேட்டவர்கள் இவனை “க்யோ க்யோ’ (லிட்டில் பீட்டர்) என்றார்கள். பேசிப்பேசி மக்களிடம் நன்றாக மதவெறியைத் தூண்டியிருந்தான்.
போப் இரண்டாம் அர்பன் இந்த புனித போரில் கலந்து கொள்ளும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே வைத்துள்ள பழைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அவர்களின் பாவங்கள் துடைத்தெறியப்படும். சொர்க்கத்தில் அவர்களுக்கு தனி இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கவர்ச்சிகரமாகப் பேசி 160,000 பேரைத் திரட்டினான். ரோமர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஒட்டுமொத்த மேற்கு ஐரோப்பாவும் முதல்முறையாக கிழக்குப் பகுதியை நோக்கி கிளம்பின. இந்த ஐரோப்பிய கிறிஸ்தவ மதவெறியர்கள் நடத்திய கொடூரத்தைக் கண்டு சகிக்காமல் இயற்கையே பயங்கரமான பூகம்பத்தையும், குலை நடுங்கும் நிலநடுக்கத்தையும், ப்ளேக் நோயையும் அப்போது சிரியா மற்றும் அரபு தேசங்களில் நிகழ்த்தியதாக சொல்லப்பட்டது.

1 கருத்து: