புதன், 19 ஆகஸ்ட், 2015

லிபியா வரலாறு 3

பின்வரும் காரணங்களுக்கு அவர் ஒத்துப்போக மறுத்ததே மேற்க்குலகினர் அவரை அடித்துக் கொல்ல காரணமாகியது.
ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் ரிசர்வ் பேங்கிங் கார்டெல்லின் கட்டளையை ஏற்க மறுத்தார்.
மொத்த ஆப்பிரிக்காவுக்கும் 400 மில்லியன் டாலரில் சொந்த சாட்டிலைட் நிறுவ தயாரானார். அதில் 300 மில்லியன் லிபியா செலவிடவும் முடிவெடுத்தார். இதில் அடுத்தவர்களுக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம். ஆப்பிரிக்கா கண்டம் வருடத்திற்கு 500 மில்லியன் டாலர் ஐரோப்பிய மேற்கு நாடுகளுக்கு சாட்டிலைட் பயன்பாட்டிற்கு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா சொந்தமாகத் தொடங்கினால் ஐரோப்பிய பொருளாதாரம் தடைபடும்.
ஆப்பிரிக்கா மானிட்டரி ஃபண்ட் இனி ரோத்ஸ்சைல்ட் சென்ட்ரல் வங்கியிடம் கடன் பெறாது. தங்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மூலம் சொந்த கரன்சியை உருவாக்கிக் கொள்ளும். வட்டி இல்லை
மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தின் எண்ணெய் வளத்தையும் லிபியா சொந்தமாகக் கண்காணிக்கும். மேற்கத்தியர்களின் தலையீடு போய்விடும்
தன் நாட்டு எண்ணெய் வளத்திலிருந்து ஆப்பிரிக்கா கண்டத்தை ஐரோப்பிய அதிகாரத்திலிருந்து அனைத்து விஷயங்களிலும் துண்டித்து விட நினைத்தார்.
1960 களில் லிபிய பாலைவனத்தில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட போது, கூடவே தரமான இயற்கை நீர் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நீர் வளம் லிபியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். இதனால் பூமிக்கு அடியிலேயே குஃப்ரா பேசின், சிர்ட் பேசின், மொர்ஸுக் பேசின் மற்றும் ஹமதா பேசின் என்று பிரம்மாண்டமான நான்கு பெரிய ராட்சத பேசின் அமைப்புகளுக்காக 1984 ல் “கிரேட் மேன் மேட் ரிவர் ப்ராஜக்ட்” ஒன்றை 25 பில்லியன் டாலர் செலவில் முதல் கட்டமாகத் துவங்கினார். இந்த திட்டத்தால் 35,000 க்யூபிக் கிலோமீட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இது உலகின் மிகப்பெரிய சரித்திரத்துவம் வாய்ந்த திட்டம். இதில் லிபிய நிர்வாகத்தால் மூன்று கட்ட பணிகள் முடிந்து விட்டன. ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் க்யூபிக் மீட்டர் தண்ணீரை பாலவனத்திலிருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு வரமுடியும். ஒரு க்யூபிக் மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 3.75 டாலரில் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மொத்த தண்ணீரும் நைல் நதியிலிருந்து 200 வருடங்கள் கிடைக்கும் தண்ணீருக்கு ஈடாகும் என்று அறிஞர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இதனால் ஆப்பிரிக்கா கண்டம் வளமடைந்து விட்டால், ஐரோப்பிய நாடுகள் பின் தங்கி விடுமே என்ன ஒரு கேடு சிந்தனை.
சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் கையிலிருந்து ஐஸ் நழுவி விழுந்தாலே பார்த்து பரிதாபப்படும் நாம். ஒரு நாட்டு அதிபர் இறைவன் கொடுத்த சொந்த நாட்டு வளத்தை மொத்த கண்டத்திற்கும் வளம் கொடுக்க இருந்ததை ஈவு இரக்கம் இல்லாமல் சிதைத்து விட்டனர் மேற்குலகத்தினர். நேற்றுவரை தங்களுடன் ஐ.நா மற்றும் வெளிநாட்டு விழாக்களில் கை குலுக்கி மகிழ்ந்த ஒரு தலைவரை, அதுவும் கௌரவமற்ற முறையில் ஒரு பிக்பாக்கெட்காரன் போல் ஒரு அதிபரை கேவலப்படுத்தினார்கள். ஆம் இதுவும் ஒரு யூத, கிறிஸ்தவ தீவிரவாதம் தான்.
எந்த ஒரு உண்மையான லிபிய குடிமகனைக் கேட்டாலும் சொல்வான் தங்களுக்கு கடாஃபிதான் அதிபராக வேண்டும் என்று. அவர் ஒரு வேளை ஒழுங்கிணத்திலும், நட்பு பாராட்டுவதிலும் தடுமாறி இருக்கலாம். ஏன் ஜார்ஜ் புஷ் மகள் திருமணமாகாமல் ஆண் நண்பருடன் கேளிக்கைக்கு போனாரே, இங்கிலாந்து ராணியின் பேரன் ஹாரி இரவு விடுதியில் குடித்து கும்மாளமிட்டாரே அது மட்டும் சோஷலிசமா? கடாஃபி ஒரு நல்ல தலைவராக இல்லாமலும் இருக்கலாம். தெரியாமல் ஒரு சொட்டு தேனோ அல்லது நெய்யோ விரலில் விழுந்தால் நக்கித்தான் பார்ப்போம். ஆனால் ஒரு நாட்டின் அதிபர்களுக்கு கை முழுவதும் தேனோ, நெய்யோ நனைந்து கொண்டே இருக்கும். அதை நக்காமல் தவித்துக் கொள்பவர்கள் தான் ஈமான் உள்ள தலைவர்கள். மாம்மர் கடாஃபி தன் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். நானோ, நீங்களோ அவர் புறம் ஆதரவளிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரின் மரணம் இறைவனின் விருப்பம்.
லிபியாவின் அரசியல்வாதி மஹ்மூத் ஜிப்ரில் என்பவர், “யார் இந்த உள்நாட்டு கலவரத்தைச் செய்து பல அப்பாவி லிபிய மக்களின் உயிர்களைப் பறித்தார்களோ அவர்களுக்கு தெரியாது. இது மேற்கத்தியர்களின் வேலை என்று. கடாஃபி வீழ்ந்ததால் மொத்த லிபியாவும் வீழ்ந்ததென்று. ஆனால், லிபியா இப்போது தலைவன் இல்லாமல் தனித்து விடப்பட்டு விட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவன் சொந்தம் கொண்டாடுகிறான். இது எங்கே ஆப்பிரிக்காவின் இன்னொரு சோமாலியா ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது.” என்று கூறுகிறார்.
அமெரிக்க ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த, சர்வதேச பிரச்சினைகளின் மதிப்பீட்டாளர் பால் க்ரீக் ராபர்ட்ஸ் என்பவர், “வாஷிங்டன் கடாஃபியை விலக்கி விட்டது. அதே போல் காட்சியை சிரியாவிலும் நடத்த திட்டமிடுகிறது. மேலும், சீனாவை மெடிட்டரேனியன் கடல்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என்றும் நம்புகிறது. ஆப்பிரிக்காவின் எரிசக்தி துறையில் சீனாவின் பங்கு இல்லாமல் செய்வதற்கும் முயற்சிக்கிறது. இதை ஏற்கனவே அமெரிக்காவும், இங்கிலாந்தும் 30 ம் வருட ஆரம்பத்தில் செய்தன. கடாஃபிக்கு அமெரிக்கா வழங்கிய தண்டனை அவர் அமெரிக்க ஆப்பிரிக்க (AFRICOM) உத்தரவுக்கு பணியாததே. தற்போது இவர்கள் லிபியா உள்நாட்டு கலவரத்திற்கு வழங்கிய ஆயுதங்கள் பணிமுடிந்து ஆப்பிரிக்க தீவிரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளன. லிபியா அம்மக்கள் சிலரின் தவறான முடிவினால் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கடாஃபி செய்து வைத்திருந்த நன்மைகள் போய் எங்கு பார்த்தாலும் வெடி, வெடி என்று நிம்மதியை இழந்து விட்டார்கள்.” என்று கூறியுள்ளார். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துவிட்டு பதவியை விட்டுப் போகும் போது 'ஸாரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போய்விட்டான். ஆனால், சதாம் ஹுசெய்னுக்கும், மாம்மர் கடாஃபிக்கும் வாய்ப்பிருந்தும் 'ஸாரி' என்னும் வார்த்தை சொல்லாமலே போய்விட்டார்கள்.
இன்னும் நிறைய அரசியல்வாதிகளும், நலம் விரும்பிகளும் லிபியாவின் உண்மைகளை தினசரி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னவொன்று கடாஃபியுடன் தொலைந்து போன லிபிய மக்களின் நல்வாழ்வு திரும்ப கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக